<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9662309</id><updated>2012-02-02T07:20:16.307-08:00</updated><title type='text'>கமகம்</title><subtitle type='html'>Classical Music</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://classical-music-review.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://classical-music-review.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>லலிதாராம்</name><uri>http://www.blogger.com/profile/01372586935352216447</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>34</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9662309.post-6610511041701357829</id><published>2006-12-12T05:05:00.000-08:00</published><updated>2006-12-12T05:21:45.628-08:00</updated><title type='text'>எம்.எஸ் - ஒரு வரலாற்றுப் பதிவு</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;எம்.எஸ். சுப்புலட்சுமியின் நினைவு நாளையொட்டி &lt;/span&gt;&lt;a href="http://www.varalaaru.com/default.asp?articleid=65"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வரலாறு&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#ff0000;"&gt;.காமில் வெளியான எனது அஞ்சலியை இங்கு வெளீயிடுகிறேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 12-ஆம் தேதி அன்று வந்த செய்தித்தாள்கள் அனைத்தும் முதல் பக்கத்தில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் பற்றிய செய்தியைத் தாங்கி வராமல், சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனை படைத்த 34-ஆவது சதத்தை வெளியிடாமல், 88 வருடங்கள் வாழ்ந்து வரலாறு படைத்த எம்.எஸ்-இன் மறைவைத் தெரிவித்தன. அன்றிலிருந்து, தூர்தர்ஷனிலும், பல தனியார் தொலைக்காட்சிகளிலும் எம்.எஸ்-இன் வாழ்வைப் பற்றிய நிகழ்ச்சிகள் வந்த வண்ணம் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_5apRgl1bU4g/RX6r2tWu1cI/AAAAAAAAAAM/jgkFJhMLUHY/s1600-h/ms.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5007628792058795458" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_5apRgl1bU4g/RX6r2tWu1cI/AAAAAAAAAAM/jgkFJhMLUHY/s400/ms.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;div&gt;கடந்த ஆண்டு மட்டும் எம்.எஸ்-இன் வாழ்வை மூன்று புத்தகங்கள் பதிவு செய்ய முயன்றன. அக்டோபர் 1986-ஆம் ஆண்டு, 'ஸ்ருதி' பத்திரிகை, எம்.எஸ்-இன் 70-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பல கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தது. இன்னும் எத்தனையோ பத்திரிகைகளில், நாளிதழ்களில், புத்தகங்களில் எல்லாம் பதிப்பித்தும் முழுமையடையாத சகாப்தமாக எம்.எஸ்-இன் வாழ்க்கை விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரவர் விருப்பம் போல எம்.எஸ்-இன் வாழ்வை பதிவு செய்துகொண்டிருக்கும் இன்றைய நிலையில், எம்.எஸ்-இன் வாழ்வு எதைப் பதிவு செய்தது என்பதைப் பார்ப்போம். எம்.எஸ்-இன் கச்சேரி அணுகுமுறை, அவரது ஆலாபனை, அவரது ஸ்வரப்ரஸ்தாரம், அவரது லய விந்யாசம், பக்திப் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது என்பதைப் பற்றியெல்லாம் அவருக்குச் சாதகமாகவும், பாதகமாகவும் பேசுபவர்களைக் காண முடியும். ஆனால், அவரது குரல்வளத்தை, கீர்த்தனைகள் பாடிய விதத்தை, பாடல்களில் இருக்கும் விஸ்ராந்தியைப் பற்றி ஒரு கருத்துதான் இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேல்கூறிய மூன்றில், குரல் வளத்தைப் பற்றி சொல்வது ஒரு பெரிய நதியில் கால் டம்ப்ளர் தண்ணீர் ஊற்றுவது போன்றதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;விஸ்ராந்தி என்பது ஒரு அனுபவம், அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆகையால், எம்.எஸ் பாடிய கீர்த்தனைகளைப் பற்றி ஆராய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கீர்த்தனை என்பது ராகம் என்னும் அரசன் தடங்கலின்றி உல்லாசமாய் பவனி வரத் தோதான ராஜபாட்டை. கீர்த்தனைகள் பாடும் பொழுது, ஒரே வரியை பல முறை வேறு வேறு விதமாகப் பாடுவார்கள். இதற்குச் சங்கதிகள் என்று பெயர். இந்த சங்கதிகளை ஒரு நல்ல பேட்ஸ்மேனின் திறமைக்கு ஒப்பிடலாம். ஒரு கிரிக்கெட் மேட்ச் நடக்கிறது, ஒரு திறமையான பேட்ஸ்மேன் ஒரு சுழற்பந்து வீச்சாளரை சந்திக்கிறார். முதல் பந்து 'குட்-லெங்ந்தில்' விழுகிறது, நமது பேட்ஸ்மெனின் கால்கள் பந்தை நோக்கி துரிதமாகச் சென்று மிட்-ஆனுக்கு மேல் பந்தைத் தூக்கி அடிக்கின்றன. விளைவு - 4 ரன்கள். அடுத்த பந்தும் அதே இடத்த்ல் விழுகிறது, ஆனால் இம்முறை லாங்-ஆனில் ஒருவர் இருக்கிறார். நமது ஆட்டக்காரர் சற்று நகர்ர்ந்து காலியாக இருக்கும் 'பாயிண்ட்' திசையில் 'கட் செய்கிறார். விளைவு - 4 ரன்கள். இம்முறை டீப்-பாயிண்ட் இருக்கிறது, பந்து அதே இடத்தில் விழுந்து வருகிறது, பேட்ஸ்மேன் பந்து தன்னை கடக்கும் வரைக் காத்திருந்து, விக்கட்-கீப்பரின் கையுரையில் செல்லும் முன் செல்லமாக தடவிக் கொடுப்பது போல பந்தை லேட்-கட் செய்கிறார். விளைவு - 4 ரன்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி ஒரே பந்தை வெவ்வேறு விதமாக பவுண்டரிக்கு அனுப்பி, தன் திறமையின் பரிமாணங்களை பேட்ஸ்மேன் வெளிப்படுத்தினாரோ, அதே போல, ஒரு ராகத்தின் பல பரிமாணங்களை வெளிக்கொணர்வதே சங்கதிகளின் வேலை. காம்போஜி ராகக் கிருதியான 'ஓ ரங்க சாயி' என்ற பாடலின் பல்லவியை எம்.எஸ் பாடும் விதத்தைக் கேட்டால், நான் கூறிய 'cricket analogy' புரியும். 'ஓ ரங்கசாயி' என்ற வரியில் 'ஓ' என்ற சொல் (எழுத்து) மட்டும் இரண்டு களை ஆதி தாளத்தின் 3 இடங்களுக்கு வரும். அந்த ஒரு எழுத்தை முதலில் காம்போஜியின் சில ஸ்வரங்களில் மட்டும் பாவவிட்டுப் பாடுவார். அடுத்த சங்கதியில் முன்னல் பாடிய ஸ்வரங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று அன்புடன் அணைத்துக் கொள்ளும். அடுத்த சங்கதியில் வேறு சில ஸ்வரங்கள் சேர்ந்து கொள்ளும். அடுத்த சங்கதியில் காம்போஜியின் மொத்த உருவம் லேசாக பவனி வர ஆரம்பிக்கும், இப்படி படிப்படியாய் வளர்ந்து வளர்ந்து, 'ஓ ரங்க சாயி' என்ற வரி சில மின்னல் வேக ப்ருகாக்களுடன் காம்போஜி ராகத்தை ரோலர் கோஸ்டரில் இட்டுச் செல்லும். பேட்ஸ்மெனின் ஒவ்வொரு அடியும் எப்படி பவுண்டரியில் முடிந்ததோ அதே போல எம்.எஸ்-இன் சங்கதிகள் எத்தனை எத்தனை இருப்பினும் அவற்றின் விளைவு, கேட்பவர் மனத்தில் மகிழ்ச்சிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;டெஸ்ட் மேட்ச் போன்ற 'ஓ ரங்க சாயிக்கும்', ஒரு நாள் போட்டி போன்ற, ஒரு களையில் அமைந்த 'திருவடி சரணத்திற்கும்' இடையில் எம்.எஸ் காட்டும் difference in approach-ஐ அவரது கச்சேரிகளில் தெளிவாகக் காணலாம். கீர்த்தனைகளில் உச்சரிப்பு, பாவம், சாஹித்ய சுத்தம் என்ற அனைத்து இலட்சணங்களையும் எம்.எஸ்-இன் கச்சேரிகளில் பார்க்க முடியும். சௌந்தர்ய லஹிரியில் ஒரு ஸ்லோகத்தைப் பாடிவிட்டு, எம்.எஸ் பாடும் 'ஹிரண்மயீம் லக்ஷ்மீம்' என்ற லலிதா ராகப் பாடல் கல்லையும் உருக்கிவிடும். இன்னும் 'சரோஜ தள நேத்ரி', 'யாரோ இவர் யாரோ', 'தேவி ப்ரோவ', 'குறையொன்றுமில்லை' என்று பல கீர்த்தனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நிலையில், எம்.எஸ்-இன் சுப்ரபாதம் போன்ற ஒலிநாடாக்களும், கல்கியின் பாடல்கள் கொண்ட ஒரு துக்கடா collection-உம், மீரா பஜன், சூர்தாஸ் பஜன் போன்ற ஒலிநாடாக்களும்தான் அதிகம் கிடைக்கின்றன. எம்.எஸ்-ஐப் பற்றி அடுத்த தலைமுறைக்கு இவை தவறான ஒரு அபிப்ராயத்தை உருவாக்கும் அபாயம் உள்ளது. வெறும் பஜன்களாலும், துக்கடாக்களாலும்தான் எம்.எஸ் உலகப் புகழ் பெற்றார் என்ற எண்ணம் பரவினால் கூட வியப்பதற்கில்லை. 'ராகம் தானம் பல்லவி' கொண்ட பல கச்சேரிகள், இன்றும் சில இசை ஆர்வலர்களிடம் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மஹா வைத்தியநாத சிவன் என்ற சங்கீத சிம்மம் 72 மேள கர்த்தாவையும் கொண்டு, அந்த ராகங்களின் பெயர்கள் சாஹித்யத்தில் வருமாறும், ஆழ்ந்த அத்வைத கருத்துக்களுடனும், 72 இராகங்களிலும் சிட்டை ஸ்வரங்களுடனும் ஓர் அரிய கிருதியை உருவாக்கினார். வெறும் புத்தகத்தில் மாத்திரம் இருந்த கிருதியைப் பாடம் செய்து, உலகுக்கு பரப்பும் வண்ணம் ம்யூசிக் அகாதமியின் துணையுடன் ஒரு ஒலிநாடாவை எம்.எஸ் கொடுத்திருக்கிறார். இந்த ஒலிநாடா இன்று எந்த கடையிலும் கிடைப்பதாகத் தெரியவில்லை. வெறும் ஒலிநாடாவில் கொடுத்ததோடு தன் வேலை முடிந்தது என்றெண்ணாமல், கம்பி மேல் நடப்பது போன்ற கடினமான அக்கிருதியை, தன் கச்சேரிகளில், 12 இராகங்கள் வீதம் பலமுறை பாடியிருக்கிறார் என்றும் தெரிய வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை ஷண்முகவடிவிடம் தொடங்கி, அரியக்குடி, செம்மங்குடி, முசிறி, வீணை தனம்மாள், பேகம் அக்தர் போன்ற ஜாம்பவான்களிடம் பாடம் கேட்கும் பெரும் பேரை எம்.எஸ் அடைந்தார் என்று கூறலாம். இதனாலேயே, இவரது கச்சேரிகளைப் பாதுகாப்பதும் வெளிக் கொணர்வதும் அவசியமாகிறது. அனைத்திந்திய அளவில் புகழ் பெற்றிருந்த எம்.எஸ்-இன் படாந்தரத்துக்கு ஈடு இணையாக வேறொருவரைக் காண்பது துர்லபம். இன்றைய நிலையில் அருணாசலக் கவி, முத்துத் தாண்டவர் போன்றோர்க்ளின் பல கீர்த்தனைகளை இழந்து நிற்கும் நமக்கு, எம்.எஸ்-இன் கச்சேரிகளின் திரட்டு ஒரு சிறந்த கருவூலத்தை உருவாக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய அனைத்து மொழிகளிலும் 70 வருடங்கள் பாடி எம்.எஸ் வைத்துச் சென்றிருக்கும் செல்வம், அவர் கச்சேரிகள் செய்து பணமாய் கொடுத்த தானங்களை எல்லாம் மிஞ்சு செல்வமாகும். அதைப் பாதுகாத்தல் நமது கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கட்டமாக, எம்.எஸ்-இன் ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷன் கச்சேரிகளை வெளியிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனம் இருந்தால் மார்க்கம் இல்லாமலா போய்விடும்?&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9662309-6610511041701357829?l=classical-music-review.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://classical-music-review.blogspot.com/feeds/6610511041701357829/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9662309&amp;postID=6610511041701357829' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/6610511041701357829'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/6610511041701357829'/><link rel='alternate' type='text/html' href='http://classical-music-review.blogspot.com/2006/12/blog-post.html' title='எம்.எஸ் - ஒரு வரலாற்றுப் பதிவு'/><author><name>லலிதாராம்</name><uri>http://www.blogger.com/profile/01372586935352216447</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_5apRgl1bU4g/RX6r2tWu1cI/AAAAAAAAAAM/jgkFJhMLUHY/s72-c/ms.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9662309.post-116431072365959787</id><published>2006-11-23T11:37:00.000-08:00</published><updated>2006-11-24T05:49:40.463-08:00</updated><title type='text'>வேண்டாத வதந்திகள்</title><content type='html'>&lt;span class="article"&gt; தீபாவளி என்றதும் மனதில் தோன்றும் விஷயங்களுள் தீபாவளி மலரும் நிச்சயம் இருக்கும். தீபாவளி மலர்கள், வாரப் பத்திரிகைளைப் போன்றோ செய்தித் தாள்களைப் போன்றோ கருதப்படாமல், பல குடும்பங்களில் பரம்பரைச் சொத்தாகும் பேறினைப் பெற்றவை. இந்த வருட விகடன் தீபாவளி மலரில் சில்பியும், 'கொண்டையராஜு' சுப்பையாவும் வரைந்திருக்கும் ஓவியங்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். வழவழ பேப்பரில் செம்பதிப்பாய்க் காட்சி தந்த 2006 விகடன் தீபாவளி மலரைக் கண்டதுமே முழுமையாகப் படித்துவிட வேண்டும் என்ற ஆவல் உண்டானதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அப்படிப் படித்த போது, 'சுவடுகள் பகுதியில் 'புதைந்து கிடக்கும் வரலாறு' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையைப் பார்க்க நேரிட்டது. கட்டுரையைப் படித்த போது அதிர்ச்சியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பல லட்சம் வாசகர்களைக் கொண்ட விகடன் பிரசுரித்த கட்டுரையைப் படிப்பவர்களை நினைத்தும், அவர்கள் குடும்பத்துப் பரம்பரைச் சொத்தில் சேர்ந்துவிடப் போகும் தீபாவளி மலரைப் படிக்கப் போகும் நாளைய சந்ததியினரை நினைத்தும் கவலை கொள்ள நேரிட்டது. 'ஓட்டை தோப்பில்' பாதி புதைந்திருக்கும் சிவலிங்கத்தை மாமன்னன் இராஜராஜனின் பள்ளிப்படையாகக் கருதி, அக்கருத்துக்கு வலுச்சேர்க்க வேண்டிய கட்டாயத்தால், பல உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் தாங்கி நிற்கிறது கட்டுரை. கட்டுரை கூறும் களத்திற்குச் சென்று, அங்கு கிடைக்கும் தூண் கல்வெட்டுக்கும், மாமன்னன் இராஜராஜ சோழரின் பள்ளிப்படைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்தவன் என்ற வகையில், கட்டுரையில் இருக்கும் தகவல் பிழைகளையும், அத்தகவல்களைத் தாங்குதளமாகக் கொண்டு எழுப்பப்படும் கருத்துகளில் உள்ள பிழைகளையும் எடுத்துச் சொல்வது கடைமையாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாமன்னன் இராஜராஜனின் கல்லறை இருக்கும் இடமாக உடையாளூரை அடையாளம் காட்ட, பால்குளத்தி அம்மன் கோயிலில் காணக் கிடைக்கும் உருளைத் தூண் கல்வெட்டையே ஆதாரமாகத் தருகிறார் ஓவியர் இராஜராஜன். அத் தூண்களைப் பற்றி எழுதும் போது, "1946களில் இந்த சமாதியை ஒட்டிக் கிடந்த இரண்டு உருளை கருங்கல் தூண்கள் உள்ளூர்வாசிகளால் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள உடையாளூர் பெருமாள் கோயிலில் எதற்கோ முட்டுக்கொடுக்கக் கொண்டு சென்று நிறுத்தப்பட்டு, இயலாமல் போனதில் வீதியில் கிடத்தப்பட்டது", என்கிறார் ஓவியர் ராஜராஜன். இக் கூற்றில் கொஞ்சம் கூட உண்மையில்லை. 1927-இல் இவர் கூறும் தூண் கல்வெட்டைப் படியெடுத்த தொல்லியில் அளவீட்டுத் துறை, தனது ஆண்டு அறிக்கையில், இத்தூண்கள் உடையாளூர் பெருமாள் கோயிலில் இருந்ததாகவே குறிக்கிறது. 1927-லேயே பெருமாள் கோயிலில் காணப்பட்ட கல்வெட்டை, 1946-இல் பெருமாள் கோயிலில் முட்டுக் கொடுக்க கொண்டு சென்றதாகக் கூறி, தன் கருத்துக்கு முட்டுக் கொடுக்கிறார் கட்டுரையாளர். இவர் கூறும் கல்வெட்டு இராஜராஜரின் பள்ளிப்படையை நமக்கு அடையாளம் காட்டுமெனில், இந்த ஆண்டு குழப்பங்களையெல்லாம் மன்னித்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இக் கல்வெட்டு கூறும் செய்திதான் என்ன? கல்வெட்டுச் செய்தி இதுதான் என்று எழுதினால், அது கல்வெட்டைப் படித்து எனக்குத் தோன்றிய எண்ணங்களோ என்று தோன்றலாம். அதனால், கல்வெட்டு வரிகளையே அளிக்கிறேன். இக்கல்வெட்டுக்கும் இராஜராஜரின் பள்ளிப்படைக்கும் தொடர்பேதும் உண்டா என்று கல்வெட்டு வரிகளைப் படிப்பவர்கள் உணர்ந்துவிடுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;1 ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவந சக்கரவர்த்திகள் ஸ்ரீகு&lt;br /&gt;2 லோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்ப&lt;br /&gt;3 த்திரண்டாவது ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்து&lt;br /&gt;4 எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீ&lt;br /&gt;5 சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்&lt;br /&gt;6 பெரிய திருமண்டப முன்(பி¦)லடுப்பு ஜீர்&lt;br /&gt;7 ந்நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி&lt;br /&gt;8 த்தார் பிடவூர் (பிடவூர் வேளான்) வேளா&lt;br /&gt;9 ன் அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்&lt;br /&gt;10 நாயகம் செய்து நின்ற ஜயசிங்ககுலகா&lt;br /&gt;11 ல வளநாட்டு குளமங்கல நாட்டு சா&lt;br /&gt;12 த்தமங்கலத்து சாத்தமங்கலமுடை&lt;br /&gt;13 யான் நம்பிடாரன் நாடறிபுகழன் இ&lt;br /&gt;14 வருடன் விரதங்கொண்டு செய்தார் இ&lt;br /&gt;15 வ்வூர் பிடாரகளில் ராஜேந்த்ரசோழனு&lt;br /&gt;16 தைய நாயகநான ஈசானசிவரும் தேவ&lt;br /&gt;17 நபயமாந அறங்காட்டி பிச்சரும்&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குறிப்பிட்டுள்ள முதற் குலோத்துங்க சோழரின் 42-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு, வரலாற்றுத் துறையில் ஈடுபாடுள்ளோருக்குப் பரிச்சயமான ஒன்றுதான். பல வருடங்களுக்கு முன், இக் கல்வெட்டை ராஜராஜரின் பள்ளிப்படையோடு இணைத்து எழுந்த கருத்துகளைத் தவறென்று டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மைய ஆய்வர்கள் கூறியுள்ளனர். 2004-இல் இப்பள்ளிப்படைச் செய்தி தினமலர், தினதந்தி முதலிய நாளிதழ்களில் மீண்டும் தலைகாட்டியது. அதனால், எனது நண்பர் திரு.ச.கமலக்கண்ணனும் நானும் மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தைத் தொடர்பு கொண்டு, அம்மையத்தின் இயக்குனர் முனைவர் இரா.கலைக்கோவனுடனும், ஆய்வர்கள் முனைவர் நளினியுடனும், இரா.இலலிதாம்பாளுடனும் கள ஆய்விற்குச் சென்றோம். அக்கள ஆய்வில் கண்டு தெளிந்த உண்மைகளையே, சில மாதங்கள் கழித்து வரலாற்றுக்காக ஒரு மாத மின்னிதழ் (www.varalaaru.com) தொடங்கிய போது 'உடையாளூரில் பள்ளிப்படையா?', என்ற தலைப்பில் கட்டுரையாக்கினார் முனைவர் கலைக்கோவன்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வெட்டைப் படிப்பவர்கள், இராஜராஜரான சிவபாதசேகரரின் பெயரில் ஒரு மண்டபம் இருந்ததையும், அம்மண்டபத்தின் முன்பிருந்த பெரிய திருமண்டபம் பழுதடைந்ததால் (ஜீர்ந்நித்தமையில்) பிடவூர் வேளான் அரிகேசவனான கச்சிராஜன் திருப்பணி செய்து வைத்தார், என்ற செய்தியையும் உணர்ந்திடுவர். கல்வெட்டின் எந்த வரியிலும் பள்ளிப்படை என்ற சொல்லாட்சியோ, இராஜராஜரின் மரணத்தைப் பற்றிய குறிப்போ இல்லை. "1986-இல் குடந்தை சேதுராமன் அவர்களால் இக் கல்வெட்டு இனம் காணப்பட்டது", என்று கூறும் ஓவியர் ராஜராஜன், அதன் பின் அக் கல்வெட்டைப் பற்றி வந்த செய்திகளைப் படிக்கவில்லை போலும். பதினேழு வரி கல்வெட்டை "7 வரி கல்வெட்டு" என்று அவர் எழுதியிருப்பதை நோக்கினாலே, "இக்கல்வெட்டின் மூலமாகவே சோழ மாமன்னனின் பள்ளிப்படை வீடு குறித்த செய்தி உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது", என்ற அவர் கூற்றில் எவ்வளவு உண்மை இருக்க முடியும் என்று உணரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாத பள்ளிப்படையை அடையாளம் கண்டுவிட்ட கட்டுரையாளர், இன்று அப்பள்ளிப்படை இல்லாமல் போனதற்கும் சுவாரசியமான கதைகள் கூறுகிறார். பழையாறையின் இன்றைய அடையாளமாக 'இடிந்து சரிந்த பழைமை மாறாத கோயில்களைக்' கூறும் திரு.ராஜராஜன், மாமன்னன் இராஜராஜரின் பள்ளிப்படைக் கோயிலில் மட்டும் எந்த 'இடிந்து சரிந்த கட்டுமானத்தையும்' காணாதது விந்தை. அப்படி காணமுடியாமல் போனதற்கான பழியை, பாவம்! மாறவர்மன் சுந்தரபாண்டியன் தலையில் போட்டிருக்கிறார். (கொட்டை எழுத்தில், ரத்த நிறத்தில் "பாண்டியர்" என்று build-up வேறு கொடுத்திருப்பது பெரும் கொடுமை.) 'சோழ வம்சத்தின் வேதபுரி' என்று கட்டுரையாளர் வர்ணிக்கும் பழையாறையிலேயே, இன்றும் காணக் கூடிய வகையில் ஒரு பள்ளிப்படை கோயில் இருப்பதை அவர் அறிந்திலர் போலும். மாமன்னர் இராஜேந்திரரால் அவரது சிற்றன்னைக்காக எழுப்பப்பட்ட பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை பழையாறையில்தான் இருக்கிறது. மாறவர்மன் சுந்தர பாண்டியன், "பழையாறை நகரை இடித்துத் தரைமட்டமாக்கி எரித்து முடித்தான். இப்படையெடுப்பின் மூலம் பழையாறை நகரத்து எல்லையில் இருந்த முதலாம் இராசராசனின் பள்ளிப்படை கோயிலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்க வேண்டும்." என்று கட்டுரையாளர் சொல்வது உண்மையெனில், பழையாறையில் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படையுட்பட, பல சோழர்காலக் கோயில்கள் இன்றும் நம்மிடையில் இருப்பது எங்கனம்? கங்கை கொண்ட சோழபுரம் வரை சென்று, சோழ தேசத்தை சூறையாடிய சுந்தர பாண்டியன், கோயில்களுக்கு எந்தச் சேதமும் விளைவிக்கவில்லை. கோயில்களைச் சிதைப்பது தமிழர் மரபன்று. தன் கருத்தை நிலை நாட்ட, பாண்டிய மன்னனை இவ்வளவு குறுகிய மனம் படைத்தவனாகச் கட்டுரையாளர் சித்தரித்திருக்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிப்படை குளறுபடிகளைத் தவிர, இராஜராஜரைப் பற்றி கொடுத்திருக்கும் தகவல்களிலும், சோழர் வரலாற்றைக் குறிக்கும் தகவல்களிலும் பிழைகள் மலிந்திருக்கின்றன. "இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா" போன்றவற்றையெல்லாம் இராஜராஜன் பத்தாம் நூற்றாண்டில் ஒரே குடையின் கீழ் ஆண்டதாகக் கூறுயிருப்பது முற்றிலும் தவறு. இவை, இராஜேந்திரரின் காலத்தில் பதினொன்றாம் நூற்றாண்டிலேதான் சோழர் படையெடுப்புக்கு உட்பட்டன. "கி.பி 1004-ம் ஆண்டு தஞ்சையில் பிரகதீஸ்வரர் கோயில் திருப்பணிகளை ராசராசன் மிகவும் திட்டமிட்டு ஆறே ஆண்டுகளில் கட்டுமான பணியை முடித்தான்", என்று கூறுபவரே அதற்கு முரணாக, "இன்றும் 21 நாட்டிய கரண சிற்பங்கள் பூர்த்தி ஆகாமல் உள்ளன", என்றும் கூறுகிறார். கட்டுரையாளர், தஞ்சை பெரிய கோயில் விமானத்தின் சாந்தார நாழியில் (இதை கோபுரத்தின் உட்பிரகாரம் என்கிறது கட்டுரை. கோபுரம் என்பது நுழை வாயில். 216 அடி உயரத்திற்கு ஓங்கி நிற்கும் கட்டிடம் விமானம்) அமைந்திருக்கும் நாட்டியக் கரணச் சிற்பங்களை ஆழ்ந்து நோக்கியிருப்பின், பூர்த்தியாகாதவை 27 சிற்பங்கள் என்று உணர்ந்திருப்பார். அத்துடன், இன்னும் பல இடங்களிலும் அக் கோயில் பூர்த்தியாகாததையும் உணர்ந்திருப்பார். "தஞ்சை பெரிய கோயில் திருப்பணிகள் நிறைவுறும் சமயம் ஏதோ காரணமாக ராசராசன் தஞ்சையை விட்டு வெளியேற முடிவெடுத்தான்", என்ற கருத்தை நிறுவ எந்த ஆதாரங்களையும் கொடுக்காதது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;திருவலஞ்சுழி, அப்பரும் சம்பந்தரும் மகிழ்ந்து பாடிய புண்ணிய பூமி. அங்கிருக்கும் சடைமுடிநாதர் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அனைத்துக் கோயில்களையும், மா.இராசமாணிக்கனார் ஆய்வு மையம் முழுமையாக ஆய்வு செய்தபோது, பல கள ஆய்வுகளில் கலந்து கொள்ளும் பேறு எனக்குக் கிடைத்தது. அதனால், திருவலஞ்சுழியைப் பற்றி நன்றாக அறிவேன். "திருவலஞ்சுழியில் 6-1-1015-ல் தனது தந்தையாரின் முதல் திவசத்தை ராஜேந்திரசோழன் நடத்தினான்", என்று பக்கத்திலிருந்து பார்த்தது போல கட்டுரையாளர் எழுதியிருப்பது வருத்தத்துக்குரியது. இராஜேந்திரரின் மூன்றாவது ஆட்சியாண்டில் 'தில பர்வதம் புக்கருளின' என்ற சொல்லாட்சி வரும் கல்வெட்டின் அருகிலேயே இருக்கும் இன்னொரு க்ஷேத்திரபாலர் கோயில் கல்வெட்டு, அதே ஆண்டில் இராஜராஜரும் ஆட்சியில் இருந்ததை (29-ஆம் ஆட்சியாண்டு) தெரிவிக்கறது. இதனால் 'தில பர்வதம் புக்கருளின' என்பதற்கான பொருள் 'திவசம் ஆகாது என்பது உறுதியாகிறது. உயிரோடு இருந்தவரைப் பிணமாக்கிய புண்ணிய காரியத்தைச் செய்திருக்கும் கட்டுரையாளர், "எட்டு பூக்களிட்டு பிண்டமளித்து கேந்திர பாலதேவருக்கு திருவடி சாத்தி வழிபட்டுள்ள செய்தி திருவலஞ்சுழி கல்வெட்டில் உள்ளது", என்று கூறியிருப்பது அப்பட்டம்மான பொய்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கிரிசாமி படையாச்சியாரின் நிலத்தில் இருக்கும் இலிங்கத்திற்கு அருகில் எந்தவித கோயில் கட்டுமானமும் கிடைக்காத நிலையில், "ராஜேந்திரசோழன் தனது தந்தையை உடையாளூர் அருகே நல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சிறந்த பள்ளிப்படை கோயிலை உருவாக்கினான்", என்று எப்படிக் கூறுகிறார்? பால்குளத்தி அம்மன் கோயில் கல்வெட்டு சுட்டுவது முதலாம் இராஜராஜரின் பள்ளிப்படை எனக் கொள்ளின், பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் தன் சிற்றன்னைக்குப் பள்ளிப்படை கட்டிய இராஜேந்திரர், "இருந்த சுவடு தெரியாமல்" அழியும் வகையிலா தன் தந்தையாருக்கு பள்ளிப்படை அமைத்திருப்பார்?&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றாய்வில் பல ஆண்டுகளாய் ஈடுபட்டு வரும் முனைவர் கலைக்கோவன், "பல ஊர்களில் பரவலாகக் கிடைக்கும் கைவிடப்பட்ட லிங்கத் திருமேனி போல்தான் பக்கிரிசாமி படையாச்சியாரின் நிலத்தில் இருக்கும் லிங்கமும் இருந்தது", என்கிறார். "ஜீவசமாதிக்கும், பள்ளிப்படை கோயிலுக்கும் சதுர பீடமே பயன்படுத்தப்படும்", என்பதெல்லாம் கட்டுக் கதையே அன்றி வேறொன்றுமில்லை. இன்று வழிபாட்டில் இருக்கும் பள்ளிப்படையல்லாத பல கோயில்களில் உள்ள லிங்கங்கள் சதுர பீடத்துடன் காணப்படுகின்றன. (உதாரணம் நாலூர் மாடக் கோயில்). பள்ளிப்படை கோயில்கள் என்று கல்வெட்டுகள் சுட்டும் கோயில்களை நோக்கின், அங்கிருக்கும் லிங்கங்கள் எல்லாமே சதுர பீடத்துடன் அமையாதிருப்பதை உணரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இராஜராஜரின் பெருமையை எடுத்துக் காட்ட வேண்டுமெனில், 'இராஜராஜன் திருநாள்' என்று அவன் இருந்த காலத்திலேயே கொண்டாடப் பட்ட "ஆவணி சதயம்" நாளைப் பற்றி உலகுக்குச் சொல்லலாம். 'புதைந்து கிடக்கும் வரலாற்றினை' வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டுமெனில், உத்திரமேரூர் கைலாசநாதர் கோயில், ஆறை வடதளி போன்ற வரலாற்றுச் சின்னங்கள் இன்றிருக்கும் சூழலைப் பற்றி எழுதலாம். அதை விடுத்து, இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறுவது, கல்வெட்டுகள் கூறுவது போல 'கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவம்' போன்றது. அதிலும் லட்சக் கணக்கான வாசகர்களைக் கொண்ட விகடன் பிரசுர வெளியீடாய் இப்படிப்பட்ட வதந்திகள் பரவினால், இன்று எவ்வளவுதான் முயன்றாலும் "தஞ்சை பெரிய கோயில் விமானத்தின் சிகரம் ஒரே கல்லால் ஆனது அல்ல" என்ற உண்மையை மக்கள் ஏற்க மறுப்பது போல, நாளை பல வதந்திகள் உண்மைகளாகிவிடும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9662309-116431072365959787?l=classical-music-review.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://classical-music-review.blogspot.com/feeds/116431072365959787/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9662309&amp;postID=116431072365959787' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/116431072365959787'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/116431072365959787'/><link rel='alternate' type='text/html' href='http://classical-music-review.blogspot.com/2006/11/blog-post.html' title='வேண்டாத வதந்திகள்'/><author><name>லலிதாராம்</name><uri>http://www.blogger.com/profile/01372586935352216447</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9662309.post-114836598467286765</id><published>2006-05-22T23:21:00.000-07:00</published><updated>2006-10-19T06:31:36.820-07:00</updated><title type='text'>சிகரத்தை நோக்கி... II</title><content type='html'>&lt;a href="http://www.varalaaru.com/images/May06/merku-nandhavanam.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://www.varalaaru.com/images/May06/merku-nandhavanam.jpg" border="0" /&gt;&lt;/a&gt; கிரீவத்திலிருந்துப் பார்க்க, சிவகங்கைக் குளமும், மேற்கிலிருந்த அழகிய நந்தவனமும், சரபோஜி அரண்மனையும், பல ஆண்டுகளாய் நிற்கும் மணிக்கூண்டும், எறும்புகள் போலத் தெரிந்த மனிதர்களும், அட்டையில் செய்த கட்டிடங்கள் போலக் காட்சியளித்த கோபுரங்களும், திருச்சுற்று மாளிகையும் கண்ட போது பாபநாசம் சிவனின் காம்போதி ராக பாடலான 'காணக் கண் கோடி வேண்டும்' என்ற பாடலைத் தானாகவே வாய் முணுமுணுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.varalaaru.com/images/May06/sivagangai.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://www.varalaaru.com/images/May06/sivagangai.jpg" border="0" /&gt;&lt;/a&gt;தஞ்சைக் கோயிலின் விமானத்தின் நிழல் தரையைத் தொடும் என்று நான் முன்னரே அறிந்திருந்த போதும், கிரீவத்திலிருந்தபடி தரையில் வீழ்ந்திருக்கும் பிரம்மாண்ட நிழலைக் கண்ட போது உள்ளக்குள் இனம் புரியா நிறைவு ஏற்பட்டது. நிழல் விழுமென்ற செய்தியை பலர் முன்பே கூறியிருப்பினும், அன்று தென்பட்ட பிரம்மாண்ட நிழலை புகைப்படமாய் கைது செய்து, உலகெங்கும் இணைய உலா வர வைக்கலாம் என்ற எண்ணமே அந்நிறைவுக்குக் காரணமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.varalaaru.com/images/May06/thiruchutru.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://www.varalaaru.com/images/May06/thiruchutru.jpg" border="0" /&gt;&lt;/a&gt; கிரீவத்தலிருந்து பிரிய மனமே வராத போதிலும், சிகரம் எங்களை அழைத்ததால், அரை மனதுடன் சிகரத்தை அடைந்தோம். அங்கு ஏற்கெனவே காத்திருந்த கிருபாசங்கருடன் சேர்ந்து பல படங்கள் கிளிக்கியபின், பிரம்மாண்ட கலசத்திலடியில் அனைவரும் அமர்ந்தோம். குழைவுக் குரலோன் கோகுல் இல்லாத சமயங்களில், இதைப் போன்ற நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நடப்பின் நான் பாடுவது வழக்கம். அன்றோ, சாரீரம் முழுவதையும் சளி அமுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. முனைவர் கலைக்கோவன் "பாடுங்க தம்பீ! இங்க பாடலைன்னா வேற எங்க பாடறது?" என்ற போதும் நா எழவில்லை. அந்த சமயத்தில் பத்மநாபனின் அற்புதக் குரல் ஆபேரி ராகத்தில் 'காதலாகி கழிந்துருகி கண்ணீர் மல்கி' என்று உருகி அனைவரையும் உருக்கியது. அப்பாடலின் முதல் வரியை அவர் பாடியதும், ஜனவரி 2005-இல் வெளியிட்ட இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழுக்காக முனைவர் கலைக்கோவனின் கட்டுரையே நினைவில் நிறைந்தது. அவரின் பல கட்டுரைகளை மிகவும் இரசித்துப் படித்திருக்கிறேன் எனினும், என்னை அக்கட்டுரை உணர்ச்சிவசப்பட வைத்தது போல வேறு கட்டுரைகள் வைத்ததில்லை என்றே கூற வேண்டும். பதநாபன் பாடிய பின் நானும் 'குனித்த புருவமும்' என்ற தேவாரப் பாடலை என் மனம் போன மெட்டில் பாடினேன். அதன் பின் இலாவண்யா காம்போதியில் 'தயாபரா மகேஸ்வரா' பாடினார். சூரியனின் மாலைக் கிரணங்கள் மங்கத் தொடங்குவதற்கு முன் தொல்லியில் அளவீட்டுத் துறையைச் சேர்ந்த திரு.மோகனின் உதவியுடன் 'குழுப் படங்கள்' எடுத்துக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.varalaaru.com/images/May06/nizhal.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://www.varalaaru.com/images/May06/nizhal.jpg" border="0" /&gt;&lt;/a&gt;பின்பு அவரின் உதவியுடனே கிரீவப் பகுதியிலிருந்த பூத கணத்தையும் தரிசித்தேன். சிகரத்தில் கொடியை நாட்டினால் அது அப்பூதத்தின் தலையில் இருந்த ஓட்டையில் அழகாய் உட்கார்ந்து கொள்ளுமாறு அமைக்கப் பெற்றிருக்கிறதாம். சிகரத்தின் மேல் இருந்த பேறு &lt;a href="http://www.varalaaru.com/images/May06/kodi-bhootham.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://www.varalaaru.com/images/May06/kodi-bhootham.jpg" border="0" /&gt;&lt;/a&gt;பாதி நேரம் என் சிந்தை என்னிடம் இல்லாததால், முக்கியமாய் புகைப்படத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்த சில விஷயங்களை பதிவு செய்யாமலே விட்டுவிட்டேன். அவற்றுள் ஒன்றுதான், விமானத்தின் சிகரம் பல கற்களால் ஆனது என்ற உண்மையை உணர்த்தும் படம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.varalaaru.com/images/May06/kalasam-group.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://www.varalaaru.com/images/May06/kalasam-group.jpg" border="0" /&gt;&lt;/a&gt;பார்ப்போம். பிழைத்துக் கிடந்தால், அடுத்த வாய்ப்பு என்று ஒன்று வாய்க்குமெனின், விட்டவைகளுள் பல நூற்றில் சிலவற்றையாவது மனதிலும் படத்திலும் பதித்து பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கிறேன். அவன் சித்தம் எப்படியோ? யாரறிவார்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9662309-114836598467286765?l=classical-music-review.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://classical-music-review.blogspot.com/feeds/114836598467286765/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9662309&amp;postID=114836598467286765' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/114836598467286765'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/114836598467286765'/><link rel='alternate' type='text/html' href='http://classical-music-review.blogspot.com/2006/05/ii.html' title='சிகரத்தை நோக்கி... II'/><author><name>லலிதாராம்</name><uri>http://www.blogger.com/profile/01372586935352216447</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9662309.post-114836518762964565</id><published>2006-05-22T22:59:00.000-07:00</published><updated>2006-05-23T02:31:39.796-07:00</updated><title type='text'>சிகரத்தை நோக்கி... I</title><content type='html'>தமிழர் கட்டிடக் கலையின் சிகரமாய் அமைந்திருக்கும் தஞ்சை இராஜராஜீஸ்வரத்தின் ஸ்ரீவிமானத்தைக் கண்ட பொழுதெல்லாம் உள்ளம் துள்ளும். என் பாட்டனின் சாதனை என்று நெஞ்சம் இறுமாப்பு கொள்ளும். கைலாயத்தை பூமியில் கொணரும் முயற்சியே அவ்விமானம் என்ற கூற்றினைக் கேட்கும் பொழுதெல்லாம், கைலாயம் இத்தனை அழகாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்க முடியுமா என்ற ஐயம் தோன்றும். தளத்துக்குக் தளம் மாறும் ஆர அமைப்பில் சாலைகள், கர்ணகூடுகள், பஞ்சரங்கள், கர்ணசாலைகள் இன்னும் பல சிறிய, பெரிய உறுப்புகளின் இணைப்பினை மனதில் பதித்துக் கொள்ள எத்தனை முறை முயன்றாலும், இறுதியில் உள்ளம் தோல்வியையே தழுவும். அந்த தோல்வியிலும் ஒரு சுகம் பிறக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி இறுதித் தேர்வு எழுதி முடிவுக்குக் காத்திருந்த வேளையில் பொழுது போக்க வேண்டி 'பழைய புத்தகக் கடையை' மேய்ந்த பொழுது கிடைத்த 'பொன்னியின் செல்வன்' நாவலின் பிரதி என் வாழ்வின் திருப்புமுனையாக அமையும் என்று யார்தான் நினைத்திருக்க முடியும்? வந்தியத் தேவனும், அருள்மொழிவர்மரும், ஆழ்வார்கடியானும் மனதிற்குள் ஒரு கற்பனை உலகை உருவாக்க, அவ்வுலகம் தஞ்சை ஜில்லாவில் இருப்பதாய் நினைத்து, கல்லூரியை தஞ்சையில் தேர்வு செய்யும் அளவிற்கு 'பொன்னியன் செல்வன்' என்னை பாதித்திருந்தது. தஞ்சைத் தரணியில் காலடி வைத்ததும், குந்தவை பிராட்டியார், சேந்தன் அமுதன், மாட மாளிகைகள் என்று என் கற்பனை உலகத்திற்கும் நிதர்சனத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாதது கண்டு உள்ளுக்குள் இழைகள் அறுந்து விழுந்தாலும், ஊரின் நடுவே கம்பீரமாய் வீற்றிருக்கும் இராஜராஜீஸ்வரமுடையார் கோயிலைக் கண்ட பொழுதிலேயே என் கற்பனை உலகிற்கு மீண்டுவிட முடிந்தது. கேரளாந்தகன் திருவாயிலையோ, இராஜராஜன் திருவாயிலையோ, விமானத்தின் அமைப்பினையோ, கல்வெட்டுச் செய்திகளையோ, சிற்பங்களின் சிறப்புக்களையோ அறியாத பொழுதும் உள்ளுக்குள் எழுந்த உவகைக்கு என்றும் குறைவும் இருந்ததில்லை. விமானத்தின் தெற்கிலும், வடக்கிலும் அமைந்திருக்கும் புல் வெளிகளில் அமர்ந்தபடி சிகரத்தை அண்ணாந்து நோக்கி மெய் மறந்த கணங்கள்தான் எத்தனை!&lt;br /&gt;&lt;br /&gt;இராஜராஜீஸ்வரமுடையார் கோயிலை ஒட்டி அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியான சீனிவாசபுரத்தில் இருந்த ஒற்றை அறை மாளிகையின் மொட்டை மாடியில் அமர்ந்தபடி ஸ்ரீ விமானத்தின் சிகரத்தையும், இரவு வேளையில் ஸ்தூபியின் மேலிருக்கும் விளக்கின் ஒளியால் மிளிரும் விமானத்தின் அழகையும் பார்த்தபடி கழித்த கணங்கள்தான் எத்தனை!&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரிப் படிப்பில் ஆண்டுகள் கரைய, ஆங்காங்கே கேட்ட/படித்த தகவல்களின் மூலம் இராஜராஜீஸ்வரத்தைப் பற்றி நிறைய அறிய முடிந்தது. அப்படி அறிந்த செய்திகளுள் 99 விழுக்காடு செய்திகள் இன்னும் சில ஆண்டுகளில் பொய்த்துப் போகும் என்று கணப் பொழுதும் நினைத்ததில்லை. அப்படி அறிந்த செய்திகளுள் ஒரு சரியான செய்திதான் தஞ்சை ஓவியங்களைப் பற்றியது. எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு கட்டுரையில், "தஞ்சை விமானத்தில் வரையப்பட்டிருக்கும் சோழர் கால ஓவியங்களை ஒவ்வொருவரும் சாவதற்குள் ஒருமுறையேனும் கண்டு விட வேண்டும்", என்று எழுதியிருந்தது என்னுள் ஆழமாய்ப் பதிந்தது. அன்று தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வருட காலம் கோயில் சிவாச்சாரியார்கள், ஊர் பிரமுகர்கள், தொல்லியல் அளவீட்டுத் துறையினராய் எனக்குத் தோன்றியவர்கள் என்று காண்போரையெல்லாம் நச்சரித்து, எப்படியாவது ஒருமுறை அவ்வோவியங்களைக் கண்டுவிட மாட்டோமா என்று ஏங்கிய நாட்கள்தான் எத்தனை! ஒரு முறை எப்படியோ அச்சாந்தார நாழிகளுள் நுழைய முடிந்துவிட்டாலும், இரண்டாவது தளத்தில் செதுக்கப்பட்டிருக்கும் பரத நாட்டியக் கரணங்களைக் காணக் கொடுத்துவைத்திருந்த கண்களுக்கு, முதல் தளத்திலிருந்த ஓவியங்களைக் காண முடியவில்லை. அழைத்துச் சென்றவர், "மூச்சுக் காத்து பட்டால் ஓவியங்கள் பாழாகிவிடும். மிக மிக முக்கியமான பிரமுகராய் இருந்தாலன்றி ஓவியங்களைக் காண முடியாது. நீங்கள் பிரதமராகவோ, அமைச்சராகவோ குறைந்த பட்சம் கலெக்டராகவோ வாருங்கள். ஓவியங்களைப் பார்க்கலாம்", என்றார். அந்நிகழ்வுடன் ஓவியங்களைக் காணும் முயற்சியைக் கிடப்பில் போட்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றேன். முயற்சி கிடப்பில் கிடந்தாலும் ஏக்கம் என்றும் பசுமையாய்த்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கும் நேரத்தில் படிப்பதைத் தவிர அனைத்தையும் செய்தபடி, நாளுக்கு பத்து மணி நேரத்துக்கு மேல் இணையத்தில் மேய்ந்தபடி மடலாடற் குழுக்களில் அரட்டை அடித்துக் களித்திருந்த போதுதான், 'பொன்னியின் செல்வனைப் பற்றி அரட்டை அடிக்கவும் ஒரு குழு தொடங்கினால் என்ன?', என்று தோன்றியது. அப்படித் தொடங்கப்பட்ட குழுவின் பரிணாம வளர்ச்சியை முன்னமே இத்தளத்தில் அளித்திருக்கிறோம். எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த பலரை இணைக்கும் பாலமாக அமைந்த குழுவின் பாக்கியம்தான் எங்களை இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்திற்கு அறிமுகம் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாளில் வரலாறு.காம்-இன் ஆசிரியர் குழுவாக உருவான குழுவின் முதல் பயணத்தின் போதுதான் முனைவர் கலைக்கோவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் நார்த்தாமலையில் பார்த்ததைப் பற்றியும், எங்களுக்கு முன்னமே தெரிந்த அரைகுறை விஷயங்களில் இருந்த சந்தேகங்களைப் பற்றியும் நாங்கள் பல மணி நேரம் பேசியபடி நிகழ்ந்த அந்தச் சந்திப்பின் முடிவில், அடுத்த நாள் எங்கள் பயணத்திற்கு அவரும் உடன் வருவதாக ஒப்புக் கொண்டார். நான் பல நூறு முறை சென்றிருந்த இராஜராஜீஸ்வரத்திற்கு முனைவர் கலைக்கோவனுடன் செல்லப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த போதும், அப்பயணத்தின் போது என் பல நாள் ஏக்கம் தீரும் என்பதை அறிந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பல முறை கடந்து சென்ற இராஜராஜன் திருவாயிலின் உப பீட கண்ட பகுதியில் அமைந்திருந்த சிற்பங்களை முதல் முறையாய் உற்று நோக்க வைத்த பயணம் அது! 'நிழல் விழா விமானம்', 'ஒரு பிரம்மாண்டமான கல்லால் ஆன சிகரம் கொண்ட விமானம்' என்றெல்லாம் நான் கேள்வியுற்றிருந்த தகவல்களை எல்லாம் தகர்த்தபடி, அவ்விமானத்தின் அமைப்பை கட்டிடக்கலைச் சொற்களொன்றுமறியாத எங்களுக்கும் புரியும்படி விளக்கியபடி விமானத்தின் தெற்குப் பக்கம் அழைத்துச் சென்றார் முனைவர் கலைக்கோவன். தென்புறமிருந்த இரும்புப் படிகளில் ஏறி சாந்தாரச் சுற்றினை அடைந்ததும்தான் என் நெடு நாள் கனவு நான் பிரதமாரகவோ, மந்திரியாகவோ ஆகாமலேயே பலிக்கப் போவதை உணர்ந்தேன். சாந்தார நாழியில் நான் கண்ட ஓவியங்கள், நெஞ்சில் நீங்காக் காவியங்கள். நாயக்கர் சுதையிலிருந்து மீண்ட பொழுது அதிகம் பாழாகியிருந்த ஆலமர் அண்ணல் ஓவியத்தைக் கடந்து கயிலையை நோக்கி விரையும் அலங்காரமான ஐராவதமும், அதன் மேல் சுந்தரரும், அதன் வாலில் இருந்த வாணனும் என்னை மறக்கச் செய்தனர். அரசர்களும் அடியவர்களும் அமைத்துக் கொடுத்த இல்லங்களான கோயில்களில் வீற்றிருக்கும் சிவனைக் காட்டிலும் யதார்த்தமாய் தன் சொந்த வீடான கயிலாயத்தில் உமையுடன் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் அமர் நிலையும், அவர் கண்களும் இதழ்களும் சிந்தும் சிரிப்பும், கனிவும் என்னை சந்தோஷத்தின் எல்லைக்கு இட்டுச் சென்றன. அதன்பின் கேட்டவை பல கண்டவை பல, அவையெல்லாம் என் செவிகளின் வழி சிந்தையில் விழுந்தனவா என்று நானறியேன். கோகுலும் மற்றவர்களும் கூறித்தான் 'சிதம்பர வழிபாடு' மற்றும் 'திருபுராந்தகர்' ஓவியங்களும் அங்கிருந்ததைத் தெரிந்து கொண்டேன். கயிலையம்பதியில் வீற்றிருந்த பெருமானைக் கண்ட மனது மீண்டு உலகிலிறங்கி வர ஒரு வார காலம் பிடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின் சென்ற பயணங்கள்தான் எத்தனை? கோயில்களின் மேல் வளர்ந்த காதலும், குழு நண்பர்களிடம் மலர்ந்த நட்பும், முனைவர் கலைக்கோவனும், முனைவர் நளினியும் காட்டிய அன்பும் பரிவும், என் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்தன. எங்கள் அனுபவங்களையும், நாங்கள் பெற்ற படிப்பினைகளையும் அவ்வப்பொழுது கட்டுரைகளாக்கி முனைவர் கலைக்கோவனுடன் பகிர்ந்துகொள்வதுண்டு. அக்கட்டுரைகளில் எங்கள் உணர்வின் படப்பிடிப்பு இருந்த அளவிற்கு வரலாற்றுத் தகவல்கள் இருந்ததில்லை. அந்த சமயத்தில் முனைவர் கலைக்கோவனின் ஆய்வுகளை இணையத்தில் பதிவு செய்வதைப் பற்றியும், அவர் எங்களுக்குச் சொல்வதை முறையாகப் பகிர்ந்து கொள்வதைப் பற்றியும் பலமுறை பேசினோம். ஆகஸ்டு (அல்லது ஜூலையின் பின் பகுதியாக இருக்கலாம்) 2004-இல் திருத்தவத்துறைக்குச் சென்ற போதும் இதைப் பற்றிய பேச்சு (கிருபாவின் தயவால்) எழுந்தது. இவர்களை விட்டால் திட்டமிட்டபடியே இன்னும் பல ஆண்டுகள் கடத்திவிடுவார்கள் என்று நினைத்ததாலோ என்னமோ, "இதைப் பற்றி பலமுறை பேசியாகிவிட்டது. விரைவில் ஏதாவது செய்யுங்கள். ஆகஸ்டு 15-ஐ கால எல்லையாகக் கொண்டு, வரலாற்றுக்காக ஒரு மாத மின்னிதழைத் தொடங்குங்கள்", என்று சற்று வேகமாகவே கூறினார் கலைக்கோவன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே சமயத்தின் பல வேலைகளில் மூக்கை நுழைத்து ஒரு வேலையையும் நிறைவாகச் செய்ய முடியாமல் திணருவது என் சுபாவம். வரலாறு.காமின் வரவுக்குப் பின், பெரிய அளவில் இல்லையெனினும், மாதம் ஒருமுறை எழுத வேண்டுமென்பதற்காகவாவது, வரலாற்றுத் துறையில் நான் பெற்ற படிப்பினைகளை பதிவு செய்வதில் கொஞ்சம் ஒழுங்கு பிறந்தது. வரலாறு.காமின் இதழுக்காக வேண்டி பலமுறை சென்ற இடம் இராஜராஜீஸ்வரம். ஜனவரி 2005-இல் இராஜராஜர் அமைத்த அப்பெருந்தளியினுக்காய் ஒரு சிறப்பிதழைக் கொண்டு வர விழைந்து மேற்கொண்ட பயணங்கள் அவை. கட்டிடக் கலையை கமலக்கண்ணன் அலச, இலாவண்யாவோ தெற்குதிசை முக மண்டபக் கல்வெட்டில் ஐக்கியமானார். வழக்கம் போல் நான் எல்லாவற்றிலும் கலந்து என் கருத்துக்களை (பெரும்பாலும் வீம்புக்காகவாவது மாற்றுக் கருத்துக்களை கூறுவதே என் வாடிக்கை) கூறியபடி அப்பயணங்களைக் கழித்தாலும், அப்பிரம்மாண்ட விமானத்தைக் கண்ட மாத்திரத்தில் பிரமிப்பு மட்டுமே எஞ்சியது. எதைப் பற்றி எழுதலாம் என்று யோசிக்கக் கூட முடியாத அளவு அந்த பிரமிப்பு என்னை மிரளச் செய்தது. கடைசியில், இந்த விமானத்தைப் பற்றி எழுத வேண்டுமெனில் சிறப்பதிழை எத்தனை ஆண்டுகள் கழித்து வெளியிட நேருமோ என்ற அச்சம் வர, ஸ்ரீ விமானத்தை விட்டுவிட்டு சண்டேசுவரர் திருமுன் கைப்பிடிச் சுவர் சிற்பங்களைப் பற்றி எழுத முடிவெடுத்தேன். ஸ்ரீவிமானத்தைக் கண்டு மிரண்டாலும், என்றேனும் ஒரு நாள், இவ்விமானத்தின் ஒரு சிறிய பகுதியைப் பற்றியாவது தரமான ஆய்வொன்றைச் செய்ய வேண்டும் என்ற பேராசை மட்டும் முளைத்து, நாளுக்கு நாள் வளர்ந்தபடியேயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின் நிகழ்ந்த வலஞ்சுழிப் பயணங்களில் கற்றவைகள் பல. கற்றவைகளைவிட, கற்க வேண்டியவைப் பற்றிய தெளிவு ஓரளவு கிடைத்ததென்றுதான் கூற வேண்டும். சிறந்ததொரு வரலாற்றாய்வு முறையை நேரில் காணக் கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம். முதல் சந்திப்பிலிருந்து எங்கள் உற்சாகத்தின் ஊற்றாக விளங்கி வரும் முனைவர் கலைக்கோவனுடன், நாளடைவில் சற்றே உரிமை எடுத்துக் கொண்டு, அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் உடன் செல்ல முடிந்தது. கணக்கிலடங்கா கேள்விக் கணைகளை அவர் மேல் வீச முடிந்தது. அவ்வாறு சென்ற பயணங்களுள் பலமுறை சென்றது வலஞ்சுழியும், தஞ்சையுமாகத்தான் இருக்கும். சுந்தரரின் வாழ்வைச் சித்தரிக்கும் ஓவியத்தை பல ஆண்டுகளாக ஆய்வு செய்த குறிப்புகளை எல்லாம் கொண்டு அவ்வோவியத்தை மட்டும் ஒரு நாள் முழுதும் கண்ட நாள் நெஞ்சில் நீங்காத நாளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல பயணங்களை எண்ணிப் பார்க்கையில், இதை விட இன்பம் தரக் கூடிய பயணமொன்று இருக்கவே முடியாது என்று நான் நினைத்த பயணங்கள் எத்தனையோ. அத்தனைக்கும் சிகரம் வைத்தாற் போல் அமைந்த பயணம் ஏப்ரல் 2-ஆம் தேதி அன்று அமைந்தது. தஞ்சை பெருவுடையார் கோயில் விமானத்தை சீர் படுத்த சாரம் கட்டியிருப்பதாக 'தி ஹிந்து' தெரிவித்த செய்தியைக் கண்டவுடனேயே விமானத்தில் மனம் ஏற ஆரம்பித்துவிட்டது. உடனே முனைவர் கலைக்கோவனை தொடர்பு கொண்டு 'விமானத்தின் சிகரத்தைத் தொட முடியுமா?' என்று வினவிய பொழுது, 'முயற்சி செய்யலாம்', என்றார். குறைந்த பட்சம் 5-6 வாரங்களுக்காவது சாரம் இருக்கும் என்ற நிலையில், நான் கேட்ட சில நாட்களுக்குள்ளாகவே எங்களது 'சிகரத்தை நோக்கிய' பயணம் நடை பெறாது, மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் உடையாளூர் கள ஆய்வையொட்டிதான் இப்பயணம் நடைபெறும் என்று யூகித்த நான், மார்ச்சு-30-ஆம் தேதியை ஒட்டிய வார இறுதியை சென்னையில் கழிக்கலாம் என்று இருந்தேன். அந்த வார வியாழக் கிழமை காலையில் இலாவண்யா தொலைபேசி "ஏப்ரல் இரண்டாம் தேதி தஞ்சை விமானத்தின் மேல ஏற அனுமதி வாங்கியாச்சாம்!" என்றார் குதூகலமுடன். வியாழக் கிழமை இரவு பேருந்தில் சென்னை சென்று, அடுத்த நாளே கிளம்பி தஞ்சையை அடைந்து, அடுத்த நாள் இரவு பெங்களூர் திரும்பும்படியான சூழ்நிலை. எனக்கோ, வியாழக் கிழமை காலையிலேயே நல்ல ஜலதோஷமும் தலைவலியும். இந்த அலைச்சலை உடல் தாக்குப் பிடிக்குமா என்ற கேள்வியெழுந்தது. "இப்பயணத்துக்குப் பின் இரண்டு வாரம் படுக்கையில் விழ நேர்ந்தாலும் பரவாயில்லை" என்றது மனம். எத்தனை நாட்கள் என்னுள் இன்ப ஊற்றைக் கிளப்பிய விமானமது! அந்த விமானத்தின் சிகரத்தையடைந்து கலசத்தைத் தொடும் வாய்ப்பு பின்பொருமுறை கிடைக்குமா? இம்முறை கிடைத்ததே கனவா நனவா, என்று நம்ப முடியாத நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனது ஆகட்டும் என்று சென்னை சென்றடைந்த புனித வெள்ளியில் என் உடல் நிலை இன்னும் மோசமான நிலையை அடைந்தது. வீட்டில் சொன்னால் தஞ்சை பயணத்திற்குத் தடை சொல்லிவிடுவார்களோ என்று வாய் மூடி மௌனியாய் பகல் பொழுதைக் கழித்தேன். வாய் வேண்டுமானால் இருமலுக்கும் தும்மலுக்குமிடையில் பேச முடியாமல் தவித்திருக்கலாம். மனதிற்குள் என்னமோ ஓராயிரம் சம்பாஷணைகள், அத்தனையும் இராஜராஜீஸ்வரத்தைப் பற்றித்தான் என்று சொல்லவும் வேண்டுமோ? ஒரு வழியாய் புனித வெள்ளியை ஓட்டி, சனிக்கிழமை கண் விழித்த பொழுது தலையெல்லாம் பாரம், நடையில் கூட சற்றே தள்ளாட்டம் தெரிந்தது. ஆனது ஆகட்டும் என்று கிளம்பி சனிக்கிழமை இரவு திருச்சியை அடைந்து, எங்கள் ஆஸ்தான உறைவிடமான விஜய் லாட்ஜில் இரவினைக் கழித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக குறித்த நேரத்திற்குக் குறைந்த பட்சம் அரை மணி நேரம் கழித்துச் சென்றே பழக்கப் பட்ட நாங்கள், இப்பயணத்தின் பொழுது இரவில் சரியாக தூங்கக் கூட முடியாமல், மணி எப்போதடா 5.30 அடிக்கும் என்று காத்திருந்து, குறித்த நேரத்துக்குச் சற்று முன்பாகவே முனைவர் கலைக்கோவனின் மருத்துவமனையை அடைந்தோம். மனம் எங்கும் இராஜராஜீஸ்வரம் நிறைந்திருப்பினும், முதலில் நாங்கள் சென்றது தமிழ் பல்கலைக்கழகத்திற்குத்தான். தமிழகத்தில் முதல் முறையாக பிராமி கல்வெட்டுடன் கூடிய நடு கற்களைக் காணச் சென்றோம். பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் பொழுதே முனைவர் கலைக்கோவன் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்டார். கற்களைக் கண்டு, கல்வெட்டுகளில் 'ஆகொள்' என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டதை அறிந்தவுடன், அவர் உவகைக் கடலில் ஆழ்வதை உணர முடிந்தது. 'நடுகற்கள் எழுத்துடன் இருந்திருக்கும்', சங்கப் பாடல்களில் நடு கற்களில் வரும் 'எழுதிய' என்ற பதம் எழுத்தைக் குறிக்குமே அன்றி ஓவியத்தைக் குறிக்காது என்ற அவரது கூற்றிற்குச் சான்றாய் கிடைத்த கற்களைக் கண்டதும் அவர் உணர்ச்சவசப்படுதல் நியாயம்தானே? தமிழகத்தின் தொன்மையான எழுத்துக்களைக் கண்டதுடன், ஓர் அரிய மனிதரையும் காணக் கிடைத்தது. தமிழ் பல்கலைக்கழகத்தில் பணி புரியும் பேராசரியர் இராஜன்தான் அம்மனிதர். தமிழையும் வரலாற்றையும் பின்னுக்குத் தள்ளி தன் புகழை எப்பாடுபட்டாவது முன்னுக்குக் கொண்ட வர நினைக்கும் பலருக்கு இடையில், உலகையே ஒரு கணம் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த கற்களை கண்டுபிடித்த போதும், அக் கற்களைப் பற்றிய உண்மைகள் தெளிவாகாது செய்தி வெளியிடக் கூடாது என்பதற்காக வேண்டி தமிழ்நாட்டின் அனைத்து அறிஞர்களுக்கும் தகவல், அழைப்பு, புகைப்படங்கள் அனுப்பி, தனது கருத்தை தயங்காமல் கூறி, மாற்றுக் கருத்து கூறின் தயங்காமல் பரிசீலிக்கும் ஓர் உண்மை விளம்பியைக் கண்டது நாங்கள் செய்த பாக்கியம். எதிர்பாரா சந்திப்பெனினும், தஞ்சை விமானத்தில் ஏறிய பொழுது அடைந்த அதே அளவு மகிழ்ச்சியை நடு கற்களைக் கண்ட பொழுதும், பேராசிரியர் இராஜனைச் சந்தித்த போதும் அடைய முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இக் கற்கள் கிடைத்த கதை மிகவும் சுவாரசியமானது. ஒரு பள்ளிச் சிறுவன் தமிழ் பல்கலைக்கழக மாணவர்களை அணுகி, 'எங்கள் ஊரில் எழுத்துடன் கற்கள்' இருக்கின்றன என்று கூறியதை தொடக்கமாகக் கொண்டு, அம் மாணவர்களின் தேடலாலும், பேராசிரியர் இராஜனின் கைக் காட்டலாலும், சங்க கால நடு கற்கள் முதன் முறையாக தமிழ்நாட்டில் வெளிவந்துள்ளன. வரலாற்றுத்துறையில் ஈடுபாடு கொண்ட பலருக்கே பிராமி கல்வெட்டுக்கும், கற்களில் இருக்கும் கீறல்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம் என்ற பொழுது, இந்தத் துறையில் சற்றும் பரிச்சயம் இல்லாத சிறுவனால், அக் கற்களில் இருப்பவை எழுத்துக்கள் என்று எவ்வாறு உணர முடிந்தது என்பதுதான் ஆச்சரியம். உண்மையான அறிஞர்களும், ஆய்வாளர்களும் இருக்கும் வரையில், அவர்கள் தேடிச் செல்லாத போதும், தக்க தரவுகள் அவர்கள் கதவைத் தாமே தட்டும் என்பதை நிரூபிக்கும் இன்னமொரு நிகழ்வாகவே எனக்குத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முனைவர் நளினி அளித்த அறுசுவை காலை உணவை கபளீகரம் செய்தபின், மனமும் வயிறும் நிறைந்தபடி இராஜராஜீஸ்வரத்தையடைந்தோம். வெய்யிலின் உக்கிரம் முழு வீச்சில் அடிக்காத போதும், தரையில் கால் வைக்கவே சிரமமாக இருந்தது. அந்த நேரத்தில் வெற்றுக் கால்களுடன் சாரத்தின் மேல் ஏறுவதென்பது முடியாத காரியம் என்பதால், எங்கள் சாரம் ஏறும் படலத்தை மாலைக்கு ஒத்திப் போட்டு, சாந்தாரநாழியுள் நுழைந்து, சுந்தரருடன் ஐக்கியமானோம். பல வருடங்களாய் இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் ஆய்வு செய்யும் ஓவியத்தை, அவர்கள் செய்யும் கள ஆய்வின் போது அருகில் இருந்து நோக்கும் அரிய வாய்ப்பு எனக்கு இருமுறை கிட்டியிருக்கிறது. அந்த இரு தரமும் பல புதியச் செய்திகள் அறிஞர்களின் கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தது. இத்தனை வருடம் நுணுக்கமாக கவனித்த பின்னும், அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் சென்ற முறைகளில் தவறவிட்ட தகவல்கள் கிடைத்த வண்ணம் இருப்பதைப் பார்த்தாலே அவ்வோவியத்தின் தரத்தை உணர்ந்திடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="WIDTH: 468px; HEIGHT: 445px" height="958" src="http://www.varalaaru.com/images/May06/nadukal.jpg" width="525" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதிய உணவை இசையாசிரியை இரா. இலலிதாம்பாள் அவர்களின் வீட்டில் கழித்துவிட்டு மீண்டுமொருமுறை சாந்தார நாழியில் தஞ்சம் புகுந்ததுதான் தெரியும். மாலை நாலரை மணி அளவில் முனைவர் கலைக்கோவன் நினைவுபடுத்தியிருக்காவிட்டால், அந்தப் பயணம் சிகரத்தைத் தொடுவதற்காக வந்த பயணம் என்பதை சுத்தமாக மறந்திருப்போம். பொல்லாத ஓவியங்கள் எங்களை இன்னும் பல மணி நேரம் சிறைபடுத்தியிருக்கும். நான்காம் தளம் வரையில் படிகளில் ஏறி அதன்பின் மரத்தாலும், இரும்புக் குழாய்களாலும் பிணைத்துக் கட்டப்பட்டிருக்கும் சாரத்தில் ஏறியும் சிகரத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். ஏற்கெனெவே உடல்நிலை சரியில்லாத எனக்கு, அதிகம் காற்றுப் புழக்கம் இல்லா சாந்தார நாழியில் நிற்கும் போதெல்லாம், அவ்வப்பொழுது தள்ளாட்டமும், சோர்வும் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. விமானத்திலிருந்து இறங்கி அருந்திய தேநீர் செய்த மாயமா அல்லது இராஜராஜீஸ்வர விமானத்தின் மேல் கட்டப்பட்டிருக்கும் சாரங்களின் மேல் என் கால் பட்டதும் நிகழந்த அதியசயத்தின் பலனா, நான்றியேன்! என் உடலெங்கும் புதிய தெம்பும், உற்சாகமும் எங்கிருந்தோ வந்து சூழந்து கொண்டன. பாதி சாரம் ஏறியவுடன், "எனக்கு உயரம் என்றால் பயம்" என்று தயங்கித் தயங்கிச் சொன்ன பத்மநாபனை கிண்டல் செய்தபடி ஏறியதில் கிரீவத்தை அடைந்ததே தெரியவில்லை. ஆங்காங்கே தென்பட்ட சிற்பங்கள் அனைத்திலும் பலத்த சுதைப்பூச்சைச் சபித்தவாறும் அவ்வப்போது கேள்விக் கணைகளை கலைக்கோவனிடன் வீசியபடியும் எங்கள் பயணம் நகர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="WIDTH: 468px; HEIGHT: 445px" height="958" src="http://www.varalaaru.com/images/May06/saaram.jpg" width="768" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில், ஆர உறுப்புக்களைப் பற்றி ஒன்றன் பின் ஒன்றாக நான் கேள்விகளை வீச ஆரம்பித்ததும், 'இவனைவிட்டால் இன்னும் பல நாட்களுக்கு இடத்தைவிட்டு நகராமல் கேள்விகள் கேட்டபடியே இருந்துவிடுவான்', என்று உணர்ந்ததாலோ என்னமோ, 'இந்த விமானத்தின் ஆர அமைப்பைப் புரிந்து கொள்வது என்பது மகத்தான, பல பயணங்கள் நிறைந்த ஆய்வாகும்.', என்று ஒரு வரி பதிலைக் கூறினார். அதனால்தான் சூரியன் அஸ்தமிக்கும் முன் நாங்கள் உச்சியையடைய முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="WIDTH: 468px; HEIGHT: 445px" height="958" src="http://www.varalaaru.com/images/May06/sudhai.jpg" width="768" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிரீவத்தை நாங்கள் அடைந்த பொழுது எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. இது நாள் வரை நான் பலர் கூறி கேட்ட கூற்று யாதெனில், தரையில் இருந்து பார்க்க சிறியதாய்த் தெரியும் கிரீவப் பகுதி நந்திகள், திருச் சுற்று மாளிகையில் தென் பகுதியில் வைக்கப் பட்டிருக்கும் சோழர்கால நந்தியின் அளவை ஒத்து இருக்கும் என்பதாகும். நாங்கள் கண்ட நந்திகளோ திருச்சுற்று நந்தியைவிட உயரத்தில் குறைந்த பட்சம் இரண்டடி குறைவாகவும், பருமனிலும் மிகவும் குறைந்த அளவிலும் காணப்பட்டது. அது நாள் வரை நாங்கள் நம்பிக் கொண்டு வந்த இன்னொரு தகவல் தவிடு பொடியானது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="WIDTH: 468px; HEIGHT: 445px" height="958" src="http://www.varalaaru.com/images/May06/nandhi.jpg" width="768" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9662309-114836518762964565?l=classical-music-review.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://classical-music-review.blogspot.com/feeds/114836518762964565/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9662309&amp;postID=114836518762964565' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/114836518762964565'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/114836518762964565'/><link rel='alternate' type='text/html' href='http://classical-music-review.blogspot.com/2006/05/i.html' title='சிகரத்தை நோக்கி... I'/><author><name>லலிதாராம்</name><uri>http://www.blogger.com/profile/01372586935352216447</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9662309.post-114253914706609893</id><published>2006-03-16T11:57:00.000-08:00</published><updated>2006-11-24T05:57:01.880-08:00</updated><title type='text'>மா.இராசமாணிக்கனாரின் 'பல்லவர் வரலாறு' - ஒரு பார்வை</title><content type='html'>சென்ற தலைமுறையானது, வரலாற்றாய்வுத் துறையில் ஆழ்ந்து பல அரிய முத்துக்களை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கும் முனைவர் கலைக்கோவனை மா.இராசமாணிக்கனாரின் மகனாக அடையாளம் கண்டிருக்கும். மா.இராசமாணிக்கனாரே வரலாற்றில் கலந்து பல ஆண்டுகளான பின், அவர் பெயரால் ஒரு வரலாற்று ஆய்வு மையம் தொடங்கப்பட்டு இருபது ஆண்டுகளான பின், வரலாற்றாய்வின்பால் இழுக்கப்பட்ட தலைமுறையினனான எனக்கு மா.இராசமாணிக்கனார் என்ற அறிஞரை, முனைவர் கலைக்கோவனின் தந்தையாகத்தான் முதன் முதலில் அடையாளம் காண முடிந்தது. வரலாறு.காம் ஆசிரியர் குழு உறுப்பினர் கமலக்கண்ணனின் வாயிலாக, எங்கள் குழுவிற்கும் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குனர் கலைக்கோவனுக்கும் ஏற்பட்ட முதலாம் சந்திப்பைப் பற்றிப் பலமுறை கேள்வியுற்றிருக்கிறேன். (அச்சமயத்தில் நான் இந்தியத் துணைக்கண்டத்திற்குப் பல காத தூரம் தொலைவான இடத்தில் தீஸிஸ் எழுதுகிறேன் பேர்வழி என்று ஜல்லி அடித்துக்கொண்டிருந்ததால், அச்சந்திப்பைக் காதால் கேட்டு இன்புறும் பேறே கிட்டியது.) அச்சந்திப்பில், முனைவர் கலைக்கோவனை அறிமுகப்படுத்தியவர், அவரைப் "புலிக்குப் பிறந்த புலி" என்று விளித்ததாகக் கமலக்கண்ணன் கூறிய போதுதான் மா.இராசமாணிக்கனார் என்ற பெயரை முதன் முதலில் கேட்க நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின், முனைவர் கலைக்கோவனிடம் பழகக் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம், இராஜராஜனைப் பற்றியும், தஞ்சாவூரைப் பற்றியும், மகேந்திரனைப் பற்றியும், கைலாசநாதர் கோயிலைப் பற்றியும், அவரது வாழ்வில் நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வுகளைப் பற்றியும், நெஞ்சைக் கனமாக்கும் செய்திகளைப் (கோயில்களின் நிலை, வரலாற்றைப் பற்றிய விழிப்புணர்வு, இத்துறையில் மலிந்து கிடக்கும் தவறான தகவல்கள் போன்றவற்றை இச்செய்திகளுள் அடக்கலாம்) பற்றியும், அவருக்கே உரிய நகைச்சுவையுணர்வுடன் அவர் விவரிப்பதைக் கேட்டபடி கழிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சற்றே தயங்கித் தயங்கி அவரைச் சந்திக்க நேரம் கேட்டுச் சந்தித்தும், தொலைபேசியில் பேசியும் அவரிடம் பழக நேர்ந்தாலும், விரைவிலேயே வாரத்துக்குப் பலமுறை தொலைபேசியும், மாதத்துக்கு இருமுறை சந்தித்தும் அவருடன் பழகக் கிடைத்த வாய்ப்புகள் எங்கள் குழுவிற்குக் கிடைத்த பெரும் பேறென்றே சொல்ல வேண்டும். கேள்விகளை வரவேற்பவர், அடுத்தவர் கருத்துக்களை முனைந்து கேட்பவர், வரலாற்றின்பால் எங்களுக்கிருந்த ஆர்வம் உபயோகமான வழியில் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் என்று எங்களுக்கு முனைவர் கலைக்கோவனின் மேல் எழுந்த எண்ணங்கள், எங்களை அவர்பால் இழுத்தன. பல சமயங்களில் அவரை ஆசனாகவே நோக்கி வரலாற்றைப் பற்றிக் கதைத்தாலும், நாளடைவில் அவரை ஒரு நண்பராகவும் காண முடிந்தது. எங்கள் உறவு வரலாற்றினால் பலப்பட்டாலும், சமயத்தில் வரலாறு சம்பந்தமாகச் சந்தேகம் இல்லாதபோதும் தொலைபேசி நலம் விசாரிக்கும் உரிமையையும், "திருச்சி வரோம் சார். கிளினிக்கில் வந்து சந்திக்கிறோம், ஊர்லதானே இருப்பீங்க?" என்று அவர் அனுமதி இன்றி நாங்களே முடிவெடுத்து, அவரின் வீட்டின் கதவையும் கிளினிக்கின் கதவையும் தட்டும் உரிமையையும் கொடுத்தது. அப்படி ஒருமுறை அவருடைய கிளினிக்கில் சந்தித்த பொழுது, "இப்பொழுது என்ன வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். வழக்கம் போல நான்கைந்து விஷயங்களைச் சொல்லி எங்களை மலைப்பில் ஆழ்த்தினார். மா.இராசமாணிக்கனாரைப் பற்றி புத்தகம் எழுதிக் கொண்டிருப்பதையும் அவ்வேலைகளுள் ஒன்றாகச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;மா.இராசமாணிக்கனார் என்ற பெயரைக் கேள்விப்பட்டுப் பல மாதங்களான பின், கமலக்கண்ணன் பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற மா.இராசமாணிக்கனாரின் புத்தகத்தை ரொம்பவே மெனக்கெட்டுத் தருவித்ததைக் கண்டு பல மாதங்கள் ஆனபின், வரலாறு.காம்-இன் இரண்டாம் இதழில் "கோச்செங்கணான் காலம்" என்ற மா.இராசமாணிக்கனாரின் கட்டுரையைப் படித்து ஒரு வருடத்துக்கு மேல் ஆனபின், வரலாறு ஆய்விதழ் ஒன்றில் "பெருமைச் சுவடுகள்" என்ற பகுதியில் மா.இராசமாணிக்கனாரைப் பற்றிப் படித்துப் பல மாதங்களான பின், முதன் முதலாக அவ்வறிஞரின் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. "பெரிய புராண ஆராய்ச்சி", "பத்துப்பாட்டு ஆராய்ச்சி", "பல்லவர் வரலாறு", "சைவ சமய வளர்ச்சி" போன்ற அவரின் பிரபலமான நூல்களைப் பற்றி நான் கேள்வியுற்றிருந்தேன். இப்புத்தகங்களில் கிடைத்ததை வாங்கவும், கிடைக்காததை நகல் எடுக்கவும் செய்தேன். அச்சமயத்தில், மகேந்திரனின் பட்டப் பெயர்களுள் ஒன்றான "சங்கீர்ண ஜாதி" என்னைப் பல நூல்களையும், கட்டுரைகளையும் தேட வைத்தது. இந்த விஷயத்தில் மா.இராசமாணிக்கனாரின் கருத்து என்ன என்பதைக் காண அவரது பல்லவர் வரலாறு என்ற புத்தகத்தைப் புரட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சோழர்களினால் வரலாற்றின்பால் ஈர்க்கப்பட்டிருந்தாலும், முனைவர் கலைக்கோவனுடனும், முனைவர் நளினியுடனும் காஞ்சியையும் மாமல்லபுரத்தையும் காணும் பேறு கிடைத்திருந்ததால், என் மேல் சோழர்கள் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தைப் போலவே பல்லவர்களும் ஏற்படுத்தியிருந்தனர். புத்தகத்தை எடுத்ததுதான் எடுத்தோம், ஒருமுறை ஆழ்ந்து படித்துவிடுவோம் என்று படிக்க ஆரம்பித்தேன். பல்லவர் வரலாற்றினைப் பற்றி முழுமையான ஒரு கண்ணோட்டத்தைக் கூறும் தமிழ் நூல்களுள் முதன்மை நூலாக இன்றளவும் விளங்கும் நூல் 'பல்லவர் வரலாறு'. இந்நூல் செய்யப்பட்டிருக்கும் விதத்தை ஊன்றி நோக்கும் பொழுது, இராசமாணிக்கனாரின் உழைப்பைப் பற்றியும், அவரின் ஆய்வு முறைகள், கருத்துகளை நிறுவும் வகைகள் போன்றவற்றைக் கட்டியம் கூறும் தரவுகளும் அந்நூலில் அடங்கியிருப்பதையும் உணர முடியும். இந்நூலினைப் படித்த பொழுது எனக்கெழுந்த கருத்துகள் பின் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் முகவுரையில், "பல்லவரைப் பற்றிய ஆராய்சி நூல்கள் பலவும், ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. ஆயின், அவற்றிற் காணப்பெறும் செய்திகள் அனைத்தும் தமிழில் எழுதப்படவில்லை. காலஞ் சென்ற வரலாற்றுப் பேராசிரியர் வெளிப்படுத்தினார்கள். அவ்வரலாற்று நூற்குப் பின் வெளிப் போந்த ஆராய்ச்சி நூல்கள் பல; கிடைத்த கல்வெட்டு செய்திகள் பல. மேலும், அவ் வரலாற்று நூல் இன்று கிடைக்குமாறில்லை. வித்துவான் தேர்விற்கு அது பாடமாக வைக்கப்பட்டுள்ளது. நூலின்றி மாணவர் இடர்படுகின்றனர். இக்குறைகள் அனைத்தையும் உளங்கொண்டு இந்நூல் எழுதப் பெற்றதாகும்.", என்று நூலின் நோக்கை வெளிப்படுத்துகிறார். இவர் குறிப்பிடும் பேராசிரியர் "பி.டி.சீனிவாச ஐயங்காராக" இருக்கலாம். அவரது நூலில் "நூலாசிரியர் பலர்" என்ற தலைப்பில் கொடுத்திருக்கும் பட்டியலை நோக்கும் போது, இந்நூலுக்கு முன் பல்லவரைப் பற்றித் தமிழில் இருந்த ஒரே நூல் பி.டி.சீனிவாச ஐயங்காரின் பல்லவர் சரித்திரம்தான் என்பது தெளிவாகிறது. அந்நூலுக்குப் பின் கிடைத்த தரவுகளை மனதில் கொண்டு, வித்துவான் தேர்வெழுதுவோரையும் மனதில் கொண்டு, தெளிவாகவும் எளிமையாகவும் இந்நூல் மலர்ந்திருக்கிறது. 1944-இல் தொடங்கி இன்றளவும், வரலாற்று மாணவர்கள் விரும்பிப் படிக்கும் நூலாக இந்நூல் விளங்குவதே இதன் பெருமையை விளக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கி.பி. 250-இல் தொடங்கி கி.பி.900 வரை பரவியிருந்த பல்லவர் ஆட்சியே நூலின் முதன்மை நோக்கெனினும், படிப்பவரின் மனதில் அக்காலத் தமிழகத்தைப் பற்றிய முழுமையானதொரு பிம்பம் எழவேண்டி, அக்காலத்துக்கு முன் இருந்த தமிழகத்தைப் பற்றிய படப்பிடிப்பு 'சங்க காலம்' தொட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் இருந்த மூவேந்தரைப் பற்றியும், அக்கால வேந்தர்களுள் முதன்மையானவர்களைப் பற்றியும் சுருக்கமாக வரையப்பட்டிருப்பினும், அவற்றை எழுத எடுத்துக் கொண்டிருக்கும் முனைப்பைக் காண, செங்குட்டுவன் காலத்தை நிறுவ அவர் கொடுக்கும் தரவுகளும், சில பக்கங்களே பெறும் அப்பகுதிக்கு அடிக்குறிப்பாகக் கிட்டத்தட்ட 15 புத்தகங்களிலிருந்து இருபத்தைந்திற்கும் மேற்பட்ட குறிப்புக்களைக் கொடுத்திருப்பதையும் கண்டாலே போதுமானது. இப்பகுதியில் 'கோச்செங்கட்சோழன்' என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கும் விஷயங்கள், இராசமாணிக்கனார் என்ற மனிதரின் மனதைப் படம்பிடிக்கும் தரவாக அமைந்திருக்கிறது! கோச்செங்கட்சோழனை ஐந்தாம் நூற்றாண்டினனாக முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே என்பது அனைவரும் அறிந்ததே. கோச்செங்கணான் கால ஆராய்ச்சிக்குப் பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட 'பல்லவர் வரலாறு' நூலில் கோச்செங்கணானை 'கி.மு 60-ஆம் ஆண்டிற்கும் கி.பி 250-ஆம் ஆண்டிற்கும்' இடைப்பட்டவனாகக் கொள்கிறார். (கி.பி 2000-ஆம் ஆண்டில் மறுபதிப்பு செய்த புண்ணியவான்கள் கி.பி-ஐ கி.மு-வாக அச்சிட்டிருக்கிறார்கள்.). இன்று நாம் காணும் சக மனிதர்களிலும் சரி, அறிஞர் பெருமக்களிலும் சரி, தான் ஒரு காலத்தில் கூறிய கருத்து தவறென்று உணர நேர்ந்தாலும், முன் சொல்லிவிட்ட காரணத்தினாலேயே தன் பழைய கருத்துக்கு வலிந்து சென்று, இல்லாத சான்றுகளை உருவாக்கும் சூட்சுமம் கொண்டோர் பலரைத்தான் காண முடிகிறது. கோச்செங்கணானை முதலில் சங்க காலத்தவனாகக் கொண்டிருப்பினும், பிற்காலத்தில் அக்கருத்து மாறும் வகையில் சான்றுகள் கிடைத்த பொழுது தயங்காமல் தன் கருத்தை மாற்றிக் கொள்ளும் அப்பெருந்தகையின் திறந்த உள்ளம் தெளிவாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் அனைத்துப் பகுதிகளிலும் இராசமாணிக்கனாரின் ஆழ்ந்த இலக்கிய பின்புலம் தெளிவாகத் தெரிகிறது. பல குழப்பமான காலகட்டங்களை, ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான செய்திகளைக் கூறும் பட்டயங்களை ஒப்பு நோக்கி, அன்று அவருக்கு இருந்த சான்றுகளைக் கொண்டு தொகுத்திருக்கும் முடிவுகள், பல சமயங்களில் தெளிவாகவே உள்ளன. எடுத்துக்காட்டாக, 'பல்லவர் யாவர்' என்ற தலைப்பில், பல்லவரின் பின்புலத்தைப் பற்றி இருந்த கருத்துக்களை எல்லாம் தொகுத்து, அவற்றுள் எவை சரியாக பொருந்துகிறதென்பதை அலசி, பல்லவர்கள் தமிழரசர் அல்லர், தொண்டை மண்டலத்திற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று நிறுவியிருக்கும் விதம் இரசிக்கத்தக்க வகையிலும், தெளிவுடனும் அமைந்துள்ளது. இன்றளவும் 'இருண்ட காலம்' என்று அழைக்கப்படும் கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வரை இருந்த முற்கால மற்றும் இடைக்காலப் பல்லவர்களைப் பற்றிய கண்ணோட்டத்தை நூலின் ஐந்தாவது மற்றும் ஆறாவது தொகுதியில் குறிக்கிறார். நூலின் அனைத்துப் பகுதிகளிலும், அக்காலகட்டத்தில் அண்டை நாட்டிலிருந்த அரசர்களைப் பற்றியும், அவருள் நடந்த போர்களைப் பற்றியும் கூறியிருப்பதிலிருந்து பல்லவரின் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களைப் பற்றி மட்டுமல்லாது, அக்கால தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த நிலையையும், குறைந்த பட்சம் பறவைப் பார்வையிலாவது காண வழி வகுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'பல்லவர் யாவர்' என்ற பகுதியில் 'பல்லவர் பாரசீகத்தினின்று வந்தவர்' போன்ற கருத்துகளைக் கடுமையாக எதிர்த்து எழுதும் ஆசிரியர், அதன் பின் வரும் தொகுதிகள் பலவற்றின் தொடக்கத்தில், அத்தொகுதி தொடர்பான மற்றோரின் கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து, பல சமயங்களில், தனது நிலைப்பாட்டிற்கு மாறான கருத்தை மறுக்காமலிருப்பதிலிருந்து, அச்சமயத்தில் கிடைத்த தரவுகளின் அளவும், அவற்றால் ஆணித் தரமான முடிவுகளுக்கு வர இயலாத நிலைமையும் தெளிவாகிறது. தனது முடிவுகளைத் தொகுத்து இறுதியில் கூறியிருந்த போதும், மாற்றுக் கருத்திலும் சில உண்மைகள் இருக்கக் கூடும் என்று கருதியதால், அதையும் தொகுதியின் முற்பகுதியில் அளித்திருக்கலாம். உதாரணமாக, சீயமங்கலம் குடைவரையைப் புத்தகத்தின் எட்டாவது தொகுதியில் 'சிம்ம விஷ்ணுவின் கலத்ததாக இருக்கலாம்' என்று Prof. Dubrell-இன் கருத்தைக் கூறி அடுத்த தொகுதியில் மகேந்திரன் காலத்தில் அமைக்கப்பட்டதாகவும் கூறுகிறார். 'லளிதாங்குரன் என்னும் காவலனால் குடையப்பட்டது' என்று கல்வெட்டு கூறுவதாக நமக்கு சீயமங்கலத்தை அறிமுகப்படுத்தி, அத் தொகுதியில் வேறொரு இடத்தில் மகேந்திரனின் பட்டப் பெயர்களுள் ஒன்றாக 'லளிதாங்குரனையும்' குறிப்பிட்டிருக்கும் ஆசிரியரின் நிலைப்பாடு நமக்கு விளங்கினும், Prof. Dubrell-இன் கருத்தை மறுக்க ஏனோ தயங்கியிருக்கிறார். குடைவரைகளையும், கட்டுமானக் கோயில்களையும், ஒற்றைக் கல் தளிகளையும் யார் அமைத்தவர் என்று அடையாளப்படுத்தும் இடங்கள் பலவற்றில் ஆசிரியரின் இத்தயக்கம் தெரிகிறது. இதில் வேடிக்கை என்னவெனில், சரியான செய்தி என்று இன்றளவில் ஏற்றுக் கொள்ளப்படும் செய்திகளைக் கூறும் இடங்களில் அடிக்குறிப்பு இல்லாதிருக்கின்றது. இத்தரவுகளை வைத்துப் பார்க்கும் பொழுது தவறான கருத்து எனத் தென்படும் விஷயங்களைக் குறிப்பிடும் பல இடங்களில் வேறொருவரின் புத்தகத்தையோ அல்லது கருத்தையோ குறிக்கும் அடிக்குறிப்பு தென்படுகிறது. தான் சுயமாக கூறிய கருத்துக்கள் பெரும்பாலும் சரியாக இருக்கும் நிலையில், மெனக்கெட்டு Longhurst, Heras, Durbruell போன்றோரின் கருத்துக்களைத் தொகுத்திருக்க வேண்டாமோ என்று கூடத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பல இடங்களில் தெளிவாக விளக்கமளிக்கும் ஆசிரியர், சில இடங்களில் அடுத்தடுத்து ஒன்றுக்கொன்று முரணான செய்திகளைக் கூறுவதுதான் ஆச்சரியத்தை அளிக்கிறது. உதாரணமாக மகேந்திரனே 'தருமராச ரதத்தை' செய்வித்தான் என்று உறுதியாகக் கூறி, அடுத்த தொகுதியிலேயே மகேந்திரன் தொடங்கிய வேலையை நரசிம்மன் முடித்தாகக் கூறுகிறார், அதற்கடுத்த தொகுதியில் பரமேசுவரவர்மன் 'தர்மராச ரதத்தின் மூன்றாம் அடுக்கை முடித்தான்' என்றும் கூறுகிறார். அன்றைய நிலையில் வெறும் கல்வெட்டுத் தரவுகளை மட்டும் வைத்துக் கொண்டு 'இன்னார்தான் செய்தது' என்று கூற முடியாத குழப்பத்தை நாம் உணர முடிந்தாலும், மாணவர்கள் தொடர்ந்து படிக்கும் நூலாக விளங்குவதால், சரித்திரத் தேர்ச்சியில் முதல்நிலை மாணவர்களாக விளங்குபவருக்குக் குழப்பத்தை உண்டாக்குமே என்ற கவலையும் எழுகிறது. நூல் வந்த பின் அறுபத்திரண்டு ஆண்டுகள் ஓடிவிட்ட காலத்தில், எத்தனையோ சான்றுகள் பல அறிஞர்களால் வெளிக் கொணரப்பட்ட நிலையில் கூட, 'இது முற்றிலும் சரி', 'இது முற்றிலும் தவறு', என்று முழுமையாகக் கூற முடியாத நிலையில் இருக்கிறோம். முனைவர் கலைக்கோவனின் கருத்துப்படி, இராசமாணிக்கனாருக்குக் கடைசியாகக் கிடைத்த கல்வெட்டறிக்கை 1933 ஆண்டினுடையது. அச்சமயத்தில் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலையைப் பற்றிய தெளிவான அறிவும் இருந்திருக்கவில்லை. குறுகிய சான்றுகளை வைத்து மட்டும் கருத்துக்களை கூறும் போது, பலவிதமான குழப்பங்கள் எழுவது நியாயமே. ஆசிரியரின் குழப்பத்திற்கான காரணத்தை உணர முடிந்தாலும், இன்று பல கருத்துகளைத் திண்ணமாக நிறுவும் நிலையில் நாம் இருக்கும்போதும், அக்கருத்துகளை வெளிப்படுத்தும் ஒரு புத்தகம் நம்மிடையில் இல்லாதது நினைத்து வருத்தமே எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டிடக் கலையைப் பொறுத்த மட்டில், புத்தகத்தில் விமானம் கும்பமெனக் குறிக்கப்பட்டு, விமானத்தின் உறுப்புகளை அடையாளம் காண்பதில் சற்றே குழப்பம் தெரிகிறது. அந்த காலகட்டத்தில், கட்டிடக் கலையைப் பற்றி அறிய ஐரோப்பியர்கள் எழுதிய புத்தகங்களே இருந்தன. அப்புத்தகங்களும் மிகக் குழப்பம் தரக் கூடியனவாக இருந்ததால், இராசமாணிக்கனாருக்கு இருந்த குழப்பத்தில் வியப்பொன்றுமில்லை. இருப்பினும் காஞ்சி கைலாசநாதர் கோயிலே பிற்காலத்தில் இராஜராஜீஸ்வரம் அமைய அடிப்படையாய் அமைந்தது என்னும் உண்மையை உணரும் அளவிற்கு அவரது கட்டிடக்கலையறிவு இருந்தது தெளிவாகிறது. பிற்காலப் பல்லவரை, மகேந்திரனில் தொடங்கி, நரசிம்மன், பரமேசுவரவர்மன், இராசசிம்மன், இரண்டாம் நந்திவர்மன், தந்திவர்மன் (பொருளடக்கத்தில் இவரை நந்திவர்மனாக்கியிருக்கிறார்கள்), மூன்றாம் நந்திவர்மன், நிருபதுங்கவர்மன் என்று ஒவ்வொருவராக நமக்கு அறிமுகப்படுத்தி, அவர் ஆட்சியில் நடந்த போர்கள், சமய நிலை, கலைகளின் நிலை ஆகியவற்றை சுருக்கமாகக் கூறியபின், பல்லவரின் ஆட்சி முறையையும், அக்கால சமய நிலையையும், இசை, ஓவியம், சிற்பம், நடனம் போன்ற நுண்கலைகளைப் பற்றியும், இலக்கியங்களைப் பற்றியும் விரிவாக எழுதுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கால நாட்டுப் பிரிவு, வரிகள், மரங்கள், மருந்துச் செடிகள், நீர்ப்பாசன வசதிகள், நீட்டல், முகத்தல் மற்றும் நிறுத்தல் அளவைகள், காசுகள், அக்காலத்தில் நிலவிய பஞ்சங்கள் முதலியன தெளிவாகவும் விரிவாகவும் வரையப்பட்டுள்ளன. பஞ்சத்தைப் பற்றி எழுதும் பொழுது, "சமயக் குரவர் திருவீழிமழலைப் பெருமானை வேண்டிக் காசு பெற்று அடியாரை உண்பித்தனர் என்ற பெரிய புராணச் செய்தியை, "கோயில் பண்டாரம் அடியார் உணவுக்காக பொற்காசுகள் நல்கியது", என்று விளக்குவதன் மூலம் அவருடைய pragmatic and realistic approach தெரிய வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கால சமய நிலையை அழகாக இலக்கிய பின்புலத்தின் மூலம் படம் பிடித்து, திருமுறைகள், திவ்யபிரபந்தம், பெரிய புராண குறிப்புகளைக் கொண்டு, சமண சமய வீழ்ச்சியையும், சைவ சமயம் தழைத்ததையும் விளக்கியிருக்கும் பகுதி மிகவும் சுவையானது. ஊன்றிப் படிக்கப்பட வேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;பல்லவர் கோநகரமாம் காஞ்சியைப் பற்றிய செய்திகளுடன் புத்தகம் நிறைவு பெறுகிறது. பல தரவுகளைத் தொகுத்தும், வகைப்படுத்தியும் எழுதப்பட்ட புத்தகமானது, பல புதிய செய்திகளையும், ஆய்வாளர் உழைக்க ஏதுவான பல தொடக்கங்களையும் (உதாரணமாக மூன்றாம் நந்திவர்மனைக் கழற்சிங்க நாயனாராகக் கொள்ளுதல், இராசசிம்மனின் கல்வெட்டையும் பூசலார் கதையில் பல்லவ மன்னன் வான் ஒலி கேட்ட கதையையும் இணைத்திருத்தல்) அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1944-இல் வெளியான பதிப்பு செம்பதிப்பாக இருப்பதாக கூறுகிறார் முனைவர் கலைக்கோவன். சில ஆண்டுகள் முன் வெளி வந்திருக்கும் மறுபதிப்பில் எழுத்துப் பிழைகளும், தொடர் பிழைகளும் கணக்கிலடங்கா. தந்திவர்மரை நந்திவர்மராக அச்சிடுவதால் எத்தகைய குழப்பம் நேரிடும் என்பதைச் சொல்லி அறிய வேண்டியதில்லை. ஓரிடத்தில் நரசிம்மன் தேவர்களை அமைத்தான் என்று இருப்பது கண்டு குழம்பினாலும், தேர்களைத்தான் தேவர்களாக்கியிருக்கிறார்கள் என்று உணர்ந்த பொழுது சிரிப்புதான் வந்தது. புத்தகத்தின் மேற் பகுதியில், ஒரு பக்கம் 'பல்லவர் வரலாறு' என்ற நூற் பெயரும், அடுத்த பக்கத்தில், அப்பக்கத்திற்குத் தொடர்பான தலைப்பும் இருக்குமாறு அச்சிடப்பட்டுள்ளது. நூலின் பாதிக்கு மேல் (இராசசிம்மனைப் பற்றி எழுதியிருப்பதற்கு பிறகு) சமண சமயத்தைப் பற்றிய தலைப்புகள் இடம் பெற்றிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எழுத்துப் பிழைகள் கவனக் குறைவால் நிகழ்வன. வேறொரு புத்தகத்தின் தலைப்புகளை இப்புத்தகத்தில் நுழைக்குமளவிற்கா கவனக்குறைவு ஏற்படும்?&lt;br /&gt;&lt;br /&gt;பல்லவரைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களுக்கு, எளிய முறையில் எழுதப்பட்ட புத்தகமான 'பல்லவர் வரலாறு' மா.இராசமாணிக்கனாரின் உழைப்பின் தரத்தையும், அறிவின் திறத்தையும் உணர்த்த, 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்', என்பது போல அமைந்துள்ளது. ஆந்திரத்தில் பிறந்து, இளமையில் தெலுங்கு மொழியே கற்ற இராசமாணிக்கனாரைத் தமிழன்னை தன் பணிக்கு வேண்டி அழைத்துக் கொண்டதற்கு வேண்டி உளமாற என் நன்றிகளைத் தமிழன்னைக்குச் செலுத்துகிறேன். இந்நூல் இப்பொழுது பதிப்பாளரிடம் (திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்) கிடைக்காத நிலையில் அடுத்த பதிப்பைப் பெறும் என்று நம்புகிறேன். அப்பதிப்பாவது பிழையின்றி இருத்தல் வேண்டி இறைவனைத் தொழுகிறேன். தந்தையார் விட்ட இடத்தில் தொடங்கி பல புதிய தகவல்களைக் தந்தும், பல தவறான கருத்துகளைத் திருத்தியும் 'சரித்திரம் படைக்கும்' முனைவர் கலைக்கோவன், இந்நூல் வெளியானதற்குப் பின் வந்த தரவுகளையெல்லாம் தொகுத்து, பழைய வரலாற்றைப் புதியதொரு பரிமாணத்தில், தமிழுலகின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில், முழுமையாக எழுத வேண்டும் என்ற வேண்டுகோளை, அந்நூலால் பயன் பெறும் பல்லாயிரக்கணக்காண வரலாற்றுத்துறை மாணவர்களின் சார்பாக வைக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9662309-114253914706609893?l=classical-music-review.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://classical-music-review.blogspot.com/feeds/114253914706609893/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9662309&amp;postID=114253914706609893' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/114253914706609893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/114253914706609893'/><link rel='alternate' type='text/html' href='http://classical-music-review.blogspot.com/2006/03/blog-post.html' title='மா.இராசமாணிக்கனாரின் &apos;பல்லவர் வரலாறு&apos; - ஒரு பார்வை'/><author><name>லலிதாராம்</name><uri>http://www.blogger.com/profile/01372586935352216447</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9662309.post-113939766243224755</id><published>2006-02-08T03:12:00.000-08:00</published><updated>2006-02-17T07:04:26.153-08:00</updated><title type='text'>லேட்டாகவும் லேட்டஸ்டாக இல்லாமலும்....</title><content type='html'>மிகவும் காலம் தாழ்த்தி இதை எழுதுவதற்கு முதற்கண் என்னை மன்னிக்க கோருகிறேன். எழுதாமல் விட்டுவிடுவோம், நாதோபாசனா கூட கேட்டுக் கேட்டு அலுத்து, தண்ணி தெளித்துவிட்டிருப்பார் என்றுதான் பலமுறை தோன்றியது. இருப்பினும் அவ்வப்போது நினைத்துக் கொள்ளும் போது கூட மெய் சிலிர்க்க வைக்கும்படி அமைந்த கச்சேரியை இணைய நல்லுலகில் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் என்ற எண்ணமும் அவ்வப்போது ஓங்கும். இன்று அந்த எண்ணம் சற்று அதிகமாகவே ஓங்கியது உங்களது அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா? நானறியேன். என் கடன் இங்கு கொட்டித் தீர்த்துவிடுவது. அதன் பின் யாராவது திட்டித் தீர்த்தாலும் என் மனம் நிறைவாகவே இருக்குமென்றுதான் நினைக்கிறேன். over to kalarasana.......&lt;br /&gt;&lt;br /&gt;2004 டிசம்பர் 24-ஆம் தேதி கலாரசனாவில் சஞ்சய், திருச்சி சங்கரன், நாகை முரளிதரன் ஆகியோரில் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. 6.15 மணிக் கச்சேரிக்கு 6.00 மணிக்கு எட்டு பேராக நாங்கள் சென்ற போது, ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் டிக்கட்டுகள் அனைத்துமே காலியாகியிருந்தது. எட்டு பேருக்கு இரு நூறு ரூபாய் டிக்கட் வாங்க மனமில்லாமல் மாம்பலத்தில் நடந்த சேஷகோபாலனின் ஃப்ரீ கச்சேரிக்குச் சென்றோம். கர்நாடக இசைக் கச்சேரிகள் கூட ஹவுஸ் ஃபுல் ஆவதைக் கண்டு நான் மகிழ்ந்தாலும், சஞ்சயின் கச்சேரியைக் கேட்க முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தமே. இம்முறையும் அதே தேதி, அதே பக்கவாத்தியங்களுடன், அதே இடத்தில் கச்சேரி ஏற்பாடாகி இருந்தது. வாய்ப்பை நழுவ விட விரும்பாமல், 3.30 மணிக்கு ஏற்பாடாக இருந்த எம்.எஸ்.ஷீலாவின் கச்சேரிக்கே ராணி சீதை ஹாலில் ஆஜராகி, 3.00 மணிக்கே சஞ்சயின் கச்சேரிக்கு டிக்கெட்டும் வாங்கிவிட்டோம். எம்.எஸ்.ஷீலா பாடிய மலஹரி ராகமும் ஸ்வரங்களும், அந்த ராகத்தில் இத்தனை பிரயோகங்கள் இருக்கிறதா என்று வியக்க வைத்தன. அன்றைய மெய்ன் ஐட்டமான தோடியும் பைரவியும் மிகச் சிறப்பாக, அளவாக அமைந்தன. பக்கவாத்தியம் வாசித்த அக்கரை சுப்புலட்சுமியின் வாசிப்பு அவரை நிழலெனத் தொடர்ந்து கச்சேரிக்கு அழகு சேர்த்தது. பேருக்கு வாசித்த தனி ஆவர்த்தனத்துடன் ஷீலாவின் கச்சேரி முடிய, அடக்க முடியா ஆவலுடன் சஞ்சயின் கச்சேரியை எதிர் நோக்கி அமர்ந்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தரை மணி வாக்கிலேயே வித்வான்களெல்லாம் ஆஜர் ஆகி, 6.14-க்கு ஆபோகி வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பமானது. வர்ணம் முடிவதற்குள் கலைஞர்கள் மற்றும் இரசிகர்களின் திருப்திக்கு அரங்கின் ஒலி அமைப்பு அமைந்தது அதிர்ஷ்டம்தான். மாயாமாளவ கௌளையின் சிறிய கீற்றுக்குப் பின் 'துளசி தள' பாடினார். 'ஸரஸீருக புன்னாக' என்ற இடத்தில் நிரவல் மற்றும் கல்பனை ஸ்வரங்கள் பாடினார், விறுவிறுப்பான சஞ்சயின் கற்பனைகளுக்கு முரளீதரனின் ஸ்வரக் கணைகள் தக்க வகையில் பதிலளித்தபடியிருந்தன. நிரவல் என்பது ஒரு வரியை எடுத்துக் கோண்டு ராகத்தின் பரிமாணத்தைக் காட்டும் சமாசாரம்தான். அங்கு ராக ஸ்வரூபத்துக்கே முதலிடம் என்பதில் ஐயமில்லை. அதற்காக என்ன பாடுகிறார் என்ற புரியாத வகையில் சில அழகிய இடங்களைப் பாடினால்தான் ராக ஸ்வரூபம் வெளிப்படுமா? அல்லது வார்த்தையும் புரிந்து அவ்விடங்களையும் பாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாயாமாளவகௌளையிலேயே சஞ்சயின் குரல் நல்ல நிலையில் இருப்பது தெரிந்தது. அன்றைய தினம் அவர் பாடிய பிருகாக்களெல்லாம் spot on. மாயாமாளவகௌளையை தொடர்ந்து ஆலாபனை செய்த ராகம் கொஞ்சம் சங்கராபரணம், கொஞ்சம் பூர்ணசந்திரிகா போலெல்லாம் எனக்கு பூச்சி காட்டிவிட்டி "நான்தான் ஜனரஞ்சனி, என்னைக் கண்டு பிடிக்க இவ்வளவு நேரமா?", என்றது. ஜனரஞ்சனியில் "நாடாடின மாட" பாடியபின், முதல் sub main-ஆக சாவேரியை எடுத்துக் கொண்டார். சாவேரி நல்ல பாவப்பூர்வமான ராகம். இந்த மாதிரியான ராகங்களில் இரண்டு மூன்று சஞ்சாரங்கள் அனைவர் மனதிலும் தோன்றும், பாடகரின் ஆலாபனையும் அதே சஞ்சாரங்களை ஒட்டி இருக்கும் போது ஆலாபனையே cliche-ஆகத் தோன்றும். அப்படியல்லாமல் பிரதானமான சஞ்சாரங்களினூடே பல கோவைகளை நுழைத்து ஆலாபனையில் ஒரிடத்தில் நின்றால் அடுத்து தாவும் இடம் மேல் நோக்கியா அல்லது கீழ் நோக்கியா என்று அனுமானிக்க முடியா வகையில் ஆலாபனையை எடுத்துச் சென்றதற்கு ஒரு SPECIAL சபாஷ். சஞ்சயின்  ஆலாபனையில் சிறப்பு அம்சமே அவர் ராகத்தை அடுக்கடுகாய் வளர்க்கும் போது, ஒரு அடுக்குக்கும் அடுத்ததற்கும் கொடுக்கும் இடைவெளி, அந்த இடைவெளி அவர் பாடியதை மனதில் வாங்கிக் கொள்ள இரசிகர்களுக்கு உதவுகிறது. அந்த இடைவெளியில், எத்தனை அரிய, கடினமான இடமாகயிருந்தாலும் நாகை முரளீதரனின் வில் அதை அப்படியே கன கச்சிதமாய் ஃபாலோ செய்தது. கச்சேரிக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் போது, பாடகர் ஐந்து நிமிடம் ராகம் பாடினால், வயலினிஸ்ட் மூன்று நிமிடம் வாசிக்கலாம் என்பது, unwritten law. அந்த மூன்று நிமிடத்துக்கள் ஐந்து நிமிட ஆலாபனையை precise writing செய்து கேட்பவர்களுக்கு பாடகர் ஆலபனை அளித்த நிறைவையே அளிப்பதென்பது சிலரால் மட்டுமே முடிந்த கலை. அதில் இன்றைய தலை சிறந்த வித்வானாக விளங்குபவர் நாகை முரளீதரன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அன்று அவர் வாசித்த சாவேரியே அதற்குச் சான்று. சாவேரியில் அமைந்த தமிழ்ப் பாடலான (தமிழ் மாதிரிதான் இருந்தது) "முருகா முழு மதி" என்ற பாடலைப் பாடிய பின், பிரதான ராகமாக சங்கராபரணத்தை இழை ஓடவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;steady-ஆன காந்தாரத்தைற்கும் ஊஞ்சலாடும் ரிஷபத்திற்கும் இடையில் அழகிய பாலமமைத்து, சில ஸ்வரங்கள் அந்தப் பக்கம், சில ஸ்வரங்கள் இந்தப் பக்கம் என்று தோரணம் கட்டி, மேலும் கீழுமாக பாலத்தில் சங்கராபரண ராகத்தை ஓடி விளையாடி வைத்தார் பாருங்கள்...த்சொ..த்சொ...வர்ணிக்க வார்த்தையில்லை. ஆங்காங்கே சில westernised பிரயோகங்களையும் புகுத்தி ஆலாபனையில் சுவாரஸ்யப் படுத்தினார். காந்தாரம், பஞ்சமம், தார ஸ்தாயி ஷட்ஜம் என்ற ஸ்வர ஸ்தானங்களில் எல்லாம் நின்றபடியும், அவற்றை சுற்றி சுற்றி தட்டாமலை சுற்றியபடியும் படிப்படியாய் வளர்ந்த ராகம், சங்கராபரணத்தின் முக்கிய இடமான தார ஸ்தாயி காந்தாரத்தை நோக்கி நகர்ந்தது. சஞ்சயின் குரலில் ஒரு குறை என்னவென்றால், மேல் ஸ்தாயிக்குச் செல்லச் செல்ல கம்மலாகிவிடுகிறது. அதனால், கணீரென்று கேட்க வேண்டிய காந்தாரம் சிறிய கீற்றாய் கேட்டது. அந்த குறையை மட்டும் நீக்கிவிட்டுப் பார்த்தால், அழகிய நிறைவான, விறுவிறுப்பான ஆலாபனையாகவே அமைந்தது. ஆலாபனையை முடிக்கும் தருவாயில் 'ஸ்வர ராக சுதா' என்ற கீர்த்தனைக்கேவுரிய சில சங்கதிகளை ஆலாபனையுள் கலந்தளித்த தான் பாடப்போகும் பாடலைக் குறிப்பால் உணர்த்தினார். காலம் காலமாக கையாளப்படும் ராகமான போதிலும் புதிய கலவைகளுக்கும், கோவைகளுக்கும் இன்னும் இடமுண்டு என்று முன் மொழிந்த சஞ்சயின் ஆலாபனையை ஆமோதிக்கும் வழிமொழியலாக நாகை முரளீதரனின் ரெஸ்பான்ஸ் அமைந்தது. அவர் நினைத்திருந்தால் தார ஸ்தாயியில் சஞ்சய் பாடாததையெல்லாம் வாசித்து பாடகருக்குய் எட்டாத இடத்தையெல்லாம் தொட்டு அப்ளாசை அள்ளியிருக்கலாம். அப்படிச் செய்யாதது, பாடகர் பாடிய அழகான இடங்களை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டு காட்டுவது போல வாசித்தது, அவரின் முதிர்ச்சியியைக் காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு களையில் விளம்பமான காலப் பிரமாணத்தில், திருச்சி சங்கரனின் தனி ஆவர்த்தனத்துக்கு ஏற்ற தாளக் கட்டில் அமைந்திருந்த 'ஸ்வர ராக சுதா' பாடலை சற்று ஆச்சரியப்படும் வகையில் பாடினார். என்ன ஆச்சரியம் என்றுதானே கேட்கிறீர்கள்? வார்த்தைகள் ஓரளவு சற்றே புரிந்ததுதான் ஆச்சரியம். உண்மையில் சொல்லப் போனால், சஞ்சயின் கீர்த்தனை பாடும் முறை அடிப்படையில் அத்தனை மோசமாக இல்லை. பாடலில் சங்கதிகள் வளர வளர, அல்லது நிரவலில் ராக ஸ்வரூபம் பிரவாகமாக ஓடும்போது, அவரையும் அறியாமல் ராகத்தின் பால் ஈர்க்கப்பட்டு வார்த்தைகளுக்கு step motherly treatment கொடுத்துவிடுகிறார். இந்த நிலை மட்டும் சற்று மாறினால், சஞ்சயைப் போலப் பாட ஆளேயில்லை என்று கூட சொல்லக் கூடிய நிலை வரலாம். சங்கராபரண பாடலில் 'மூலாதார' என்ற சரணத்தை நிரவல் செய்யாமல் தாண்டியதும், கீர்த்தனையை நிறைவு செய்தவுடன் மீண்டும் வருவார் என்றுதான் நினைத்தேன். எதிர்பாராத வகையில் 'குறுதே மோக்ஷமுரா' என்ற இடத்தில் கற்பனை ஸ்வரங்கள் பாட ஆரம்பித்தும், அரங்கம் ஒருமுறை நிமிர்ந்த உட்கார்ந்தது. அந்த ஸ்வரங்களுக்கு முன் 'முத மகு மோக்ஷமுரா' என்ற இடத்தில் பாடிய சங்கதிகள் ஒவ்வொன்றும் அதி அற்புதமாக அமைந்தது. கல்பனை ஸ்வரங்களை முதல் காலத்திலும் பின்பு இரண்டாம் காலத்திலும் பாடியபின், திஸ்ரக் குறைப்பு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; திஸ்ரக் குறைப்பு என்றால் என்ன என்றுதானே கேட்கிறீர்கள். எனக்கு ஓரளவு இந்த லய விவகாரங்கள் புரிந்தாலும், சரியாகச் சொல்ல வருமா தெரியவில்லை. இருந்தாலும் முயற்சிக்கிறேன். குறைப்பு என்பது, அந்த சொல் உணர்த்துவது போலவே எதன் அளவையோ குறைக்கிறது. எதன் அளவை? ஸ்வரம் பாடும் போது, அந்த பாடலில் தாளத்தின் அளவிற்கோ, அல்லது அத்தாளத்தின் அளவின் multiple-ஆகவோ பாடினால்தான், ஸ்வரத்திலிருந்து சாஹித்யத்துக்குச் செல்லும் transition smooth-ஆக இருக்கும். (சிந்து பைரவி படத்தில் மஹா கணபதிம் பாடலில் 'ச ரி க மஹாகணபதிம்', என்று ஆரம்பித்து பல ஸ்வரக் கோவைகள் பாடுவாரே யேசுதாஸ். நியாபகம் இருக்கா?) அப்படி ஸ்வரம் பாடும்போது, ஒரு க்ளைமாக்ஸ் அல்லது crescendo build செய்வதற்கான ஒரு வழிதான் குறைப்பு என்பது. ஸ்வரத்துக்குப் பின் சாஹித்யத்துக்குச் செல்லாமல், ஒரு ஸ்வரத்தையே resting point-ஆக வைத்துக் கொண்டு, முதலில் அந்த கீர்த்தனையின் தாளத்தின் அளவுக்குப் பல ஸ்வரக் கோவைகள் பாடி, அதன் பின் அந்த கால அளவை இரண்டால் வகுத்து, பின்பு அதை இரண்டால் வகுத்து, பின்பு அதை இரண்டால் வகுத்து....இப்படி எத்தனை முறை வகுக்க முடியுமோ அத்தனை முறை வகுத்துக் கால அளவைக் குறைத்துக் கொண்டே செல்வதன் பெயர் குறைப்பு. தேர்ந்த வித்வான்கள் பாடும் போது குறைப்பில் பல complex calculations நிறைந்திருக்கும். சரி...அப்போ திஸ்ரக் குறைப்பு-னா? குறைப்பு, ஒவ்வொரு ரவுண்டின் முடிவினிலும் தாளத்தின் நடையை மாற்றும் போது, அந்த நடையைப் பொறுத்து குறைப்புக்கு முன் suffix முளைக்கிறது. நடை மிஸ்ரமாக மாறினால் மிஸ்ரக் குறைப்பு, திஸ்ரமாக மாறினால் திஸ்ர குறைப்பு. சரி..இப்போ நடைனா என்னனுதானே கேட்கிறீங்க? அது வேறொரு சமயத்தில் பார்ப்போம். அப்படி அடக்க முடியா ஆர்வத்தில் இருப்பவர்கள் தனி மடல் அனுப்பவும். இல்லையேல் இணையத்தில் basics of laya/taaLa என்று தேடினால் நிச்சயம் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க வுட்டேன்?...ஆங்...திஸ்ரக் குறைப்பு செய்து கோர்வை வைத்து ஸ்வரத்தை முடித்து தனி ஆவர்த்தனத்துக்குவிட்டார். திருச்சி சங்கரனின் வாசிப்பைப் பற்றி ஏற்கெனவே நிறைய சொல்லியாகிவிட்டது. அன்று வாசித்த தனியில் முதல் காலத்துக்கும் இரண்டாம் காலத்துக்கும் மாறி மாறித் தாவியபடி வாசித்த லாவகமும், வழக்கமாய் வாசிக்கும் டேக்கா சொல்லும், மிஸ்ர நடையும், திஸ்ர நடையில் வைத்தக் கோர்வையும் கச்சேரியை மற்றுமொரு தளத்திற்கு ஏற்றிவிட்டது என்றுதான் கூற வேண்டும். இந்த சீஸனில் சங்கரனின் நான்கு தனி ஆவர்த்தனங்கள் கேட்க முடிந்தது. நான்குமே ஆதி தாளம் இரண்டு களையில். ஒன்றின் சாயல் மற்றொன்றில் சற்றும் விழாமல் வாசித்தார் என்று கூறினாலே அவரின் வித்தை உங்களுக்குப் புரிந்துவிடும். ஜி.என்.பி, அரியக்குடி, ஆலத்தூர், மதுரை மணி, பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்புடு போன்ற ஜாம்பவான்கள் ஒருவரையும் நேரில் கேட்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்று என் மனம் ஏங்காத நாளில்லை. இருப்பினும், சங்கரனின் கச்சேரிகளைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்கிறதே என்பதை நினைத்து சந்தோஷப்படாத நாளுமில்லை என்றுதான் கூற வேண்டும். கர்நாடக இசையுலகில் அரங்கேறி பொன் விழா கண்டிருக்கும் அம்மேதை இன்னும் பல காலம் நீடூழி வாழ்ந்து அனைவரையும் மகிழ்விக்க மனமார பிரார்தித்துக் கொள்கிறேன். டி.என்.சேஷகோபலன் சொன்னதைப் போல, "தியாகராஜர் இவரின் வாசிப்பை திர்க்க தரிசனத்தின் உணர்ந்துதா "நாத தனுமநிசம் சங்கரம்" என்று பாடினாரோ" என்று கூடத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கராபரணத்தைத் தொடர்ந்து கேட்பதற்கரிய ராகமான தானரூபியைக் சுருக்கமாக ஆலாபனை செய்து கோடீஸ்வர ஐயரின் தமிழ் கீர்த்தனையைப் பாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று பாடிய சங்கராபரணத்தையும் சாவேரியையும் தாண்டி என்ன அப்படிப் பாடவிட முடியும் என்று ஒரு கணம் நினைத்தேன். ஒரு கணம்தான் நினக்க நேரமிருந்தது. சஞ்சய் ஆபோகியைத் தொடங்கியதும் அந்த நினைப்பு அரவே நீங்கியது. வர்ணம் பாடிய ராகத்தில் ராகம் தானம் பல்லவி பாடுவது என்பது ஒரு சம்பிரதாயம். அன்று ஆபோகி வர்ணத்தில் கச்சேரி தொடங்கியதால், அபோகியின் ஒரு இழை வெளிப்பட்டதுமே 'ராகம் தானம் பல்லவி' பாடப் போகிறார் என்று தெரிந்துவிட்டது. ஆபோகியைப் போன்ற கம்பீரமும், ரக்தியும் நிறைந்த ராகத்தை யார் பாடினாலும் நன்றாக இருக்கும். கற்பனைக்கு குறைவில்லா சஞ்சயின் குரலும் நினைத்ததெல்லாம் பேசக் கூடிய நிலையில் அன்று அமைந்துவிட்ட போது கேட்கவா வேண்டும். முதலில் மழைத்துளியாய் விழுந்து பின்பு பிரவாகமாய் மாறி, அவர் தார ஸ்தாயி ஷட்ஜமத்தைத் தொட்டதும் மடை திறந்து அரங்கெங்கும் ஓடியது. ஷட்ஜமத்தில் நின்று கொடுத்த கார்வைகள் என் நினைவிலிருந்து என்றென்றும் அகலாது என்றுதான் நினைக்கிறேன். கச்சேரியின் மற்ற உருப்படிகளை எப்படியோ வர்ணித்துவிட்டேன். சத்தியமாகச் சொல்கிறேன்! அன்றுஇ சஞ்சய் பாடிய ஆபோகியின் அழகையும், ஆதிதாளம், முக்கால் இடம் offset-இல் அமைந்த 'சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா' என்ற பல்லவி நிரவலையும், அதில் செய்த அனுலோம பிரதிலோம ஜால வித்தைகளையும், ராகமாலிகையும், வர்ணிக்க இன்னும் உவமைகள் உருவாக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ராகம் தானம் பல்லவி முடிந்த போது அரங்கமே ஸ்தம்பித்துப் போன நிலையில் இருந்தது. பல்லவியைப் பாடி முடித்த போது ஆபோகியின் தாக்கம் ரசிகரை மட்டுமல்ல, பாடகரையும்தான் கட்டிப் போட்டுவிட்டது. அதனால் ஆபோகியை கைவிட முடியா கலைஞராய் "கிருபாநிதி" என்று அனுபல்லவியில் ஆரம்பித்து, கோபாலகிருஷ்ணபாரதியின் பிரபல பாடலை (சபாபதிக்கு) சஞ்சய் பாடிய போது அரங்கம் அதிர்ந்தது. கல்யாணி ராகம் எப்படி இரண்டு பிராதன ராகங்களுக்கு இடையில் ஒரு brisk filler-ஆகவும் பாடப்பட்டு, அதே சமயத்தில் பிரதானமாகவும் மிளிர்வதைப் பற்றி முன்பு கூறியிருந்தேன். துக்கடாவாகப் பாடுவதற்கும் ஏற்ற ராகம் கல்யாணி என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே பாபனாசம் சிவனின் "தேரில் ஏறினான்" பாடலை சஞ்சய் பாடினார் போலும். பாடலின் சங்கதிகள் கண்ணனின் கம்பீர வீதி உலாவை அழகாகச் சித்தரிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. அதன் பின் பாடிய&lt;br /&gt;&lt;br /&gt;2005 டிசம்பரில் கிட்டத்தட்ட 30 கச்சேரிகள் கேட்ட நிலையில், இந்தக் கச்சேரி என்னுள் ஏற்படுத்திய மகிழ்ச்சிக்கு இணையாக வேறெந்தக் கச்சேரியையும் சொல்லமுடியாது. விறுவிறுப்பு, அபூர்வ ராகங்கள், அபூர்வ பிரயோகங்கள், அழகு சொட்டும் கமகங்கள், நெருடலான கணக்குகள், அற்புதமான பக்கவாத்யங்கள் என்று ஒரே கச்சேரியில் எல்லாம் அமைவது அபூர்வம். அன்று அமைந்தது என் பாக்யம். அடுத்த வருடம் அதே இடத்தில், அதே நேரத்தில், அதே கலைஞர்களின் கச்சேரி நடை பெருமெனில், நிச்சயம் என்னை அங்கு காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மகேந்திரனின் பட்டப் பெயர்கள், போன மாத திருவையாறு யாத்திரை, இந்த மாத காஞ்சி பயணம் பற்றி எல்லாம் எழுதணும்....பார்ப்போம்.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9662309-113939766243224755?l=classical-music-review.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://classical-music-review.blogspot.com/feeds/113939766243224755/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9662309&amp;postID=113939766243224755' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113939766243224755'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113939766243224755'/><link rel='alternate' type='text/html' href='http://classical-music-review.blogspot.com/2006/02/blog-post.html' title='லேட்டாகவும் லேட்டஸ்டாக இல்லாமலும்....'/><author><name>லலிதாராம்</name><uri>http://www.blogger.com/profile/01372586935352216447</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9662309.post-113760694872591301</id><published>2006-01-18T09:54:00.000-08:00</published><updated>2006-01-18T22:41:51.546-08:00</updated><title type='text'>மஹாவைத்தியநாத சிவன்</title><content type='html'>கர்நாடக இசை உலகில், வைத்தியநாதன் என்ற பெயருடையவர் கோலோச்சுவது காலம் காலமாய் நடக்கும் ஒன்று. சிவகங்கையைச் சேர்ந்த சின்ன வைத்தி, பெரிய வைத்தி, செம்பை வைத்தியநாத பாகவதர் முதல் குன்னக்குடி வைத்தியநாதன் வரை யாவரும் இதில் அடக்கம். இப்படிப்பட்ட வரிசையில், 'மஹா' வைத்தியநாதனாக விளங்குபவர் வையச்சேரி வைத்தியநாத ஐயர். &lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சாவூர் ஜில்லாவில், வையச்சேரி என்ற ஊரில், பஞ்சநாத ஐயருக்கும் அருந்ததி அம்மாளுக்கும் மூன்றாவது மகனாக, 1844-ஆம் ஆண்டு, மே மாதம், 26-ஆவது நாள் பிறந்தவர் மஹா வைத்தியநாத சிவன். இவரது தாயார், இரண்டாம் சரபோஜி மன்னரின் ஆதரவில் பல கீர்த்தனைகள் புனைந்த ஆனை-ஐயா சகோதரர்களின் பரம்பரையில் வந்தவர். இவரது தந்தை பஞ்சநாத ஐயரும், இசையில் ஆழ்ந்த அறிவும் மிகுந்த ஈடுபாடும் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட தம்பதியினருக்குப் பிறந்த வைத்தியநாத ஐயர் இசையில் ஆர்வம் காட்டியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வையச்சேரி வைத்தியநாதன் மஹாவைத்தியநாதனாக வளர்ந்து பெரும் புகழ் அடைந்ததில் முக்கிய பங்கு அவரது தமையன் ராமாசாமி ஐயரைச் சேரும். இச்சகோதரர்களை, 'இரட்டையர்' என்றே அனைவரும் அழைத்தனர். சிறு வயது முதலே, இருவரும் ஆன்மீகத்திலும், சங்கீதத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு காட்டினர். இதனை உணர்ந்த பஞ்சநாத ஐயர், அப்பொழுது ஆட்சியில் இருந்த மராட்ட மன்னர் இரண்டாம் சிவாஜியின் சபைக்கு அடிக்கடி அழைத்துச் சென்றார். இதனால், பல அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, அச் சிறுவர்களுக்குக் கிட்டியது. இந்தப் பயணங்களின் போதெல்லாம், தஞ்சைக்கு அருகிலிருந்த 'மஹாநோம்புச் சாவடியில்' (இக்காலத்தில் மனம்புச் சாவடி) இருந்த வெங்கட சுப்பையரின் வீட்டில் தங்கி, தியாகையரின் சிஷ்யரான அவரிடம் பாடம் கேட்கும் வாய்ப்பும் அச் சிறுவர்க்ளுக்குக் கிட்டியது. இதனால், அந்நாளில் அரிதாக விளங்கிய பல ராகங்களில் அமைந்த தியாகையர் கீர்த்தனங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் இவர்களுக்குக் கிட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt; மஹாவைத்தியநாத ஐயருக்கு ஏழு வயதில் உபநயனம் நடந்தது. அதில் கலந்து கொண்ட சிவகங்கை சின்ன வைத்தி, பெரிய வைத்தி போன்ற பல சங்கீதச் சக்கரவர்த்திகள் முன்னிலையில், தந்தையாரின் கட்டளைக்கு இணங்க, ராமசாமி - வைத்தியநாதன் சகோதரர்கள் பாடினார்கள். அவர்களது இசை, அறிஞர்களையும் பிரமிப்படைய வைக்கும் வகையில் அமைந்திருந்தது. இது நிகழ்ந்த சில மாதங்களில் வாசுதேவ ஐயங்கார் என்ற செல்வந்தரின் கிரஹ பிரவேசம் நடந்தது. அதற்காக, ச்¢வகங்கை வைத்தி சகோதரர்களின் கச்சேரியை ஏற்பாடு செய்யச் சென்றிருந்த ஐயங்காரிடம் வையச்சேரி ராமசாமி-வைத்தியநாதன் சகோதரர்களின் இசை வன்மையைப் பற்றி, பெரிய வைத்தியநாத ஐயர் பிரஸ்தாபித்து, அவர்களுடைய கச்சேரியையும் ஏற்பாடு செய்தார். இதுவே மஹாவைத்தியநாத ஐயரின் முதல் கச்சேரி என்று கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; முதல் கச்சேரிக்குப் பின் ராமசாமி-வைத்தியநாதன் சகோதர்களின் புகழ் தஞ்சை ஜில்லா முழுவதும் பரவியது. அதனால் தொடர்ந்து பல கச்சேரிகள் செய்ய அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. காலப்போக்கில் வைத்தியநாதன் பாடகராகவும், அவரது தமையன் ராமசாமி, தமிழ்ப் பண்டிதராகவும் சிறந்து விளங்கினார்கள். பத்துப் பிராயமே நிரம்பிய பாலகனான வைத்தியநாதனின் கச்சேரிகள், புதுக்கோட்டை, மதுரை, எட்டையபுரம், ராமநாதபுரம் போன்ற சமஸ்தானங்களில் இடைவிடாது நிகழ்ந்து கொண்டிருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt; வைத்தியநாதனுக்கு 'மஹா வைத்தியநாதன்' என்ற பட்டம் கிடைத்ததைப் பற்றிய குறிப்புகளுள் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. 'தமிழ்த் தாத்தா' உ.வே.சா-வின் குறிப்பின்படி, 1856-ஆம் ஆண்டு, தை மாதம், திருவாவடுதுறை மடத்தின், சின்னப் பட்டமாக விளங்கிய மேலகரம் சுப்ரமண்ய தேசிகரின் அழைப்பின் பெயரில் வைத்தியநாதனும், ராமசாமியும் கள்ளிடைக்குறிச்சிக்குச் சென்றிருந்தனர். அந்தச் சமயத்தில், நமசிவாய மூர்த்திகளின் ஜென்ம நட்சத்திரத்தையொட்டி நிகழ்ந்த விழாவில் பாடுவதற்காகச் சிவகங்கை வைத்திகள், வீணை சின்னைய பாகவதர், பிச்சுமணி பாகவதர் போன்ற சங்கீத ஜாம்பவான்கள் வந்திருந்தன்ர்.  அப்பொழுது, சிறுவனான வைத்தியநாதனை, 'சிவகங்கை வைத்திகளுக்குப் போட்டியாய்ப் பாடச் சென்னால் என்ன,' என்ற எண்ணம் சுப்ரமண்ய தேசிகருக்கு தோன்றியது. இரு தரப்பினரும் தயக்கமின்றி இசையவும், போட்டி ஆரம்பமாகியது. வீணை சின்னைய்ய பாகவதர் நடுவராகப் பொறுப்பு வகித்தார். சின்ன வைத்தியும், வைத்தியநாதனும் பல ராகங்களைச் சளைக்காமல் பாடினார்கள். நாட்டை ராகத்தைப் பாடும்பொழுது சின்ன வைத்தி அந்த ராகத்தில் பாடிய ஒரு ஸ்வரம் தவறென்று வைத்தியநாதன் கூறவும், அங்கே பெரிய சர்ச்சை மூண்டது. இறுதியில், வைத்தியநாதன் கூறியதே சரி என்று நடுவர் தீர்ப்பு கூற, சிவகங்கை வைத்திகள் தோல்வியடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டியைத் தொடர்ந்து வைத்தியநாதன் தனியாகக் கச்சேரி செய்து இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார். சில பாடல்களுக்குப் பின், சக்கரவாஹ ராகத்தில் ஆலாபனை செய்ய ஆரம்பித்தார். அக்காலத்தில், பல மேளகர்த்தா ராகங்கள் பிரபலமில்லாமல் இருந்ததால், சக்கரவாஹ ராகத்தைப் பல வித்வான்கள் கண்டுகொள்ள முடியாமல் போனதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. பெரிய வைத்தி உட்பட எவருக்கும் அந்த ராகம் புரியாததால், வைத்தியநாதன் அந்த ராகத்தை விளக்கி, தியாக்கைய்யரின் 'சுகுணமுலே' பாடலைப் பாடினார். இந்த சரித்திரப் புகழ் வாய்ந்த கச்சேரியின் நிறைவில், சிவகங்கை வைத்திகள் வையச்சேரி வைத்தியநாதனுக்குப் பட்டம் சூட்டும்படி ஆதீனத்திடம் விண்ணப்பித்தனர். அதற்கிணங்க ஆதீனமும், 'மஹா' என்ற பட்டத்தை வைத்தியநாத ஐயருக்குச் சூட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உ வே சாமிநாதையர் இப்படிச் சொல்யிருக்கிறார் என்றாலும், சுப்பைய பாகவதரின் குறிப்பில் நாட்டை ராகச் சர்ச்சையப் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. போட்டியில் இருவரும் சளைக்காமல் படினார்கள். சங்கராபரண ராகத்தில் பல்லவி பாடுகையில் மஹாவைத்தியநாத ஐயர் தன் முழுத்திறனையும் வெளிப்படுத்தினார். இதனால் மகிழ்ந்த பெரிய வைத்தியநாத ஐயர் மனமுவந்து அளித்த படமே 'மஹா,' என்கிறது அக்குறிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போலவே, மஹா வைத்தியநாத ஐயருக்கும் திருவிதாங்கூர் சபையில் வித்வானாக விளங்கிய கோயம்புத்தூர் ராகவ ஐயருக்கும் நிகழ்ந்த போட்டியைப் பற்றியும், சென்னையில் வேணு கோபால்தாஸ் நாயுடுவுக்கு எதிராக மஹாவைத்தியநாத ஐயர் பாடிய நாராயணகௌளை பல்லவியைப் பற்றியும் குறிப்புகள் கிடைக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த சமயத்தில், கொடகநல்லூர் சுந்தர சுவாமிகள் என்ற சன்யாசியிடம் ராமசாமியும், வைத்தியநாதனும் பஞ்சாக்ஷர ஜபத்தை உபதேசமாகப் பெற்றார்கள். இதனால், தங்கள் பெயர்களுக்குப் பின்னால் 'சிவன்' என்று சேர்த்துக் கொண்டு, ராமசாமி சிவன் என்றும் மஹாவைத்தியநாத சிவன் என்றும் விளங்கினர். சென்னையில் மஹாவைத்தியநாத சிவனின் முதல் கச்சேரி, அவரது 22-ஆவது வயதில் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து, பார்த்தசாரதி கோயில், மாதவப் பெருமாள் கோயில், கபாலீஸ்வரர் கோயில் போன்ற சென்னையின் பல முக்கிய இடங்களில் அவரது இசை ஒலித்த வண்ணம் இருந்த்து. புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்த சிவன், வருடம் முழுவதும், தென்னாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று பாடியவாறு கழித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;சிவனின் வாழ்வைப் பற்றி கிடைக்கும் குறிப்புகளில் வேறுபாடுகள் இருப்பினும் அவரது வித்வத்தையும், குரல்வளத்தையும் பற்றி கூறும் எல்லாக் குறிப்புகளும் ஒருமித்த கருத்தையே தெரிவிக்கின்றன. மூன்று ஸ்தாயிகளிலும் சரளமாகப் பாடக்கூடிய குரலும், ஆறு கால ப்ரமாணங்களில் அனாயசமாகப் பாடக்கூடிய ஆற்றலும், மின்னல் வேக ப்ருகாக்களை உதிர்க்கும் திறனும், அதி துரிதமாய் பாடும்பொழுதும் கமகங்கள் குலையாமல் பாடும் திறமையும் கொண்டிருந்தார் சிவன் என்று அவரது பாட்டை நேரில் கேட்டவர் பலர் கூறியிருக்கிறார்கள். மஹா வைத்தியநாத ஐயர், கீர்த்தனங்களைத் தவிர பல அரிய தாளங்களில் பல்லவிகள் அமைத்துப் பாடுவதிலும் வல்லவராக விளங்கினார். கஜ ஜம்பை, விலோகிதம், லக்ஷ்மீசம், சமடமருகம், தத்தாத்ரேயம், சிம்ஹானந்தம் போன்ற அரிய தாளங்களில் பல்லவி பாடியதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; இசைக் கச்சேரி செய்ததோடன்றி, பல கீர்த்தனங்கள் அமைத்து, சிறந்த வாகேயகாரராகவும் விளங்கினார். தமிழறிஞராக விளங்கிய ராமசாமி சிவன், பெரிய புராணம் முழுவதையும் பல கீர்த்தனைகளாக இயற்றினார். சகோதரர்கள் இருவரும் 'குஹதாச' என்ற முத்திரையை தனது கீர்த்தனங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள். மஹா வைத்தியநாத சிவன் தனது ஊரில் இருந்த நாளில் எல்லாம், தன் வீட்டு திண்ணையில் சிவ புராணக் காலக்ஷேபம் நடத்தினார். இந்த புராணங்களைக் கேட்கவும், அவற்றில் அவர் பாடிய கீர்த்தனங்களின் இனிமையில் திளைக்கவும், நிதமும் நிறைய கூட்டம் சேர்ந்தது. சிவ புராணங்கள் மற்றும் தேவாரப் பாடல்களை தினமும் அனைவரும் கேட்கும் வண்ணம் திண்ணையில் அமர்ந்து பாடினாலும், அவற்றை 'வயிற்றுப் பிழைப்புக்காக' பாடும் கச்சேரிகளில் பாடக்கூடாது என்று கருத்துடையவராக விளங்கினார்.&lt;br /&gt; &lt;br /&gt;பாடகர், வாகேயகாரர், ஹரிகதை நிபுணர் என்று பல பரிமாணங்களில் சிறந்து விளங்கிப் பல சாதனைகள் புரிந்த மஹாவைத்தியநாத ஐயரின் வாழ்வில் ஒரே ஒரு  சாதனையை மட்டும் குறிப்பிட வேண்டுமெனில், அவரது 72 மேள ராகமாலிகையைச் சொல்லலாம். இரண்டாம் சிவாஜியின் மருமகனான சகாராம் சாஹேப், மஹா வைத்தியநாதரின் இசையின் மேல் ஆழ்ந்த ஈடுபாடுடன் இருந்தார். அவரது சபையின் இருந்த 'லவனி வெங்கட ராவ்' என்ற அரசவைக் கவிஞர், 72 மேளகர்த்தா ராகங்களின் பெயர் வரும் வகையில், சகாராம் சாஹேபை புகழ்ந்து ஒரு பாடல் புனைந்தார். அப்பாடலுக்கு 72 மேளகர்த்தா ராகத்தில் இசையமைக்குமாறு மஹாவைத்தியநாதரை, சகாராம் வேண்டிக் கொண்டார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க, 72 மேளகர்த்தா ராகங்களில் அந்த பாடலை அமைத்து, நிறைய சன்மானமும் பெற்றார். சன்மானமும் புகழும் அடைந்த போதிலும், இப்படியொரு அபூர்வமான ராகமாலிகையை 'நர ஸ்துதிக்காக' அமைத்தது அவரை உறுத்திக் கொண்டேயிருந்தது. அந்த உணர்வே அவரை திருவையாற்றிலிருக்கும் 'ப்ரணதார்திஹரரின்' மேல் 72 ராக முத்திரை வருமாறு ஒரு பாடல் புனைய வைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ராகங்கள் வெறும் ஸ்வரக் கோர்வையல்ல. ஒவ்வொரு ராகத்தின் சௌந்தர்யமும் அந்த ஸ்வரங்களுக்குள் எங்கோ ஒளிந்திருக்கிறது. ஒவ்வொரு ஸ்வரத்தையும் நாம் எப்படிக் கையாளுகிறோம் என்பதில்தான் ராகம் இருக்கிறதே தவிர, வெறும் ஸ்வரங்கள் ராகமாகா. உதாரணமாக, சங்கராபரணத்துக்கும் கல்யாணிக்கும், மத்யமத்தைப் பாடாமலே பல வித்தியாசங்களைக் காட்ட முடியும். ஸ்வரத்தால் ஒரு இம்மியளவே வித்தியாசமான அடுத்தடுத்த மேளகர்த்தா ராகங்களுக்கிடையிலான ராகபாவத்திலுள்ள வித்தியாசம் தெள்ளத்தெளிவாய் வெளிவரும் வகையில் மேளராகமாலிகை அமைக்கப் பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'ப்ரணதார்திஹர ப்ரபோ' என்று தொடங்கும் இப்பாடலின் பல்லவி ஸ்ர் ராகத்தில் அமைந்திருக்கிறது. பல்லவியைத் தொடர்ந்து தில்லானாவில் வருவது போலச் சொற்கட்டுகள் வருகின்றது. அதன் பின் வரும் சரணங்களில், 72 மேளகர்த்தா ராகங்கள் ஒவ்வொன்றாய் வருகிறது. ஒவ்வொரு ராகத்தில் அமைந்த சாஹித்யமும், ஆதி தாளத்தின் இரண்டு ஆவர்த்தனங்களுக்கு வருகிறது. சாஹித்யத்தைத் தொடர்ந்து அந்த ராகத்துக்கான சிட்டை ஸ்வரம் வருகிறது. சிட்டை ஸ்வரத்துக்குப் பின் மீண்டும் ஒரு முறை சாஹித்யத்தைப் பாடி, அதனைத் தொடர்ந்து வேறொரு சிட்டை ஸ்வரம் வருவது போல் பாடல் அமைக்கப் பட்டிருக்கிறது. இரண்டாவது  சிட்டை ஸ்வரம் ஒரு ஆவர்த்தன அளவுக்கு வருகிறது. அந்த ஒரு ஆவர்த்தனத்தில், முதல் அரை ஆவர்த்தனம் அப்பொழுது பாடிக் கொண்டிருக்கும் மேள்கர்த்தா ராகத்திலும், அடுத்த அரை ஆவர்த்தனம் அதற்கு அடுத்து வரும் மேளகர்த்தா ராகத்திலும் அமைந்துள்லது. இந்த ஒரு ஆவர்த்தன சிட்டை ஸ்வரத்துக்குள், இரண்டு ராகத்துக்கும் இடையிலுள்ள வித்தியாசம் தெளிவாக வெளிப்படும் வகையில் அமைந்திருக்கிறது. பெரும்பான்மையான சிட்டை ஸ்வரங்களில், இரு ராகத்தை வேறுபடுத்தும் ஸ்வரம் இடம் பெறுகிறது. சில சிட்டை ஸ்வரங்களில் அந்த வேறுபடுத்தும் ஸ்வரம் வராமலும் இருக்கிறது. ஒரு சில மேளகர்த்தா ராகங்களே புழக்கத்திலிருந்த காலத்தில், 72 மேளகர்த்தா ராகங்களும் எழில் பொங்க ஒரே பாடலில் வலம் வருமாறு ஒரு பாடலை அமைத்திருப்பது என்பது ஒரு அமானுஷ்ய சாதனையாகும்.&lt;br /&gt;வரகூர் குருமூர்த்தி சாஸ்திரிகள் தமிழில் இப்பாடலுக்கு உரை எழுதியுள்ளார். பாடலில், ஆழ்ந்த அத்வைத தத்வங்களைக் கூறியிருக்கிறார் மஹாவைத்தியநாத ஐயர். பாடலில் ராகங்களின் பெயர்கள் திணிக்கப்பட்டது போலல்லாமல் இயற்கையாக அமைந்துள்ளது. சில இடங்களில், பொருள் குலையாமல் இருக்க, ராகத்தின் பெயர் சற்றே மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக, ஏழாவது மேளகர்த்தாவான 'சேனாவதியின்' பெயர் 'சேனாபதி' (தேவ சேனாபதி) என்று வருகிறது.  பாடலின் சரணம், இரண்டு சக்கரம் (12 ராகங்கள்) நிறைவானதும், 'ப்ரணதார்திஹர' என்ற பல்லவிக்குச் செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சரணமும், தனித்தன்மையுடனும் முழுமையுடனும் இருப்பதால், கச்சேரிகளில் பாடும் பொழுது, ஏதேனும் இரண்டு சக்கரங்களை மட்டும் பாடும் வகையில் வசதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. இப்பாடலிலிருந்து, மஹாவைத்தியநாத ஐயரின் இசையறிவும், ஆன்மீக அறிவும், வடமொழிப் புலமையும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயது முதல் கச்சேரிகளுக்காக தென்னாடு முழுவதும் பயணம் செய்த சிவன், 1891-ஆம் வருடம், ஓய்வின்மையாலும், பயணங்களின் பொழுது சரியாக உணவு அருந்தாமல் வருத்திக் கொண்டதாலும் நோயுற்றார். நினைவிழந்த நிலையில் பலமாதங்கள் கழித்த மஹா வைத்தியநாத ஐயர், 1893-ஆம் வருடம், ஜனவரி 27-ஆம் நாள் இயற்கை எய்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;மஹாவைத்தியநாத ஐயரின் மறைவுக்குப் பின் ராமசாமி சிவன், ''மஹா வைத்தியநாத விஜய சங்க்ரஹம்' என்ற சங்க்ரஹத்தில் தனது சகோதரரின் சாதனைகளை பட்டியலிட்டு வெளியிட்டார். இதைப் பற்றி இன்று குறிப்புகள் கிடைக்கிறதே தவிர, சங்கிரஹம் கிடைக்கவில்லை. இச்சங்கிரஹத்தில் பல மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் இருப்பதாகத் தெரிகிறது.  மஹா வைத்தியநாத சிவனின் சாதனைகளுள், அவர் பல சமகால வித்வான்களை வெற்றி கொண்டதற்கானத் தகவல்கள் இதில் இருந்ததாகவும், இதை எதிர்த்து 'பட்டணம் சுப்ரமண்ய ஐயர்' கண்டனம் வெளியிட்டதாகவும் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அரை நூற்றாண்டுக்குச் சற்றுக் குறைவாகவே வாழ்ந்த மஹா வைத்தியநாத ஐயரின் புகழ், பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துணை நூல் பட்டியல்:&lt;br /&gt;&lt;br /&gt;சங்கீத மும்மணிகள், டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்&lt;br /&gt;ஸ்ருதி மாத இதழ், ஆக்ஸ்டு 2003 வெளியீடு&lt;br /&gt;'நா கண்ட கலாவிதரு', மைசூர் வாசுதேவாச்சாரியார் (ஆங்கில மொழிபெயர்ப்பு)&lt;br /&gt;'மேள ராகமாலிகா', எஸ்.ஆர்.ஜானகிராமனின் சொற்பொழிவு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9662309-113760694872591301?l=classical-music-review.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://classical-music-review.blogspot.com/feeds/113760694872591301/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9662309&amp;postID=113760694872591301' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113760694872591301'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113760694872591301'/><link rel='alternate' type='text/html' href='http://classical-music-review.blogspot.com/2006/01/blog-post.html' title='மஹாவைத்தியநாத சிவன்'/><author><name>லலிதாராம்</name><uri>http://www.blogger.com/profile/01372586935352216447</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9662309.post-113595387570535267</id><published>2005-12-30T06:42:00.000-08:00</published><updated>2005-12-30T06:44:35.723-08:00</updated><title type='text'>To Hell With the Song List.</title><content type='html'>&lt;span style="background: lightblue none repeat scroll 0% 50%; -moz-background-clip: initial; -moz-background-origin: initial; -moz-background-inline-policy: initial;"&gt;Dec 23 @ Music Academy, S.Sowmya, Pakkala Ramadas, Neyveli Narayanan, Madipakkam Murali&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;23-ஆம் தேதி ப்ரைம் ஸ்லாட் கச்சேரிகள் இரண்டுமே மியூசிக் அகாடமியில் தேறிவிட (எப்போவாவது ஒரு முறைதான் தேறும்) முதலில் மாண்டலின் கச்சேரியைக் கேட்டுவிட்டு, சௌம்யாவின் கச்சேரிக்கும் உட்கார்ந்துவிடுவது என்று முடிவெடுத்தேன். மாண்டலின் ஸ்ர்நிவாஸின் தீவிர ரசிகனான எனக்கு அவர் வாசித்தது மிகவும் பிடித்திருந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை. அவர் கச்சேரிகளைப் பற்றி கடந்த இரண்ட வருடங்களிலும் எழுதியுள்ளதால் அந்த கச்சேரியைப் பற்றி நாலு வரி மட்டுமே....&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ர்நிவாஸின் கச்சேரிகளில் எஸ்.டி.ஸ்ர்தர் இல்லாத கச்சேரிகள் சீஸனுக்கு ஏதாவது ஓரிடத்திலாவது அமையும். தகரத்தை தரையில் தேய்ப்பது போல வில்லை போடும் ஸ்ர்தரின் வயலின் இல்லாத இடமாக நான் போவது வழக்கம். இந்த முறை எல்லா இடங்களிலுமே ஸ்ர்தரே வாசித்து என்னை சோதனைக்குள்ளாக்கிவிட்டார். இதற்கு விடிவே இல்லையா? யாராவது ஸ்ர்நிவாஸின் காதில் ஓதினால் நன்றாக இருக்கும். குறைந்த பட்சம் இந்திய கிரிக்கெட் அணியிலாவது தமிழகத்தை சேர்ந்த ஸ்ர்ராமுக்கு இடம் கொடுக்கலாம். அவர் சம்பாதிக்கும் பல கோடி ரூபாய்கள் வீட்டில் இருக்கும் நிலையில் கச்சேரிக்கு வந்து நமது காதை பதம் பார்க்கும் பரோபகாரத்தை ஸ்ர்ராமின் தந்தை ஸ்ர்தர் செய்யாமல் இருப்பார் (என்று நம்பிக்கைதான்). முதல் இரண்டு பாடல்களுக்கு வேகம் வேகம் தொடர்ந்து வேகம் மட்டுமே பிரதானமாக்கி வாசித்த ஸ்ர்நிவாஸும் ராஜேஷும், பின்பு விவேகமாக வாசித்த கௌரிமனோஹரியும், கல்யாணியும் அற்புதமாக அமைந்தது. குறிப்பாக கல்யாணியில், நாதஸ்வர பாணிபிரயோகங்களை, ஒரு மீட்டு மீட்டிவிட்டு, அந்த மீட்டலின் அதிர்வு அடங்கும் முன் ராகத்தின் பல இடங்களுக்கு தொடர்ந்து சன்சரித்து, உச்சஸ்தாயியில் நிறுத்திய போது பிரம்மிப்பாக இருந்தது. அதி அற்புதமான pick up-உம் amplification-உம் இருந்தாலொழிய இவ்வாறு வாசிக்க இயலாது. பல்லவி ராகமாலிகையில் ராகவர்த்தினி ராகத்தை சரியாககண்டுபிடித்ததில் எனக்கு ஒப்பற்ற மகிழ்ச்சி. (நாலு வரிக்கு மேலேயே ஆயிடுச்சோ?)&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ர்நிவாஸ் கச்சேரியில் பக்கத்திலிருந்தவரிடம் மியூசிக் அகாடமியின் இந்த வருட சொவினியர் இருந்ததால், சௌம்யா என்ன பாட மாட்டார் என்பதை அந்த லிஸ்டிலிருந்த தெரிந்து கொண்டேன். நீங்கள் சௌம்யாவின் அகாடமி கச்சேரிகளுக்கு முன்னமே சென்றிருப்பின், முந்தைய வாக்கியம் உங்களை ஆச்சரியப்படுத்தாது. நான் சென்ற கச்சேரிகளில் எல்லாம் அந்த லிஸ்டில் இருக்கும் பிரதான ராகத்தை பாடியதில்லை. பிரதான ராகமாக சாவேரியும், தோடியில் ராகம் தான்ம் பல்லவியும் லிஸ்டில் இருந்ததால், காம்போதுயும் பைரவியும் பாடுவார் என்று நினைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அட தாளத்தின் யதுகுல காம்போதி வர்ணத்தில் கச்சேரி ஆரம்பமானது. சௌம்யாவின் கச்சேரிகளின் இன்னொரு விஷயம், சில நாட்கள் ஏதோ பாடி ஒப்பேத்தி விடுவார் (ஒன்றேகால் மணி நேரத்தின் முடித்த கச்சேரி ஒன்றிற்கு நான் சென்றிருக்கிறேன்), அலல்து குரல் சில நாட்களின் படுத்தும். அகாடமி கச்சேரிகளில் அப்படி அசிரத்தை யாரும் காட்டமாட்டார்கள் எனினும், அன்றைய தினம் குரலும் நல்ல நிலையில் அமைந்தது வர்ணத்திலேயே தெரிந்தது. சக்ரவாக ராகத்தை கோடி காட்டிவிட்டு 'சுகணுமுலே' பாடி, இரண்டாம் காலத்தில் விறுவிறுப்பாக கல்பனை ஸ்வரம் பாடினார். நான் அதுவரை பக்கல ராமதாஸின் வயலினைக் கேட்டதில்லை, நல்ல இனிமையான bowing, கையில் வேகமும் பேசுகிறது. சௌம்யாவின் ஸ்வரங்களுக்கு தக்க ரெஸ்பான்ஸ்களை அள்ளி வீசினார் ராமதாஸ். ஆனந்த பைரவியின் 'மரிவேரே' லிஸ்டில் இருந்ததால், அந்தப் பாடலை மட்டும்தான் பாடுவார் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால், ஓரளவு விஸ்தாரமாகவே பாடி, cliche சஞ்சாரங்களைத் தவிர சில அரிய பிடிகள் மற்றும் சில folkish பிடிகளை எல்லாம் பாடினார். அந்த ஆலாபனைக்குப் பின் 'மரிவேரே' பாடினால், அப்புறம் ஒரு ராகம்தான் பாட நேரமிருக்கும் என்று நான் நினைத்திருக்கையில், 'ஹிமாசல தனய' என்ற ஷ்யாமா சாஸ்திரியின் மத்யம கால கிருதி ஆரம்பமானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த பைரவியைத் தொடர்ந்து கச்சேரியின் பிரதி மத்யம கோட்டாவை நிறைவு செய்யும் வகையில் சாரங்காவின் 'எந்த பாக்யமு' விறுவிறுப்பாக பாடி அதற்கு காண்ட்ராஸ்டாக தேவ காந்தாரியின் ஓர் அரிய கிருதி ("ஷீர சாகர", "சீதா வர", "துலசம்மா", "வினராதா" என்று நாம் கேட்கக் கிடைக்கும் எந்த பாட்லும் அல்லாத ஒரு பாடல், பல்லவி சரியாகப் புரியவில்லை, தியாகராஜர் கீர்த்தனையாக இல்லாமலும் இருக்கலாம்) பாடும் போதே அடுத்த ஐட்டம் மெய்ன் பீஸ்தான் என்று புரிந்தது. அதுவரை ஓரளவு லிஸ்டை ஃபாலோ செய்ததால் அடுத்த வரும் சாவேரியை எதிர் நோக்கிக் காத்திருந்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படும் வகையில் தோடி ஆரம்பமானது. தோடியில் சில ஸ்வரங்கள் எல்லாம் ரப்பருக்கு ஒப்பாகும், அதை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளுவு இழுத்து அடுத்த ஸ்வரத்துக்குச் செல்லும் போதுதான் ஆலாபனையில் அழுத்தம் ஏற்படும். இதை அழகாகக்ச் செய்து, ராகத்தின் பல சஞ்சாரங்களை அறிமுகப்படுத்தி விஸ்தாரமாகப் பாடி மற்றொரு அரிய கிருதியான "ஸ்ர் சுப்ரமண்யோ" பாடினார். (தியாகராஜரே 30-க்கும் மேலான கிருதிகளில் தோடியின் வெவ்வேறு ஸ்வரூபங்களைப் படப்பிடித்துக் காட்டிவிட்ட நிலையின் எப்போதோ ஒருமுறைதான் 'ஸ்ர் கிருஷ்ணம்', 'ராவே ஹிமகிரி', 'கார்த்திகேய காங்கேய', 'கலி தீர வந்தருள்வாய்' போன்ற பாடல்களைக் கேட்க முடிகிறது. 28-ஆம் தேதி ஒரு லெக்சரில் மாரிமுத்தாப் பிள்ளையின் "எந்நேரமும் காலைத் தூக்கி" என்ற தோடி ராகப் பாடலைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு களையில் நல்ல கம்பீரத்துடன் மிளிரும் இது போன்ற கீர்த்தனைகள் வெளியே வருதல் வேண்டும்.") கீர்த்தனையில் கல்ப்னை ஸ்வரங்களுக்குப் பின் தனி நாவர்த்தன்ம் ஆரம்பமானது.&lt;br /&gt;&lt;br /&gt;அனுசரணையாக அடக்கி வாசித்த நெய்வேலி நாரயணன், அதிக கணக்கு வழக்கிலெல்லாம் ஈடுபடாமல், சதுஸ்ர நடையை நன்றாக அமைத்துக் கொண்டு மடிப்பாக்கம் முரளியுடன் சேர்ந்து குறைப்பு செய்து கோர்வை வைத்து முடித்த போதுஅரை மணிக்கு மேல் நேரம் இருந்தது. விவர்த்தினியில் கடகடவென 'வினவே ஓ மனசா' பாடி மாயாமாளவ கௌளையை ஆலாபனை செய்தார். ஐந்து நிமிட ஆலாபனையில் பாவமும், பிருகாக்களும் நிறைந்திருந்தன. அவரின் ஆலாபனைக்குச் சற்றும் குறையாமல் வயலிஸ்டிஞ் ரெஸ்பான்ஸும் இருந்தது கச்சேரியை மேலும் மெருகேற்றியது. ராகத்தில் விட்ட இடங்களை தானத்தில் தொட்டுவிட்டு "மாயா தீர்த்த ஸ்வரூபிணி நன்னு ப்ரோவம்மா" என்ற பல்லவியை கண்ட ஜாதி திரிபடை (இரண்டு களை) தாளத்தில் நிரடலான "ஒன்றேகால் இடம் offset" எடுப்பில் (ஒன்பது அக்ஷரம் தள்ளி) பாடி திரிகாலம் செய்தது லய வின்யாசங்களை ரசிப்பவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கும். ராகமாலிகை ஸ்வரங்களில் சுநாத வினோதினி, ரேவதி மற்றும் சுருட்டியைப் பாடி பல்லவியை நிறைவு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்லவியைத் தொடர்ந்து மதுவந்தியில் அஷ்டபதியும், கானடாவில் (ஜாவளியோ பதமோ) பாடி மங்களம் பாடும் போது பத்து மணிக்கு முடிக்க வேண்டிய கச்சேரி பத்து நிமிடம் நீண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பிடித்த பெண் பாடகரின் கச்சேரி அன்றைய தினம் அற்புதமாக இருந்ததை எண்ணி மகிழ்ந்தபடி வீட்டை நோக்கி வண்டியைச் ச்லுத்தினேன். அடுத்த நாள் சஞ்சயின் கச்சேரி "My concert of the season"-ஆக அமையும் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. அதைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன். அத்தோடு இந்த சீஸனுக்கு "பவமான" (மங்களம்) பாடி விடுவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9662309-113595387570535267?l=classical-music-review.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://classical-music-review.blogspot.com/feeds/113595387570535267/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9662309&amp;postID=113595387570535267' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113595387570535267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113595387570535267'/><link rel='alternate' type='text/html' href='http://classical-music-review.blogspot.com/2005/12/to-hell-with-song-list.html' title='To Hell With the Song List.'/><author><name>லலிதாராம்</name><uri>http://www.blogger.com/profile/01372586935352216447</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9662309.post-113576018110010077</id><published>2005-12-28T00:54:00.000-08:00</published><updated>2005-12-28T21:41:46.436-08:00</updated><title type='text'>இரண்டு கரஹரப்ரியாக்கள்</title><content type='html'>&lt;span style="background: lightblue none repeat scroll 0% 50%; -moz-background-clip: initial; -moz-background-origin: initial; -moz-background-inline-policy: initial;color:red;" &gt;21 Dec @ Naradha Gana Sabha, Nisha Rajagopal, Charumathy Raghuraman&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background: lightblue none repeat scroll 0% 50%; -moz-background-clip: initial; -moz-background-origin: initial; -moz-background-inline-policy: initial;color:red;" &gt;22 Dec @ Music Academy, Sangeetha Sivakumar, Charulatha Ramanujam&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிஷா ராஜகோபால் சங்கீத குடும்பத்தில் வந்தவர். சிறு வயதிலிருந்து அசுர சாதகம் செய்து குரலை நன்றாக தயார் படுத்திக் கொண்டு அதே சமயத்தில் வேலையிலும் கலக்குகிறாராம். 21-ஆம் தேதி ஹிந்துவில் இப்படி வெற்றிகரமாக இரட்டை மாட்டு வண்டி ஓட்டுகிறவர்களின் கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது. 2.00 மணி ஸ்லாட்டில், நான் 4.45-க்கு செல்ல இருந்த மியூசிக் அகாடமிக்கு அருகில் இருக்கும் நாரத கான சபாவில் அவரின் கச்சேரி இருந்ததால், அதிகம் எதிர்பார்ப்பில்லொமல் அரங்கிற்குள் நுழைந்த பொழுது பலமஞ்சரி ராகத்தில் 'சனாதன' பாடிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிஷா ராஜகோபாலின் குரல் பல பெண் பாடகர்களுக்கு இருபது போல கீச்சு குரலாக இல்லாதது விசேஷம். மந்திர ஸ்தாயியில் நல்ல கனமுடன் மிளிர்கிறது. அன்றைய தினம், நல்ல சளியால் அவதிப்பட்டது கண்கூடக் காண முடிந்தது. மனம் இருந்தால் விதியையே வெல்ல முடியும் என்னும் போது சளியை வெல்ல முடியாதா என்ன? நல்ல பாடல் தேர்வினாலும், பாடிய ராகங்களை தன் குரல் சென்ற இடங்களுக்குள் முழுமையாக பாடியதாலும் கச்சேரி அற்புதமாய் அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கச்சேரியின் முதல் பாதியில் நல்ல விறுவிறுப்பான காலப்பிரமாணத்தில் அமைந்த 'எடி யோசனாலு' (கிரனாவளி), 'ரா ரா மா இண்டி' (அசாவேரி), 'அபராத' (லதாங்கி), 'ராகா சசிவதன' கீர்த்தனைகளைப் பாடி கச்சேரியில் தொய்வு ஏற்படா வண்ணம் பார்த்துக் கொண்டார். சப் மெய்ன் ராகமாக லதாங்கியை ஆலாபனை செய்தார். முதல் பிடியிலேயே லதாங்கி என்று காட்டிவிட்டு படிப்படியாய் ஆலாபனையை வளர்த்து, எட்டாத தார ஸ்தாயியில் மல்லுக்கு நிற்காமல் crisp ஆலாபனையாக அமைந்தது. இந்த சீசனில் எக்கச்செக்க இளஞர்களும் யுவதிகளும் அற்புதமாய் பாடுவது போலவே அற்புதமாய் பக்க வாத்யம் வாசிக்கும் இளைய சமுதாயமும் காணக்கிடைக்கிறது. அவர்களுள், இரண்டு சீசன்களாகவே அக்கரை சுப்புலக்ஷ்மி மற்றும் சாருமதி ரகுராமின் பெயர் அடிக்கடிக் காண/கேட்கக் கிடைக்கிறது. முத்லில் கூறிய்வர்ரின் வாசிப்பை முன்னால் கேட்டுக் களித்திருக்கிறேன் என்றாலும் அடுத்தவரின் வாசிப்பை இன்றுதான் கேட்க முடிந்தது. ரத்தினச் சுருக்கமான ராகப் படப்பிடிப்பாகட்டும், ராக ஸ்வரூபங்களின் காட்டும் முழுமையாகட்டும், படகர் ஆலாபனை செய்யும் போது செய்யும் 'ஃபில் அப்' ஆகட்டும், கல்பனை ஸ்வரங்களில் பாடரை நிழல் போலதொடர்வதாகட்டும், அனைத்திலும் இந்த இரு யுவதிகளின் வாசிப்பில் தென்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டத்தின் கதாநாயகனாக (OR SHUD IT BE NAYAKI?) எங்கே மீண்டும் ஒருய் முறை மத்யமாவதியோ சங்கராபரணமோ வந்துவிடுமோ என்று நான் கவலைப்பப்பட்து போல நடக்காமல் (இந்த சீசனில் இந்த இரண்டு ராகங்களும் விடாமல் துரத்துகின்றன.) அதுவரை சீஸனில் கேட்டிராத கரஹரப்ரியாவை பிரதான ராகமாக எடுத்துக் கொண்டு ஆலாபனை செய்தார். கரஹரப்ரியாவில் ரிஷபத்தில் நின்று கொண்டும் அதனைச் சுற்று பல நகாசு வேலைகள் செய்து பாடியதும், நிஷாதத்தில் மெல்லிய அசைவுகளான கமகங்களை நிறைவாக அளித்தபடியும் அழகிய ஆலாபனைஅயி முடித்தார். இவர் தொட்டதையெல்லாம் தொட்டி கொஞ்சம் விட்டதையும் சேர்த்து வாசித்து பலத்த அப்ளாசைப் பெற்றார் சாருமதி.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று அதுவரை பாடிய பாடல்களில் ஒரு பாடலைத் தவிர அனைத்தும் தியாகராஜரின் கீர்த்தனைகளே. கரஹரப்ரியா என்றாலே முதலில் நினைவில் வருவது தியாகராஜரின் 'சக்கனி ராஜ', 'பக்கல நிலபடி' அன்னலது 'ராம நீ சமான' என்ற பாடல்கள்தான். அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் மற்ற வாகேயக்காரர்களுக்கு ஓர வஞ்சனை செய்த பாவத்துக்கு உள்ளாவாரே என்று நான் கவலையில் ஆழ்ந்த பொழுது, அதற்கு இடமளிக்காமல், அதிகம் கேட்கக் கிடைக்காத அழகிய பாடலான, பாபனாசம் சிவனின் 'ஸ்ர்நிவாச தவசரணம்' பாடினார். (இதை கே.வி.என் மற்றும் எம்.எல்.வி பாடி கேட்டிருக்கிறேன். அதற்குப் பின் இவர்தான்.) "ஸ்ர் வேங்கட கிரி ரமண" என்ற இடத்தில் நிரவலும் ஸ்வரங்களும் பாடி தனி ஆவர்த்தனத்துக்குவிட்டார். எனக்கு ஆதி தாளத்தில் தனி ஆவர்த்தனம் புரிகின்ற அளவுக்கு மற்ற தாளங்கள் புரியாததால், அந்த தனியைப் அதிகம் எழுதாவிடினும் உளராமல் இருக்கலாம் என்று விட்டுவிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடக காபியில், 'பூங்குயில் கூவும் பூஞ்சோலையில்', பீம்ப்ளாசில் (இல்லைனா ஆபேரியோ, கர்நாடக தேவகாந்தாரியோ) 'எப்படிப் பாடினரோ', மற்றும் தேஷ் ராகத்தில் தஞ்சாவூர் சங்கர ஐயரின் 'ராம நாமமே' பாடி இரண்டு மணி நேர கச்சேரியை நிறைவாக அளித்தார். விரைவில் ப்ரைம் ஸ்லாட்டுக்கு முன்னேற பிரார்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு கரஹரப்ரியா அடுத்த நாள் மதியம் இரண்டு மணிக்கு சங்கீதா சிவகுமாரின் கச்சேரியில் கேட்கக் கிடைத்தது. கச்சேரியை சஹானா வர்ணத்தில் ஆரம்பித்து, நாட்டையில் 'சுவாமிநாத பரிபாலயாசுமாம்' பாடி கல்பனை ஸ்வரம் பாடிய போதும், சங்கீதாவின் குரல் முழுமையாக warm up ஆகவில்லை. கல்யாணி ராகத்தை short and brisk piece-ஆக பலர் உபயோகப்படுத்தியிருப்பதை முன்னமே கூறியிருந்தேன். அவ்வாறு பாடும் போது பெரும்பாலாக பாடப்படும் கீர்த்தனை (செம்மங்குடி fame) 'பிரான வராலிச்சி'. இக்கச்சேரியில் அதையேதான் சங்கீதா எடுத்துக் கொண்டார். கீர்த்தனைக்கு முன் பாடிய breezy ஆலாபனை, கல்யாணியில் upper half-க்கு பிரதானம் அளிக்கப்பட்டது. மேல் ஸ்தாயியில் சில அழகிய கோவைகளைப் பாடிய போதும், அவர் கொடுத்த பிருகாக்கள் அவர் எதைப் பாட நினைத்தார் என்பதை suggest செய்யும் விதமாக இருந்ததே தவிர முழுமையாக காட்டும் விதமாக இல்லை. கீர்த்தனை முடிந்து நிரவல் ஆரம்பித்தவுடன் அவரின் குரல் நன்றாக warm up ஆகியிருந்தது. இவருக்கு பக்க வாத்தியம் வாசித்தவரும் இன்னொரு 'சாரு'-தான். இவரின் வாசிப்பும் முன் கூறியவரின் வாச்சிப்பைப் போலவே கச்சிதமாய் இருந்தது. முதலில் களை கட்டாவிடினும் கல்யாணியின் சௌந்தரியத்தை விறுவிறுப்பாய் கல்ப்னை ஸ்வரங்களில் சங்கீதா அளித்த போது கச்சேரி களை கட்டியது. கல்யாணிக்கு நல்ல contrast-aaka பாவம் சொட்டும் ஹிந்தோளத்தில் 'சாம கான லோலனே' பாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;குரல் நல்ல நிலையை அடைந்துவிட்ட நிலையில் கச்சேரியின் பிரதான ராகமான கரஹரப்ரியாவை எடுத்துக் கொண்டார். அழகான அளவான கமகங்களை இழைத்த பின், பிருகா மழையில் கரஹரப்ரியாவின் சஞ்சாரங்களைக் காட்டி அரங்கை நனைக்க ஆரம்பித்தார் சங்கீதா. கல்யாணியில் suggestive-ஆக இருந்த பிருகாக்கள் அனைத்தும் கரஹரப்ரியாவில் பூர்ணத்துவம் பெற்று மிளிர்ந்தன. ஆலாபனைக்குப் பின் பாடிய பக்கல நிலபடியின், tried and tested, 'மனஸூன' என்ற இடத்தில் விஸ்தாரமான நிரவலும், கல்பனை ஸ்வரங்களும் பாடி முடித்த போது அரங்கம் அதிர்ந்தது. என் பக்கத்து சீட் மாமா மாத்திரம், "இதுக்கு முன்னாடி நடந்த ரசிகாவோட கச்சேரியிலையும் கரஹரப்ரியாதான் மெய்ன்", என்று அலுத்துக் கொண்டார். ம்யூசிக் அகாடமியில்தான் முதலிலேயே லிஸ்ட் கேட்டுவிடுவார்களே. அப்படியிருக்கையில் எப்படி அடுத்த அடுத்த கச்சேரியில் ஒரே பிரதான ராகத்தை வைத்தார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்வரங்களுக்குப் பின் நடந்த மிஸ்ர சாபு தனியைப் பற்றியும் எனக்கு தனியாக ஒன்றும் சொல்லத் தெரியாததால், அதனைத் தொடர்ந்த சாவேரிக்குச் செல்கிறேன். தனி முடிந்த போது கையில் 50 நிமிடம் இருந்ததால் நிச்சயம் ராகம் தானம் பல்லவி பாடுவார் என்று அனுமானத்தேன். என் அனுமானத்தைச் சரியாக்கும் வகையில் சாவேரியை ஆலாபனை செய்தார். குறிப்பாக மேல் ஸ்தாயி ரிஷபத்தில் நின்றும் அதனைச் சுற்றிச் சுற்றியும் அவர் பாடிய சஞ்சாரங்கள் அமர்க்களமாய் இருந்தது. தானம் யாரும் விரிவாகப் பாடுவதில்லை என்ற எனது குறை நீங்கும் வகையில் ராகத்தின் தொடர்ச்சியாய், ராகத்துக்கு எடுத்துக் கொண்ட நேரத்துக்கு தானமும் பாடி என்னை மகிழ்வித்தார். அவர் பாஅடிய பல்லவி, "கரிமொர வின லேதா ஹரே கிருஷ்ணா". இப்பல்லவியை ஆலத்தூர் சகோதரர்களும், 2003-இல் நாத இன்பத்தில் டி.என்.கிருஷ்ணனும் இசைத்து கேட்டு இருக்கிறேன். 2003-இல் கிருஷ்ணன் ஆதி தாளத்தில் இசைத்ததை சங்கீதா திஸ்ர திருபுடை தாளத்தில், கால் இடம் அதீத எடுப்பில் எடுத்துப் பாடினார். அவர் செய்த த்ரிகாலமும், அதனைத் தொடர்ந்து பாடிய ஸ்வரங்களும் ராகமாலிகையும் விறுவிறுப்பை நன்றாக தக்க வைத்துக் கொண்டன. ராகமாலிகையில் முதலில் பாடிய ராகம் வராளி போல தோற்றம் அளிக்கும் 'விஜய ஸ்ர்' என்று நினைக்கிறேன். அதன் பின் கானடாவும் பெஹாகும் பாடினார். post pallavi pieces-க்கு உட்கார்ந்தால் அடுத்த கச்சேற்ரிக்கு தாமதமாகிவிடும் என்பதால் கிளம்பிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரளவுக்கு சீனியரான சங்கீதா இத்தனை நாளில் ப்ரைம் ஸ்லாட்டுக்கு வராதது ஆச்சரியமே. விரைவில் ப்ரைம் ஸ்லாட் கச்சேரி ப்ராப்திரஸ்து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9662309-113576018110010077?l=classical-music-review.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://classical-music-review.blogspot.com/feeds/113576018110010077/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9662309&amp;postID=113576018110010077' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113576018110010077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113576018110010077'/><link rel='alternate' type='text/html' href='http://classical-music-review.blogspot.com/2005/12/blog-post_28.html' title='இரண்டு கரஹரப்ரியாக்கள்'/><author><name>லலிதாராம்</name><uri>http://www.blogger.com/profile/01372586935352216447</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9662309.post-113574659786600219</id><published>2005-12-27T21:09:00.000-08:00</published><updated>2005-12-27T21:09:57.883-08:00</updated><title type='text'>தேரும் காரும் ஜெட்டும்...</title><content type='html'>போன வருடம் 'my concert of the season'-ஆக அமைந்தது கிருஷ்ண கான சபாவில் டி.எம்.கிருஷ்ணா, நாகை முரளீதரன் மற்றும் திருச்சி சங்கரனுடன் பாடிய கச்சேரிதான். செண்டிமெண்டை விட்டுவிடா மற தமிழனுக்குரிய இலக்கணத்தை விட்டுவிடாமல் 20-ஆம் தேதி கிருஷ்ண கான சபாவை நோக்கி நடையைக் கட்டினேன். (இன்னாபா செய்ய, மழையில ரண்டு தபா மாட்டிக்கிட்டதால, நம்மளாண்ட இருக்குற பழைய மொபெட்டை நம்பி போவ முடில). இந்த வருடம் கிருஷ்ண கான சபாவில் பக்க வாத்தியங்கள் வேறு எனினும், எம்பார் கண்ணன் நான் விரும்பி கேட்கும் வயலின் வித்வான்களிள் ஒருவரானதாலும், மன்னார்குடி ஈஸ்வரன் சௌக்கியமாய் வாசிக்கும் சீனியர் வித்வான் ஆனதாலும் கச்சேரிக்கு நம்பிச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பத்து நிமிட தாமதத்துக்குள் என்னென்ன உருப்படிகள் போனதோ தெரியவில்லை, நான் அரங்கில் நுழையும் போது 'சேஷாசல நாயகம்' ஆரம்பித்தது. சாஹித்யம் தெளிவாய் புரியும்படி விறுவிறுப்பான காலப் பிரமாணத்தில், கொஞ்சம் கூட கள்ளக் குரல் கலக்காமல் பாடி, 'அரவிந்த பத்ர நயனம்' என்னும் இடத்தில் நிரவல் ஸ்வரம் பாடினார். எம்பார் கண்ணன் ஆலாபனைகளில் ஃபாலோ செய்வதிலும் தனக்கு வாய்ப்பு கிடைத்த வாய்ப்புகளில் 'சோலோ' செய்ததும் அவரது வாசிப்பின் முதிர்ச்சியைக் காட்டின. கச்சேரியில் இன்னொரு welcome change, டி.எம்.கிருஷ்ணாவின் வாயிலிருந்து போட்டி போட்டு அளவுக்கதிகமாய் வந்து கொண்டிருந்த 'பலே', 'சபாஷ்' போன்ற வார்த்தைகள் கணிசமானதாளவில் குறைந்திருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல விறுவிறுப்பான வராளியைத் தொடர்ந்த 'மார்க ஹிந்தோளம்' (சல மேலரா), நல்ல contrast-ஐ ஏற்படுத்தியது. (மார்க ஹிந்தோளம் சாரமதியின் ட்வின் சிஸ்டர் போல் இருக்கிறது. சில இரட்டையர்களைப் பல முறை கண்டாலொழிய வித்தியாசப்படுத்துவது கடினம். இந்த அந்த வகை. இன்னும் நிறைய கேட்க வேண்டும்.)&lt;br /&gt;&lt;br /&gt;மத்யம காலக் கிருதிகளில் இருக்கும் விறுவிறுப்பான சங்கதிகளும், தாள கதிகளும் கேட்க அலுப்பில்லாமலிருப்பினும், ராகத்தின் உண்மை அழகு வெளிப்படும் வழியில் அமைந்திருக்கும் கிருதிகள் விளம்ப காலத்தில் அமைந்திருக்கும் கிருதிகளிலும்தான். (சும்மா சும்மா விளம்பம், துரிதம், மத்யமம்-னு எல்லாம் பீட்டர் உடாத. அப்படீனா இன்னானு சொல்லு மாமே-னு ஒலித்த குரலுக்கு: விளம்ப காலம்-னா சுலோவா பழனில தேரு போற ஸ்பீடு. மத்யம காலம்னா மெர்சடிஸ் பென்ஸு cruise-ல ஹைவேல போற ஸ்பீடு, துரிதம்னா ஜெட்டு ஸ்பீடு. மூணும் சவாரியும் சுகம்தான்.) வசந்தா ராகத்தின் அழகிய படபிடிப்பைத் தொடர்ந்து, கிருஷ்ணாவின் குரு செம்மங்குடியை நினைவுபடுத்திய 'ஹரிஹரபுத்ரம்' பாடலை அதி விளம்ப காலத்தில் பாடினார். (பாடிலின் தாளம் 'கண்ட ஏகம்' என்று நினைக்கிறேன்.). பாடலில் கல்பனை ஸ்வரம் பாடும் போது முதல் கால ஸ்வரங்கள் (முதல் காலம்னா பாட்டோட ஸ்பீடு, இரண்டாம் காலம்னா பாட்டோட ஸ்பீடுக்கு டபுள் ஸ்பீடு, அஷ்டே விஷையாளு). மட்டும் பாடி முடித்தது அவர் அதுவரை ஏற்படுத்திய mood-ஐ தக்க வைக்க வகையில் அமைந்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணாவின் கச்சேரி எனக்கு மிக மிக நிறைவாக அமைந்தாலும், அவரின் கச்சேரி அமைப்பைப் பற்றி ஒரு விஷயம். விளம்ப காலம் எத்தனை அழகாக இருந்தாலும் ஒரு கச்சேரியில் ஓரிரு கீர்த்தனைகளைக் கேட்டால்தான் அலுப்பு தட்டாமல் இருக்கும். பாவம் சொட்டும் 'மார்க ஹிந்தோளம்', அதனைத் தொடர்ந்து வழக்கமான இரண்டு களை சவுக்கத்தைவிட கொஞ்சம் விளம்பமான காலத்தில் வசந்தா அதே காலப் பிரமாணத்தில் 'க்ஷீர சாகர' தேவகாந்தாரியில். அதனைத் தொடர்ந்து இழைத்து இழைத்துப், மருந்துக்குக் கூட பிருகாக்கள் பக்கம் போகாமல் பாடிய சங்கராபரணம் அதனைத் தொடர்ந்த இன்னொரு இரண்டு களை பாடலான 'எந்துகு பெத்தல', என்று விளம்பத்துக்கு மேல் விளம்பமே அடுக்கினால் அடுக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;அரியக்குடியும், செம்மங்குடியும், ஜி.என்.பி-யும் (இன்னும் பல ஜாம்பவான்கள்), கச்சேரியில் 70% இட ஒதுக்கீடு மத்யம காலத்துக்குக் கொடுத்ததில் காரணமில்லாமல் இல்லை. அதி விளம்பமாக அமைந்திருக்கும் கீர்த்தனைகளில் கூட மத்யமா கால சரணங்கள் தீக்ஷதர் அமைத்திருப்பது எதனால்? ஜி.என்.பி தனது சங்கீத கலாநிதி ஏற்புரையில் மத்யம கால கீர்த்தனங்களின் முக்கியத்துவத்தைக் கூறும் போது வால்மீகி ராமாயணத்தில் சீதையை அனுமன் சந்தித்த இடத்தைக் குறிப்பிடுகிறார். சீதையிடம் பேசும் போது அனுமனின் குரல் அதிக சத்தமாகவும் அல்லாமல் குறைந்த ஒலியுடனும் அல்லாமல், அவரது பேசும் முறை அதிக வேகமாகவும் அல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் இருந்தது என்கிறாராம் வால்மீகி. இதுவே ஒரு சிறந்த கச்சேரிக்கும் உரிய இலக்கணமாகும் என்கிறார் ஜி.என்.பி.&lt;br /&gt;&lt;br /&gt;பல்லவி முடிந்து துக்கடாவில்கூட 12 நிமிடத்துக்கு பைரவி ராகத்தை இழைத்த போது அரங்கைவிட்டு வெளியேறியவர்கள் ஏராளம். முன் சொன்ன உதாரணத்தின் படி பார்த்தால்கூட, வருடத்தில் எத்தனை முறை காரில் செல்வோம், எத்தனை முறை தேரின் மெதுவான ஆனால் கம்பீரமான ஓட்டத்தைக் காணச் செய்வோம் அல்லது எத்தனை முறை ஜெட்டில் செல்வோம் என்று பார்த்தால், மத்யம காலக் கிருதிகளுக்கு கிடைக்க வேண்டிய due என்ன என்பது தெளிவாகிவிடும். 'வேத சாஸ்த்ர தத்வார்தமு' என்ற இடத்தில் நிரவல் செய்த போது, முதல் சில ரவுண்டுகளுக்குப் பிறகு சில விறுவிறுப்பான சங்கதிகளூடன் பாடிய பொழுது அதற்குக் கிடைத்த அப்ளாஸுக்கு அவர் நன்றாக பாடியது மட்டும் காரணமல்ல என்பது என் அபிப்ராயம். சரி மீண்டும் கச்சேரிக்கு....&lt;br /&gt;&lt;br /&gt;சங்கராபரண ராகத்தை படிப்படியாய், முதலில் காந்தாரத்தை மையமாக வைத்தும், பின்பு படிபடிப்படியாய் மேலேறி தார ஸ்தாயி ஷட்ஜமத்தில் நின்று கார்வைகள் கொடுத்து, அதன் பின், காம்போதி, சங்கராபரணம் போன்ற ராகங்களைப் பாடும் போது "இங்கே வா, வா" என்று அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்கும் தார ஸ்தாயி காந்தாரத்திலும் நின்று அவர் உதிர்த்த முத்துக்கள் கணக்கிலடங்கா. மொத்தத்தில் சங்கராபரண ராகத்தின் சாரத்தைப் பிழிந்து ஒவ்வொரு ஸ்வரமும் ஜொலிக்கும் படி இழைத்து, ஒரு ஸ்வரத்திலிருந்து இன்னொரு ஸ்வரத்திற்குச் செல்லும் போது அந்த transition-ஐ காதலர்கள் பிரியும் போது பிரிவை எவ்வளவு தாமதப்படுத்துவார்களொ, அவ்வாறு இழைத்து இழைத்துப் பாடி அரங்கை இன்பத்தில் ஆழ்த்தினார். கிருஷ்ணா மேல் ஸ்தாயியில் இழைத்ததை எம்பார் கண்ணன் கீழ் ஸ்தாயியில் இழைத்தார். கீழிலிருந்து மேல் வரை சென்று மீண்டும் கீழே வந்ததும் எம்பார் கண்ணன் வாசித்த வேகமான பிரயோகங்களுக்கு பலத்த வரவேற்பு அமைந்தது. தன் லய விந்யாசங்களையெல்லாம் பல்லவி பாடும் போது காட்டிக் கொள்ளலாம். மற்றபடி கல்பனை ஸ்வரங்கள் பாடும் போது ராகத்தின் ஸ்வரூபம் வெளிப்படுத்துவது மட்டுமே பிரதானமாகக் கருது 'சர்வ லகுவாய்' ஸ்வரம் பாடியதும், தனது ஒவ்வொரு செய்கைக்குப் பின்னும் வயலினில் ரெஸ்பான்ஸுக்கு வாய்ப்பு கொடுத்தற்காகவும், கச்சேரியின் நடுவில் எழுந்த போக விரும்புவோற் பாட்லின் நடுவிலோ, தனி ஆவர்த்தனம் ஆரம்பித்தவுடனோ, மங்களம் ஆரம்பித்தவுடனோ செல்ல வேண்டாம், என்று கேட்டுக் கொண்டதற்காகவும் பல சபாஷ்கள் போடலாம். (அப்படியும் மங்களம் ஆரம்பித்தவுடன் கிளம்பிய கூட்டத்தைப் பார்த்து கடுப்பான கிருஷ்ணா "மங்களத்துக்கு மாத்திரம் உட்காருங்கோ-னு சொன்னேன். இரண்டு நிமிஷம் ஆகுமா?", என்ற போட்ட ஒரு மிரட்டலில் இருந்த நியாயத்துக்குக் கட்டுப்பட்டு எழுந்தவர்கள் எல்லாம் மீண்டும் இருக்கையில் அமர்ந்தனர்.) வயலினின் ஒரு ரெஸ்பான்ஸில் எம்பார் கண்ணன், மதுரை மணி ஐயர் தனதாக்கிக் கொண்ட 'க ம ப ம க; ரி க ச ரி க' என்ற இடத்தை வாசித்தது must have kindled nostalgia. அதனால் பல 'ஆஹாகாரங்கள்' புறப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;கல்பனை ஸ்வரங்களைத் தொடர்ந்து தனி ஆவர்த்தனம் ஆரம்பமானது. அன்று வாசித்த கஞ்சிரா கலைஞர் (கணேஷ் குமார்) புதிதாக இருகிறார் (ஹி ஹி எனக்கு புதிது. ஃபீல்டுக்கு சீனியராக இருக்கலாம்). ராக் ஸ்டார் தோற்றத்தில் இருக்கும் அவரின் கைகள் வேகமும் விவகாரமும் நிறைந்ததாக இருக்கின்றன. இரண்டு களை ஆதி தாளம்தான் அடிக்ண்டிக் கேட்கக் கிடைக்கும் தாளமாகினும், மிஸ்ரக் குறைப்பு கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டதே என்று அன்றுதான் நினைத்தேன். முதல் சில ரவுண்டுகளில் சதுஸ்ரமும், பின்பு திஸ்ர நடையும் வாசித்துவிட்டு, குறைப்பில் மிஸ்ர குறைப்பை வாசித்து என் ஏக்கம் நீங்கச் செய்யும் வகையில் தனி ஆவர்த்தனம் சௌக்கியமாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விளம்ப காலம் கிருஷ்ணாவுக்கே அலுத்ததோ என்னமோ தெரியவில்லை நல்ல விறுவிறுப்பான வகையில் சுருட்டியில் ராகம் தானம் பல்லவி பாடினார். தானம் இன்னும் கூட பாடியிருக்கலாமோ என்று தோன்றியது. இருந்தாலும் பாடிய வரையில் அற்புதமாகத்தான் இருந்தது. " ராமசந்திர தயாநிதே ஸ்ர்நிதே சுகுணநிதே" என்னும் பல்லவி சதுஸ்ர ஜம்பை தாளத்தில், முக்கால் இடம் தள்ளி அமைந்த எடுப்புடன் அமைந்திருந்தது. பல்லவியில் வழக்கமாய் நிகழ்த்தப்படும் நிரவல்,மூன்று கால்ப்பிரமாணங்களில் பாடுவது போன்ற விஷயங்களுக்குப் பின் ஸ்வரங்கள் பாடி ராகமாலிகையில் தன்யாசி, சஹானா, காபி ராகங்களை ஏதோ சடங்கு போலப் பாடாமல், அந்த ராகங்களைக் கேட்ட நிறைவை அளிக்கும் வகையில் பாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;post pallavi pieces-ஆக அதி விளம்ப பைரவியும், மத்யம கால பரஸும், துரித காலத்தில் கமாஸ் ராக தில்லானாவும் பாடி, மேற்கூரிய வகையில் மங்களமும் பாடி கச்சேரியை முடித்தார். போன வருடம் போல இக்கச்சேரியை 'My concert of the season' என்று நான் கூறம் வகையில் இல்லையெனினும், மிக மிக ரசிக்கும் வகையில் gimmick free, pure raga based concert-ஆக கச்சேரி அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இந்த கட்டுரையை எழுதி முடித்துவிட்டு காலையில் ஒரு கையில் காப்பியும் மறு கையில் ஹிந்துவும் கொண்டு நாளைத் தொடங்கிய போது கண்ணில் பட்ட விஷயம் கீழே:&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கச்சேரியைப் பற்றிய விமர்சனம், நான் முன்பு கூறிய விமர்சகர் எஸ்.வி.கே எழுத, இன்றைய (27 dec) இந்துவில் வந்துள்ளது. பிருகாக்களை அரவே தவிர்த்து, விளம்ப காலமாகப் பாடி, தியாகராஜர் கிருதிகளை கணிசமான அளவு பாடினால் சாதகமான விமர்சனம்தான் எழுதுவார் என்று உலகறிந்ததே. இதில் வேடிக்கை என்னவென்றால் அதிசயமாய் தனி ஆவர்த்தனத்தைப் பற்றி ஒரு வரியோடு நிற்காமல், இன்னொரு வரியும் எழுதியுள்ளார். அதில்தான் வந்தது வினை, கச்சேரியில் கடமே இடம் பெறாத நிலையில், கணேஷ் குமாரின் கஞ்சிரா வாசிப்பு இவருக்கு மட்டும் எப்படி கடமாகக் கேட்டிருக்கும்? உண்மையில் கச்சேரியைக் கேட்டுதான் இவரைப் போன்றோர் விமர்சனம் செய்கிறார்களா அல்லது அவ்வப்பொழுது தலையைக் காட்டிவிட்டு எதையாவது இட்டு நிரப்புகிறார்களா என்ற சந்தேகம் வலுக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9662309-113574659786600219?l=classical-music-review.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://classical-music-review.blogspot.com/feeds/113574659786600219/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9662309&amp;postID=113574659786600219' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113574659786600219'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113574659786600219'/><link rel='alternate' type='text/html' href='http://classical-music-review.blogspot.com/2005/12/blog-post_27.html' title='தேரும் காரும் ஜெட்டும்...'/><author><name>லலிதாராம்</name><uri>http://www.blogger.com/profile/01372586935352216447</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9662309.post-113557576332846902</id><published>2005-12-25T21:41:00.000-08:00</published><updated>2005-12-25T21:42:43.346-08:00</updated><title type='text'>கொத்துப் பரோட்டா</title><content type='html'>&lt;span style="background: lightblue;color: red"&gt;19th Dec 2005 @ IFAS, OST, Mysore Manjunath, Umayalpuram Sivaraman, E.M.Subramaniam, 5.00 P.M&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;19-ஆம் தேதி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸில் என்னுடைய ஃபேவரிட் பாடகர் ஓ.எஸ்.தியாகராஜனின் கச்சேரி. அவரின் கச்சேரளைப் பற்றி 2003 மற்றும் 2004-இல் ஏற்கெனவே எழுதிவிட்டதால் (2003-ஐ மரத்தடியிலும், 2004-ஐ இந்த வலைப்பூவிலும் படிக்கலாம்), சில முக்கியமான விஷயங்களை மட்டும் கூறிவிட்டு அடுத்த நாளுக்கு தாவி விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;19-ஆம் தேதி சென்னையை நனைத்த பலத்த மழைக்கு இடையிலும் கணிசமான ரசிகர்கள் அரங்கை நிறைத்திருந்தனர். கச்சேரியும் நேரத்துக்கு 'ஸ்ர் ரகுகுலவில்' தொடங்கியது. கச்சேரியில் வயலின் வாசிப்பதாக இருந்த டெல்லி சுந்தரராஜனுக்கு பதிலாக மைசூர் மஞ்சுநாத் அமர்ந்திருந்தார். (சுந்தரராஜன் அன்று ஏதோ விபத்தில் மாட்டிக் கொண்டாராம். அவர் விரைவில் தன் வில் வித்தையை காட்டும் வண்ணம் குணம் பெற பிரார்த்திப்போம்.) கச்சேரிக்கு முன் ஸ்ருதி கூட்டி உமையாள்புரம் சிவராமனின் மிருதங்கத்திலிருந்து இரண்டு 'சாப்பு' உதிர்ந்தவுடனேயே என்னை பொறுத்தவரையில், கச்சேரி களை கட்டிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;போன வருடம், அரங்கின் பின் வரிசையில் இருந்த தகர நாற்காலிகள் இழுபடும் ஓசை உண்டாக்கும் அவதியைக் கூறியிருந்தேன். அது அமைப்பாளர்கள் காதில் விழுந்தோ கண்ணின் பட்டதோ தெரியவில்லை. இம்முறை தகர நாற்காலிகளின் இடத்தில் அதிகம் அசைக்கமுடியாத, அதிகம் சத்தம் போடாத மர நாற்காலிகள் இடம் பெற்றிருந்தன. நம் குரல் காதில் விழும் என்னும் நம்பிக்கையில், அடுத்த வருடத்திற்கான கோரிக்கையாக, அரங்கின் தொலைபேசியை இடம் மாற்றக் கேட்டுக் கொள்வோம். அவ்வப் போது, அது அலறி, 30 ரூபாய் டிக்கெட் ஆசாமிகளின் கச்சேரி கேட்கும் சுகானுபத்தைக் கெடுத்த வண்ணமே இருக்கிறது. எந்த ஒரு call-ஐயும் 10 ' ட்ரிங்குக்கு' முன்னால் எடுக்கக்கூடாத என்ற விரதம் பூண்டிருக்கும் சபா செகரட்டரியின் (அவரது வேலை தொலைபேசுவதில்லாத போது, அப்பொறுப்பை வகிக்கும் நபர்) மனம் மாறவும் கோரிக்கை வைப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;முப்பது ரூபாய் டிக்கட் என்றதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது (I realise that my digressions are not only frequent but also seem get a higher share than the topic intended in the essay...well....). நான் டிசம்பர் சீஸன் கச்சேரிகளுக்கு போக ஆரம்பித்த நாட்களில் கையில் அத்தனை காசு புழங்காது. மாணவப் பருவத்தில் அவ்வப்போது கிடைக்கும் காசில்தான் கச்சேரிக்குச் செல்வது, காஸெட் வாங்குவது எல்லாம். அப்பொழுது எல்லாம் எனக்கு 'stage ticket' பெரிதும் உதவியது. மியூசிக் அகாடமியில் ஐந்து ரூபாய்க்கு 'stage ticket' வாங்கினால், ஒரு நாள் முழுக்க இசையில் முங்கலாம். காலை நேர ஃப்ரீ கச்சேரிகளுக்குப் பின் ஐந்து ரூபாய் டிக்கட்டில் இரண்டு ப்ரைம் டைம் கச்சேரிகளையும் கேட்கலாம். இப்பொழுது கிருஷ்ண கான சபா முதலான சபாக்களில் ஸ்டேஜ் டெக்கட்டே ஐம்பது ரூபாய். இப்பொழுது அதிர்ஷ்ட வசமாக, என் நிலை அவர்கள் 200 ரூபாய்க்கு ஸ்டேஜ் டிக்கெட் விற்றாலும், ஹால் டிக்கட் (பரிட்சை ஹால் டிக்கெட் இல்லை, இது ஹாலில் அமர்ந்து கேட்கக் கொடுக்கும் ஹால் டிக்கெட்;-) வாங்கக்கூடிய நிலையில் இருப்பதால் பிரச்சனையில்லை. உடைந்த மரநாற்காலிகளும், கீற்றுக் கொட்டகையுமாய் இருந்த கிருஷ்ண கான சபா, இன்று அற்புதமாய் மாறி, நல்ல acoustics-உடன் இருக்கும் போது விலை ஏற்றம் நியாயமானதே. நூறு ரூபாய் டிக்கெட்டை பொருட்படுத்தாமல் ஹால் டிக்கெட் வாங்க, IT industry இளைஞர்களும் அவர்கள் பெற்றோர்களும், என்.ஆர்.ஐ-க்களும் இருக்கிறார்கள். என்னுடைய கவலையெல்லாம், நான் மாணவனாக இருந்த போது கச்சேரி கேட்க தோதாய் இருந்த ஸ்டேஜ் டிக்கெட்டின் மேல்தான். இதனால் எத்தனை பேருக்கு நல்ல கச்சேரி கேட்கும் வாய்ப்பு இல்லாமல் போகுமோ தெரியவில்லை. ஆனால், இன்றைய மாணவர்களைப் பற்றியும் எனக்குச் சரியாகத் தெரியவில்லை. கல்லூரி முடித்து ஐந்து வருடங்களுக்குள் எனக்கும், கல்லூரிக்குள் இப்பொழுது மாணவர்களுக்கும் இடையிலேயேகூட ஏதோ பெரிய ஜெனரேஷன் கேப் இருப்பதாகத் தோன்றுகிறது. சைக்களில் பல கிலோமீட்டர்களை அனாயாசமாக கடந்த நாட்களே என் பள்ளிப் பருவத்தையும் கல்லூரிப் பருவத்தையும் நிறைத்தன. இப்பொழுது அத்தனை மாணவரும் குறைந்த பட்சம் மொபெட், கையில் செல் ஃபோன் என்று இருக்கிறார்கள். இவர்களுக்கு ஐந்து ரூபாய் ஸ்டேஜ் டிக்கெட்டுக்கும் ஐம்பது ரூபாய் ஸ்டேஜ் டிக்கெட்டுக்கும் வித்தியாசம் தெரியுமோ தெரிய்வில்லை. அப்படி வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் சபாக்கள் ஸ்டூடண்ட் டிஸ்கௌண்ட் கொடுக்கலாம். (அமெரிக்க அருங்காட்சியகங்கள், சினிமா தியேட்டர்கள் போன்ற இடங்களில் எல்லாம் மாணவ அடையாள அட்டைக்கு கணிசமான டிஸ்கௌண்ட் கிடைக்கும். எது எதுக்கோ அமெரிக்காவை காப்பி அடிக்கும் நாம்,புபயோகமாய் இருக்குமெனில், இது போன்ற விஷயங்களில் காப்பி அடித்தால் தவிறில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயந்தி குமரேஷின் கச்சேரியில் தியாகராஜரின் கிருதி ஒன்று கூட இல்லாத போதும் நன்றாக இருந்தது என்று கூறியிருந்தேன். இக்கச்சேரியில் துக்கடாவுக்கு முன் பாடப் பெற்ற அனைத்து கிருதிகளுமே தியாகராஜரின் கீர்த்தனைகள்தான். ஜெயந்தி செய்தது போன்று சொற்பமான கச்சேரிகள்தான் செய்ய முடியும். ஓ.எஸ்.டி செய்ததைப் போல நூறு கச்சேரிகளாவது செய்யலாம். அதற்கான காரணம் (அடுத்த digression), தியாகராஜர் எண்ணற்ற ராகங்களின் நூற்றுக் கணக்கான கீர்த்தனைகள் செய்திருப்பது மட்டுமல்ல. சீர்காழி மூவரும் கூட அத்தனை கீர்த்தனைகள் செய்திருக்கலாம். தியாகராஜரின் கீர்த்தனைகள், அவர் எப்படிச் செய்தாரோ அதே நிலையில் நொடேஷனுடன், சங்கதிகளுடன் கிடைக்கிறது. தியாகராஜருக்கு இருந்த எண்ணற்ற சிஷ்யர்கள் அவர் கீர்த்தனைகளைக் காத்து அடுத்த தலைமுறைக்கு கொடுத்ததும், அவருக்கு அடுத்த தலைமுறைக்குள்ளேயே the transition from composers to performers, அதாவது சமஸ்தானங்களில் வித்தையைக் காட்டும் வகையில் இருந்த இசை, மக்கள் மத்தியில் பாடப் பெற்ற, மக்களின் முக்கியமான பொழுது போக்காக மாற ஆரம்பித்த காலம், trinity என்றழைக்கப் படும் தியாகராஜர், தீகஷதர், ஷ்யாமா சாஸ்திரி, வாழ்ந்த தலைமுறை வாழ்ந்த காலமாகும். (தமிழில் இசைப்பாட முடியாது. தமிழில் நல்ல பாட்டில்லை என்று கூறும் கோஷ்டி என்று மேல் தவறான முத்திரையை இவ்வரிகள் குத்திவிடாது என்று நம்புகிறேன்.) சரி மீண்டும் கச்சேரிக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;'சேரராவ' ரீதிகௌளையில் மலர்ந்த அரிய கிருதியாகும். கல்யாணி ராகம் விரிவாகப் பாட ஏற்ற ராகமெனினும், இரண்டு பிரதான உருப்படிகளுக்கிடையில் விறிவிறுப்பான உருப்படி ஒன்றை பாட எற்ற ராகமாகவும் பலர் அதை உபயோகித்திருக்கின்றனர். உதாரணமாக, ஆலத்தூர் சகோதரர்கள் 'அம்ம ராவம்மா'-வையும், செம்மங்குடி 'பிரான வராலிச்சி'-யையும் பாடி கச்சேரியில் விறுவிறுப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர். ஓ.எஸ்.டி கல்யாணியில் சில மின்னல் வெட்டுக்கள் வெட்டி ஆலாபனையை முடித்ததும் நான் எதிர்பார்த்தது, இவ்விரண்டு கீர்த்தனங்களில் ஒன்றைத்தான். அவர் தேர்ந்திடுத்ததோ, தியாகராஜரின் மற்றொரு கிருதியான 'ஈச பாஹிமாம்' என்பதை. இரண்டாம் கால கல்பனை ஸ்வரங்களில் சிவராமனின் anticipation-உம், ஸ்வரங்களை 'ஈஸ' மற்றும் 'ஜகதீஸ' என்ற இடங்களில் மாறி மாறி முடித்தும் பாடிய விதமும், சிவராமனின் பாராட்டை மீண்டும் மீண்டும் பெற்றபடி வாசித்த மஞ்சுநாதின் வாசிப்பும் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணியைத் தொடர்ந்து, பிரதான ராகமாக மத்யமாவதியை ஆலாபனை செய்தார். 2003-இல் பனி பாடகர்களைப் படுத்திய பாட்டை இந்த வருடம் மழை செய்யுமோ என்று அச்சம் என்னுள் இருந்தது. மழை அத்தனை மோசம் செய்யவில்லை. பாடகர்களின் குரல்கள் நல்ல நிலையிலேயே இருக்கிறது. அதனால், ஸ்ருதியிலிருந்து இம்மி பிசகா வண்ணம் ஓ.எஸ்.டி கொடுத்த கார்வைகளும், பிருகாக்களும், ஆலாபனையில் செய்த ஸ்ருதி பேதமும் (the shift was to hindholam) மத்யமாவதியின் அழகை நிறைவாக வெளிப்படுத்தின. மத்யமாவதி main item என்றால் கீர்த்தனை 'பாலிந்த்ஸு காமாட்சி' அல்லது 'ராம கதா'-வாகத்தான் பெரும்பாலும் இருக்கும். தனி ஆவர்த்தனத்துக்கு ஏற்ற காலப் பிரமாணத்தில் அமைந்த கீர்த்தனைகளான இவற்றுள் இரண்டாவதை ஓ.எஸ்.டி தேர்வு செய்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அனுபல்லவியில் நிரவலும் , கல்பனை ஸ்வரங்களும் பாடிய பின் தனி ஆவர்த்தனம் ஆரம்பமானது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுதும் தனி ஆவர்தனத்தில் அரங்கை விட்டு வெளியே செல்லும் கூட்டம் பல இடங்களில் தென்பட்டாலும், உமையாள்புரம், திருச்சி சங்கரன் போன்றோர் வாசிக்கும் இடங்களில் சொற்பமான மக்களே இந்த வெட்கத்துக்குரிய செயலைச் செய்கின்றனர் (அவர்கள் அமர்ந்திருப்பது ஆர்வத்திலா மரியாதையிலா என்று நாமறியோம்). கீர்த்தனைகளுக்கு வாசிக்காமல், உடன் பாடிய உமையாள்புரம் சிவராமனின் மிருதங்கம் சில ரவுண்டுகளுக்கு அதற்கே உரிய 'சாப்பு' மாத்திரம் 'தாம் தாம் தாம்' என்று வெளிப்படுத்தி 'தனியின்' தனித்தன்மையை கட்டியம் கூறியது. அதன்பின் சதுஸ்ர நடையில் வாசித்த விஷயங்களும், அவ்வப்பொழுது 'தொப்பி' பக்கத்தில் இதமாய் எழுப்பப்பட்ட இனிய ஒலிகளும், பின்பு நிக்ழ்ந்த கதி பேதமும், அதில் கண்ட நடையில் வாசித்த மான்குட்டி பாய்ச்சல்களும் வார்த்தைகளூக்கு அப்பாற்பட்டவை. ஈ.எம்.சுப்ரமணியம் (கடம்), சிவராமன் அமைத்துக் கொடுத்த பாதையை அழகாகத் தொடர்ந்து அழகுக்கு அழகு சேர்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனியைத் தொடர்ந்த துக்கடாக்களில் கே.வி.என் பிரபலப்படுத்திய அற்புதமான பாகேஸ்ரி பாடலான 'சாகர சயன விபோ'-வுக்கு முதல் இடம் (இப்பாடல் பிரபல வித்வான், எம்.டி.ராமநாதனின் படைப்பாகும், பல நாட்களுக்கு, இப்பாடலின் வரும் 'பத்மநாப' முத்திரையால் ஸ்வாதிதிருநாள் சாஹித்யம் என்று நினைத்திருந்தேன்!!!) கொடுக்கலாம் என்றாலும், ஜி.என்.பி-யை நினைவுபடுத்திய, சுத்தாநந்த பாரதியின் 'காரணம் கேட்டு வாடி' மற்றும் 'சரவண பவ என்னும் திருமந்திரம்' பாடல்களும் not far behind. துக்கடா என்றாலே காபி, சிந்து பைரவி, ரேவதி, கமாஸ் என்று ஆகிவிட்ட நிலையில், ஓ.எஸ்.டி பூர்விகல்யாணி, ஷண்முகப்ரியா போன்ற பாகங்களைப் பாடியது was a welcome change.&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாய் எழுதுகிறேன் பேர்வழி என்று 'திண்ணை அரட்டை' போல வளவளத்துவிட்டேன்:-)...மற்றவை அடுத்த பதிவில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9662309-113557576332846902?l=classical-music-review.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://classical-music-review.blogspot.com/feeds/113557576332846902/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9662309&amp;postID=113557576332846902' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113557576332846902'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113557576332846902'/><link rel='alternate' type='text/html' href='http://classical-music-review.blogspot.com/2005/12/blog-post_25.html' title='கொத்துப் பரோட்டா'/><author><name>லலிதாராம்</name><uri>http://www.blogger.com/profile/01372586935352216447</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9662309.post-113544684176751886</id><published>2005-12-24T09:52:00.000-08:00</published><updated>2005-12-24T09:54:01.773-08:00</updated><title type='text'>செம்மங்குடி வழியில்....</title><content type='html'>18-ஆம் தேதி காலை வானம், சில சமயம் பளீர் வெளிச்சம் கக்கும் வெய்யிலுடனும், அடுத்த கணத்திலேயே அடை மழையை பொழிந்தபடியும், சென்னை கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. நான் ம்யூசிக் அகாடமிக்கு கிளம்பிய வேளையில் மழை இல்லையெனினும், ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் 'கல்பத்ருமா' அருகில் ஆரம்பித்த அடை மழை, ம்யூசிக் அகாடமியை அடைவதற்குள் பேயாட்டம் ஆடி "உனக்கும் பெப்பே உன் ரெயின் கோட்டுக்கும் பெப்பே", என்றது. மழையைப் பொருட்படுத்தாமல் நேரத்துக்கு போய்ச் சேர்ந்த பொழுது 12.45 கச்சேரிக்கும், ஞாயிற்றுக் கிழமை என்பதாலோ என்னமோ, ஓரளவு கூட்டம் இருந்தது. (சஞ்சய் சுப்ரமணியம், அருண் பிரகாஷ், வரதராஜன் போன்ற முன்னணி வித்வான்கள் சிலர் கச்சேரி முழுவதும் அமர்ந்து இருந்தது, வளரும் கலைஞருக்கு நல்ல உற்சாகத்தை அளித்திருக்கும்).&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கச்சேரியை பல விதமாக தொடங்கலாம். இதில் tried and tested methods எனப்படுவது யாதெனில் வர்ணத்தில் தொடங்குவது அல்லது விநாயகர் மேல் அமைந்த மத்யம கால கிருதியில் தொடங்குவது. அப்படி இல்லாமலும் சிலர் கச்சேரியைத் தொடங்கி அதை களை கட்டவைப்பதில் வெற்றியும் கண்டுள்ளனர். ரக்தி ராகமான சஹானாவில் "ஈ வசுதா நீவண்டி' என்ற கோவூர் சுந்தரேசர் மேல் தியாகராஜர் இயற்றிய கிருதியில், எனக்கு தெரிந்தவரை, ஜி.என்.பி கச்சேரிகளைத் தொடங்கியிருக்கிறார். அதே கிருதியைத்தான் சேலம் ஸ்ர்ராமும் கச்சேரியைத் தொடங்க தேர்வு செய்திருந்தார். பாவமும், விறுவிறுப்பும் கலந்து மத்யம காலப்ரமாணத்தில் கீர்த்தனையைப் பாடி, கல்ப்னை ஸ்வரங்கள் பாடிய பொழுது கச்சேரி களைகட்டிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றரை மணி நேரக் கச்சேரியில் இரண்டாவது உருப்படியையே சப்-மெய்னாகக் கொண்டால்தானே நிறைவான கச்சேரியை அளிக்க முடியும். வராளியை விஸ்தாரமாக ஆலாபனை செய்தார் ஸ்ர்ராம். ஆலாபனையில் அழகிய கார்வைகள், சில ஸ்வரங்களை மையமாக நிறுத்தி அதனைச் சுற்றி நாதஸ்வர பாணியில் பாடுதல், ஜீவ ஸ்வரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, ராகத்துக்குரிய கமகங்களை தெளிவாக வெளிப்படுத்துதல் (உதாரணமாக வராளியின் காந்தாரம்) போன்ற வி்ஷயங்கள் பெரிதும் ரசிக்கும்படி இருந்தது. ஆலாபனையில் அகாரங்களில் பாடிய அளவு இகாரமும் ஒலித்தது. இவரின் இகாரம் சமயத்தில் 'ஹிகாரமாக' மாறி செம்மங்குடியை நினைவுறுத்தினாலும், நறுக்குத் தெரித்தாற் போல் விழும் பிருகாக்கள் அகாரத்தில் இருக்கலாமே என்றுதான் தோன்றியது. செம்மங்குடியின் இசையின் தனிச் சிறப்பு அவரது ஆலாபனையில் பொதிந்து இருந்து விவகாரங்களின் இருக்கின்றதே தவிர அவர் உபயோகித்த இகாரங்களில் அல்ல. செம்மங்குடி, தனது குரலைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சி உலகறிந்ததே. சாரீர சம்பத்து நிறைவாக இல்லாத நிலையில், செம்மங்குடி தன் உழைப்பாலும் கற்பனையாலும் விளைந்த அழகிய கோவைகளை வெளிப்படுத்த தனக்கேவுரிய முறையைக் கையாண்டார். அவர் செய்த கோவைகளை inspiration-ஆக கொள்வதில் நன்மை விளையும் என்பதில் ஐயமில்லை எனினும், அதை வெளிப்படுத்திய முறையை imitate செய்வதை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றியது. மிஸ்ர சாபு தாளத்தில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரியின் "மாமவ மீனாக்்ஷி" என்ற கனமான கிருதி விஸ்தாரமான ஆலாபனையைத் தொடர நல்ல தேர்வு. வராளி ஆலாபனை, நிரவல், ஸ்வரங்கள் அனைத்திலும் பக்க வாத்தியங்கள் 'பக்கா வாத்தியங்களாய்' விளங்கின. நிரவல், ஸ்வரம் மற்றும் தானம் பாடிய பெழுது, அந்தந்த வி்ஷயங்களின் உச்சகட்டமாய் பாடப்பட்ட இடங்களுக்குப் பின் வயலினுக்கு வாய்ப்பளிக்காமல் தவிர்த்திருக்க வேண்டாமோ என்றும் தோன்றியது. பல வருடங்கள் சீனியராக இருந்த போதும் அரியக்குடி போன்ற ஜாம்பவான்கள் லால்குடி போன்றவர்களுக்கு சம வாய்ப்பு அளித்ததை இங்கு நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வராளியில் செம்மங்குடியை நினைவு படுத்திய ஸ்ர்ராம், 'மாருபல்க'-வைத் தொடங்கியதும் அரங்கெங்கும் அவர் நினைவு பெருகுவதை அங்கு கிளம்பிய 'ஆஹாகாரங்களிலிருந்தும்', 'சிரக்கம்பங்களிலிருந்தும்' உணர முடிந்தது. அரபிய குதிரையில் சவாரி செய்வதற்கு ஒத்த "patended semmangudi" சங்கதிகளைத் தொடர்ந்து, அவர் நிரவலுக்குத் தேர்ந்துடுக்கும் 'தாரி நெரிகி'-யில் நிரவல் செய்தார். கல்பனை ஸ்வரங்களை சாஹித்யத்தில் முடிக்கும் விதம்கூட சங்கீத பிதாமகரை நினைவுபடுத்தும் வகையிலேயே இருந்தது. எடுத்தால் கீழே வைக்க முடியாத நாவல் போல கீர்த்தனையை (infact the entire concert) நடத்திச் சென்ற விதம் பாராட்டுக்குரியது. அம்மன்குடி ராமநாரயணனின் மிருதங்க வாசிப்புக்கும் இதில் கணிசமான பங்கு உண்டு. இவர் சங்கதிகளை anticipate செய்த விதம் அற்புதமாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாருபல்க முடிந்த போது கச்சேரியை முடிக்க 50 நிமிடமே இருந்த நிலையில் முதல் இழையிலேயே சங்கராபணத்தைக் காட்டி, அதையே பிரதான ராகமாக ஆலாபனை செய்தார். ஆலாபனை செய்வதில் பல முறைகள் உண்டு. ராகத்தின் எல்லா ஸ்வரங்களை கோடி காட்டிவிட்டு பின்பு ஒவ்வொரு இடமாய் அலசி ஆராய்வது ஒரு வகையெனில், கீழ் ஸ்தாயியில் தொடங்கி, படிப் படியாய் ராகத்தை விரியச் செய்து, ராகம் விரிய விரிய ஸ்தாயியை மேல் நோக்கிச் செலுத்துவது என்பது வேறு வகை. ஸ்ர்ராம் இரண்டாவது வகையைக் கையாண்டார். விறுவிறுப்பான பிடிகளும், கமகத்தை வெளிப்படுத்தும் அழகான கோவைகளும் கலந்து அளித்த போது அரங்கம் அதிர்ந்தது. அழகிய ராகப் பிரவாகமான சங்கராபரணத்தை எங்கு தொடங்கி எங்கு வளர்ப்பது என்று சற்று தடுமாறியது போல இருந்தது வயலின் வித்வான் விஜயின் தொடக்கம். Initial hiccups தாண்டியதும் அவரும் இழைத்து இழைத்து சங்கரபரணத்தின் சௌந்தரியத்தை அரங்கிற்குக் காட்டினார். விஸ்தாரமான ஆலாபனையைத் தொடர்ந்து திருவனந்தபுரம் பாணியில், மிருதங்கத்துடன் தானம் பாடியது, கீர்த்தனையை எதிர்ப்பார்த்திருந்த என்னை ஆச்சரியப்படுத்தியது. விறுவிறுப்பான மத்யம கால தானத்துக்குப் பின் ரூபக தாளத்தில் அமைந்த எளிமையான "மஹிம தெலிய தரமா" பல்லவியைப் பாடினார். அவர் செய்த விரிவான ஆலாபனைக்கு "எந்துகு பெத்தல", 'சரோஜ தள நேத்ரி' போன்ற கீர்த்தனைகள் எடுப்பான தொடர்ச்சியாய் இருந்திருக்கும். அக்கீர்த்தனைகளுக்கு முழு justice செய்ய நேரம் பற்றாமல் இருந்திருக்கும் எனினும், ஐந்து நிமிடம் பாடிய தானத்தை தவிர்த்த்¢ருந்தால் நேரம் இருந்திருக்குமோ என்று தோன்றியது. ஒரு களை பல்லவிகள், பிரதான ராகம் பாடிய பின் பாடப் படும் பொழுது short and sweet-ஆக இருக்கும். பிரதான ராகமாக பாடும் பொழுது இரண்டு களை சவுக்கம் would be a better choice. பல்லவியில் நிரவல் செய்து ஸ்வரப்ரஸ்தாரம் செய்தபின் தனி ஆவர்த்தனம் ஆரம்பமானது. ஐந்து நிமிடத்துக்குள் காம்பேக்டாக ரூபக தாளத்தில் கொஞ்சம் திஸ்ர கதி கலந்து ராமநாரயணன் வாசித்த தனி கச்சிதமாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;post main pieces-ஆக அன்றைய தினத்துக்குரிய திருப்பாவையும், பூர்ணசந்த்ரிகா தில்லானாவும், காபி ராகத்தில் ஸ்லோகமும் துரிதமாக பாடி முடிக்கவும் மணி 2.15 ஆகவும் சரியாக இருந்தது. திருப்பாவையில் 'சாற்றி', 'பசுக்கள்' போன்ற வார்த்தைகளை "்ஷாற்றி", "ப்ஷுக்கள்" என்றும் எல்லோரும் பாடுவது போலவே பாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்ததில் கச்சேரி மிக விறுவிறுப்பாக மிகவும் ரசிக்கும்படி இருந்தது. இப்படிப்பட்ட கச்சேரியைப் பற்றி எழுதும் பொழுது, எனக்கு ரசிக்கும்படி இருந்த வி்ஷயங்களை குறிக்கும் தொடர்களைவிட எனக்கு குறையாகப் பட்ட வி்ஷயங்களே கட்டுரையில் மலிந்து கிடக்கும் காரணத்தை கொஞ்சம் யோசித்துப் பார்த்த போது தோன்றியது:&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இனிப்பு பிடிக்கவில்லை என்றால் 'சர்க்கரை அதிகம். திகட்டுகிறது.', 'பாகு கொஞ்சம் அதிகமாகி கெட்டியாகிவிட்டது', 'அரை நொடி முன்னால் எடுத்து இருந்தால் குலாப் ஜாமூன் இன்னும் மிருதுவா இருந்திருக்கும்' என்று ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். நன்றாக இருந்தால், பல சமயம் ஏன் நன்றாக இருக்கிறது என்று நமக்கு விளங்குவதேயில்லை. 'இத்தனை சிட்டிகை சர்க்கரை போட்டு, இத்தனை நேரம் அடுப்பில் வைத்து, இன்ன இன்ன மாதிரி செய்ததால் ஸ்வீட் நன்றாக இருந்தது', என்று ஸ்வீட்டை சாப்பிட்ட யாரும் கூறுவது கடினம். ஸ்வீட் கடைக்காரரைப் போலத்தான் பாடகர்களும், ஏதாவது குறைந்தால் கேட்பவருக்கு விளக்க வருமே தவிர, நன்றாக இருப்பின் "இதனால்தான் நன்றாக இருந்தது" என்று கூறுவது பல சமயங்களில் கடினமான காரியம். அதனால், எனக்கு நினைவில் நின்றவரை 'இன்ன இன்ன செய்தார்' என்பதை கூற முயல்கிறேன். பல சமயம் அம்முயற்சி தோல்வியிலேயே முடிகிறது:-).....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9662309-113544684176751886?l=classical-music-review.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://classical-music-review.blogspot.com/feeds/113544684176751886/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9662309&amp;postID=113544684176751886' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113544684176751886'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113544684176751886'/><link rel='alternate' type='text/html' href='http://classical-music-review.blogspot.com/2005/12/blog-post_24.html' title='செம்மங்குடி வழியில்....'/><author><name>லலிதாராம்</name><uri>http://www.blogger.com/profile/01372586935352216447</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9662309.post-113536742120687961</id><published>2005-12-23T11:44:00.000-08:00</published><updated>2005-12-23T11:50:21.223-08:00</updated><title type='text'>சில எண்ணங்கள்...</title><content type='html'>&lt;span style="BACKGROUND: lightblue;color:red;" &gt;18-ஆம் தேதி அனுபவங்களுக்குச் செல்லும் முன்னால் சில வி்ஷயங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீசனின் போது தினமும் அனைத்து சபாக்களிலும் விநியோகம் ஆகும் &lt;a href="http://www.kutcheribuzz.com/"&gt;katcheribuzz.com&lt;/a&gt; கொடுக்கும் இரண்டு பக்க (நான்கு பக்கங்களை ஏன் இரண்டாக்கிவிட்டார்கள்?) சங்கீதக் கலவைக்கு பயங்கர டிமாண்ட். பல சமயங்களில் கச்சேரி முடிந்து வெளியில் வந்து பார்த்தால் அனைத்தும் தீர்த்து விடுகிறது. அண்ணாசாலை போஸ்ட் ஆபீஸில் எம்.எஸ்-இன் நினைவாய் வெளியான அஞ்சல் தலை கிடைக்கும் என்ற செய்தியை போட்ட kutcheribuzz-க்கு நன்றி. ஒருநாள் சென்று வாங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீசனுக்கு பலத்த கவரேஜ் கொடுக்கும் ஹிந்து பத்திரிகையிலும் மாற்றங்கள். வெள்ளிக்கிழமை சப்ளிமெண்ட் டிசம்பரின் மாத்திரம் பல பக்கங்களுக்கு நீளும். பல விமர்சகர்கள் நகரெங்கும் நடக்கும் சபாக்களில் நடக்கும் கச்சேரிகளைப் பற்றி எழுதுவார்கள். இந்த வருடம் வெள்ளிக்கிழமைக்காக காத்திராமல், இந்த வாரத்திலேயே இரண்டு சிறப்பு சப்ளிமெண்ட் அளித்திருக்கிறார்கள் (புதன்கிழமைக்குள்). வழக்கமாய் வரும் விமர்சனங்கள் தவிர சில சுவாரசியமான பகுதிகளும் இடம் பிடித்திருக்கின்றன. அவற்றில் ஒன்று இசைக் கலைஞரின் பார்வையில் இசை விழாவைப் பற்றி "My Festival" என்ற பகுதி. அதில் டி.எம்.கிருஷ்ணா கூறியிருக்கும் கருத்து முக்கியமானது. "உலகில் வேறு எங்குமே நடக்காத இசைத் திருவிழாவாக பல ஆண்டுகளாய் நடக்கும் டிசம்பர் இசை விழாவை நன்கு விளம்பரப் படுத்தி சென்னை நகரின் சார்பாக 'லான்ச்' செய்தல் அவசியம். அனைத்து சபாக்களும் சேர்ந்துகூட இதைச் செய்யலாம் என்கிறார். இப்படிப்பட்ட இசை உற்சவம் 100 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருப்பதை இன்னும் நன்றாக உலகளவில் எட்டச் செய்யலாம். அவர் கூறியிருக்கும் இன்னொரு வி்ஷயம் அரங்குகளில் இருக்கும் ஆடியோ சிஸ்டத்தைப் பற்றியது. பல அரங்குகளில் ஒழுங்காக மைக் பேலன்ஸ் ஆவதற்குள் பாதி கச்சேரி முடிந்துவிடுகிறது. பரத் கலாசார் போன்ற ஓபன் ஏர் ஆடிடோரியங்கள் (இதை ஆடிடோரியம் என்றெல்லாம் சொல்லக் கூடாது. ஒரு மேடைக்கு முன்னால் ்ஷாமியானாவைப் போட்டு சேரை அடுக்கியிருக்கிறார்கள். ஆரம்பித்த புதிதில் வேண்டுமானால் அரங்கு கட்டுவது கடினமாக இருந்திருக்கலாம். ஆரம்பித்து பல வருடங்களாகி, பல நல்ல சபாக்களுக்கு சற்றும் குறையாமல் (சில சமயம் அதிகமாய்) பணம் வசூலிக்கும் பரத் கலாசார் ரசிகர்களையும் கொஞ்சம் மனதில் கொள்ளலாம். 18-ஆம் தேதி மாலை பெய்த மழையில் தண்ணீர் பல இடங்களில் ஒழுகியது.), வாகனச் சத்தம் அதிகம் கேட்கும் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் போன்ற இடங்களில் ஆடியோ சிஸ்டம் மாறினால் பாடகர்களுக்கு பாடும் அனுபவமும், கேட்பவர்களுக்கு ரசிக்கும் அனுபவமும் இன்னும் உயர்வாய் அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரத் கலாசாரில் நடந்த மேற்கூறிய கச்சேரியில், ச்ஷாங்கைப் புகழ்ந்து பேசியவர் "வருடத்திற்கு வருடம் திருவிக்கிரம அவதாரம் போல ச்ஷாங்கின் ஆற்றல் வளர்ந்து கொண்டே வருகிறது...blablabla...", என்ற போது, அரியக்குடியைப் பற்றிய anec-dote-தான் நினைவிற்கு வந்தது. அரியக்குடியிடம் ஒரு ரசிகர்/போ்ஷகர் (patron) "போன வரு்ஷத்தைவிட இந்த வருடம் உங்க சங்கீதம் நல்ல விருத்தி அடைஞ்சிருக்கு" என்றாராம். அதற்கு அரியக்குடியின் பதில், "இவ்விடத்தில் வித்தை அப்படியேதான் இருக்கு அவ்விடத்தில்தான் கேட்கும் ஞானம் விருத்தி அகியிருக்கு", என்றாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Back on track to The Hindu Suppliment....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்து (சில) விமர்சனங்கள் படிக்கும் போது எழும் சில கேள்விகள் (கௌரி ராம்நாரயண், சுலோசனா பட்டாபிராமன், லலிதா கிருஷ்ணன் போன்றோரின் விமர்சனங்கள் தெளிவான கருத்துக்களுடனேயே இருக்கின்றன. பின் வரும் என் கேள்விகள் மற்ற "எங்க ஆத்து விமர்சகரும் கச்சேரிக்கு போனார்" வகை விமர்சகர்களுக்கு)....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"Violin support was just adequate", "Radha Sundaresan on the violin provided satisfactory accompaniment", என்ற வரிகளில் adequate, satisfactory-க்கு எல்லாம் என்ன அளவுகோல்? "Kumbakonam Ramakrishnan and Rangachari rendered a brief thani", என்பதைத் தவிர அவர்கள் வாசிப்பில் சொல்ல ஏதும் வி்ஷயம் இல்லையா? "It contained all the good elements of the raga swaroopa along with good imagination", ராக ஸ்வரூபத்தை வெளிக் கொணர்வதும், பாடகரின் கற்பனை வளத்தைக் காட்டுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன? "Her raga alapana and kalpanaswaras are worthy of mention" (அந்த கச்சேரியைப் பற்றிய விமர்சகரின் கருத்து என்பது அந்த வரிதான், சாஸ்திரத்துக்கு அக்கச்சேரியில் பாடிய பாடல்களுள் ஒன்று இரண்டை குணாவில் கமல் "மானே தேனே பொன்மானே" என்று தூவுவது போலத் தூவிவிட வேண்டியதுதான். தயாராகிவிட்டது ஓர் பதிப்பிற்குரிய விமர்சனம்!!!) என்று கூறும் அதே 10 வரி கட்டுரையில் இன்னொரு கச்சேரியை "sruthi and layam of US based xyz - disciple of abc - were not upto the mark" என்று கூறிவிட்டு அடுத்த கச்சேரியைப் பற்றி தனது அபிப்ராயத்தைக் (அபிப்ராயம் என்று நினைத்து இவர்கள் எழுதுவதில்லை. judgemental -ஆக, தக்க காரணம் ஏதும் கூறாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதுவதே இவர்கள் வழக்கமாய் இருக்கிறது.) கூறுகிறார். ஸ்ருதியும் லயமும் சரியில்லாத கச்சேரியை வேலை மெனக்கெட்டு விமர்சனம் செய்து, பாடியவரின் குருவையும் சடுதியில் இழுத்து....இது எல்லாம் தேவையா? இன்ன கச்சேரி இன்ன இன்ன காரணங்களால் "எனக்குப்" பிடித்தது அல்லது பிடிக்கவில்லை என்று கூறுவது விமர்சனத்திற்கு மிக்க அவசியம். முந்தைய வாக்கியத்தின் கீ-வோர்டு "எனக்கு". நன்றாக இருக்கிறது என்று விமர்சனம் செய்யும் கச்சேரியில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், அது கேட்பவரின் அனுபவம். நன்றாக இல்லை என்று கூறும் போதுதான் அதன் காரணங்களை பட்டியலிட வேண்டியது அவசியம் ஆகிறது. குறிப்பாக ஹிந்துவில் தொடர்ந்து விமர்சனம் செய்யும் எஸ்.வி.கெ, தன் தலையில் தானே அட்சதையைப் போட்டுக் கொண்டவர் என்று கூறுவார்களே, அந்த ரக விமர்சகர்களில் முதல் இடம் வகிப்பவர். விட்டால் விகடன் சினிமாவுக்கு மார்க் அளிப்பது போல் மார்க்கெல்லாம் போட்டு இவர் பாஸ் இவர் ஃபெயில் என்று கூறினாலும் கூறுவார். எப்படி ஐயா மார்க் போடுகிறீர்கள் என்று யார் அவரைக் கேட்பது? (நல்ல காலம் அவர் விமர்சனம் புதன்கிழமை சப்ளிமெண்டில் வரவில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி, நமக்கு ஏன் வீண் வம்பு. யாரோ எப்படியோ போகட்டும். என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவே நேரம் (இதனால் சொல்லாமல் சொல்லிக் கொள்வது யாதெனில் இக்கட்டுரைகள் விமர்சனங்கள் அல்ல. என் எண்ணங்களே. என் எண்ணங்கள் ஏன் உதித்தன என்பதை யோசிக்கும் பொழுது தக்க பதில் உதித்தால் எழுதுகிறேன், இல்லையேல் அவ்வெண்ணத்தைச் சொல்லாமல் விட்டுவிடுவதே க்்ஷேமம் என்று விட்டுவிடுகிறேன்) பற்றாத இக்கணத்தில் விமர்சனங்களுக்கு விமர்சனம் எழுதுவது அவசியம் இல்லாததால் நாம் சேலத்தில் அவதரித்து இருக்கும் செம்மங்குடி வாரிசைப் பற்றி (அடுத்த பதிவில்) எழுதுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9662309-113536742120687961?l=classical-music-review.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://classical-music-review.blogspot.com/feeds/113536742120687961/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9662309&amp;postID=113536742120687961' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113536742120687961'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113536742120687961'/><link rel='alternate' type='text/html' href='http://classical-music-review.blogspot.com/2005/12/blog-post_23.html' title='சில எண்ணங்கள்...'/><author><name>லலிதாராம்</name><uri>http://www.blogger.com/profile/01372586935352216447</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9662309.post-113526152935198030</id><published>2005-12-22T06:21:00.000-08:00</published><updated>2005-12-22T06:25:29.366-08:00</updated><title type='text'>முதல் நாள் புராணம் - மூன்றாவது நாளாக</title><content type='html'>&lt;span style="background: lightblue;color: red"&gt;Malladi Brothers @ Brahma Gana Sabha, 17/12/05&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மழை நன்றாக பெய்து கொண்டிருந்து போதும் மல்லாடி சகோதரர்களின் கச்சேரிக்கு கணிசமான அளவில் கூட்டம் வந்திருந்தது. இவர்களின் கச்சேரியை போன முறையே முத்ராவில் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் (நாலு மணி நேர கச்சேரியில் உமையாள்புரக்காரருடன் சேர்ந்து கலக்கினார்களாம்!), தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியவில்லை. மைசூர் மஞ்சுநாதும், திருச்சி சங்கரனும் பக்க வாத்யம் வாசிக்கிறார்கள் என்பதைப் பார்த்ததும், எந்த கச்சேரிக்கு செல்வது என்று ஹிந்துவின் நான்காம் பக்கத்தை வைத்துக் கொண்டு ஒரு மணி நேரம் போராடும் இன்ப அவஸ்தை இல்லாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;6.40-க்கு தோடியை சிறிய கீற்றாகக் காட்டி "ஏரா நாபை" வர்ணத்தை இரண்டு காலப்பிரமாணங்களில் பாடி கச்சேரியைத் தொடங்கினார்கள். இந்த வர்ணத்தில்தான் தோடியின் ஸ்வரூபத்தை எத்தனை அழகாக படம் பிடித்திருக்கிறார்கள்! எத்தனை விதமான பரிமாணங்கள்! ்ஷட்ஜமம் மற்றும் பஞ்சமத்தை வர்ஜமாக்கி (அதாவது இல்லாமல் ஆக்கி)  எத்தனை பிரயோகங்கள்! புதுக்கோட்டை பாணி மிருதங்க வாசிப்பில் முதன்மை வித்வானாகிய திருச்சி சங்கரனின் கரங்கள் அழகான வர்ணத்தை இன்னும் மெருகேற்றின. பாடகர் கீர்த்தனை பாடும் பொழுது, பெரும்பாலும் அனுபல்லவியில் மற்றும் சரணங்களில் கார்வைகள் கொடுப்பார், அக்கார்வைகளை இன்னும் மிளிரச் செய்யும் பொருட்டு சில சொற்கட்டுகளை மிருதங்கக்காரர் வாசிப்பார். அதில் சிலவற்றை 'டேக்கா கொடுப்பது' என்று குறிப்பிடுவது உண்டு. சங்கரனின் தனிச் சிறப்பு அவரது 'டேக்கா சொற்களில்' கேட்கும் நாதம். உமையாள்புரம் சிவராமனின் 'சாப்பு' எப்படிச் சிறப்பு வாய்ந்ததோ அத்தனை சிறப்பு சங்கரனின் டேக்காவிற்கும் உண்டு. ஆங்காங்கே ஒலித்த தவில் சொற்கட்டுகளும், சங்கதிகளில் போதும், பல்லவி - அனுபல்லவி - சரணம் transitions போது வாசிக்கப்பட்ட மோராக்களும், கச்சேரிக்கு தனி களையை அளித்தன. எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன்....சரி மீண்டும் மல்லாடிக்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மல்லாடி சகோதரர்களில், யார் ஸ்ர்ராமபிரசாத் யார் ரவி குமார் என்று (இவர்கள் ஊரில் எதுகையாய் ராமு-சோமு, ஹரி - கிரி, என்றெல்லாம் வைக்கும் ஃபா்ஷன் இன்னும் வரவில்லையோ? இப்படித்தான் என் நண்பர் ஒருவரின் முதல் மகனுக்கு வினீத் என்று பெயர் வைத்துவிட்டு இரண்டாவது பையனுக்கு நவநீத் என்று வைத்து இருக்கிறார். "பையனுக்கு "வெண்ணை-னு" பேரு வெச்சுருக்கியேடா வெண்ணை" என்று கேட்க வேண்டும் போல இருந்தது.) தெரியாத நிலையில், போன வருடம் மாம்பலம் சகோதரிகளைக் குறித்தது போல (இம்முறை தமிழில்)ம1, ம2 என்று குறித்துக் கொள்வோம். தோடியைத் தொடர்ந்து, வசந்தாவில், நல்ல விறுவிறுப்பான காலபிரமாணத்தில் 'வாடே வேங்கடாத்ரி' கல்பனை ஸ்வரங்களுடன் பாடப்பட்டது (அன்னமையா கீர்த்தனையோ?). இருவருக்கும் நல்ல குரல் வளம் அமைந்திருக்கிறது. ஸ்ருதி சுத்தமும், கமகங்களில் தெளிவும் மிளிர்கிறது. வசந்தாவைத் தொடர்ந்து தேவமனோஹரியை விஸ்தாரமாக ஆலாபனை செய்த ம1-க்கு நினத்த சங்கதிகள் எல்லாம் சாரீரத்தில் பேசுகின்றன. தேவமனோஹரி, சிலரால் மத்யமாவதியையும் சுத்த சாவேரியும் சேர்த்த கலவை போலப் பாடப்படுகிறது. அப்படியல்லாமல், அதற்கென தனி உருவம் கொடுத்து, வேறு ராகங்களின் சாயை தெரியாமல் கையாளப்பட்டதற்கு ம1-க்கு ஒரு சபாஷ்!! மைசூர் மஞ்சுநாத் நல்ல தேர்ந்த வயலின் வித்வான். 2003-இல் அவர் சகோதரர் நாகராஜுடன் சேர்ந்து நடத்திய டூயட் கச்சேரியில் வாசித்த காம்போஜி இன்னும் காதில் ஒலிக்கிறது. கர்நாடக மாநிலத்தில் முதல் நிலை வயலின் வித்வானாக சில காலமாகவே விளங்கி வரும் இவருக்கு சில சீஸன்களாக சென்னையிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இத்தனை சொன்ன பின்பு அவர் தேவமனோஹரி ஆலாபனையை எப்படி வாசித்திருப்பார் என்று சொல்லத்தான் வேண்டுமா? மிஸ்ர சாபுவில் அமைந்த "எவரிகை" பாடலை சாஹித்ய சுத்தமாய் பாடி விஸ்தாரமாய் ஸ்வரப்பிரஸ்தாரம் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கச்சேரி தொடங்கியதிலிருந்தே திருச்சி சங்கரனுக்கு அரங்கில் இருந்த ஒலிப்பெருக்கியில் திருப்தி ஏற்படவில்லை. பால்கனியில் உட்கார்ந்து இருந்த எனக்கு அவரது வலந்தலைப் பக்கத்தின் ஒலி அளவைவிட தொப்பி பக்கத்தின் ஒலி அளவு அதிகமாகக் கேட்டது. ரசிகரொருவர், மிருதங்கம் பாடகர் பாடுவதைவிட அதிகமாக ஒலிக்கிறது என்று முறையிடவும் இன்னும் குழப்பம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் மிருதங்கத்திலிருந்து கையை எடுத்த திருச்சி சங்கரனின் வேகத்தில் இருந்த கோபம் மின்னல் போல் வெட்டினாலும் அடுத்த நொடியிலேயே மறைந்ததையும் காண முடிந்தது. அவரே பாடச் சொல்லி கேட்டுக் கொண்டும், மைக் மேன் இங்கு வந்தால்தான் ஆயிற்று என்று அடம் பிடித்தனர் மல்லாடி சகோதரர்கள். இவை எல்லாம் நடந்த பத்து நிமிடங்களுக்குள்தான் என்றாலும், நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அதுவரை கேட்டிராத கிருதியான, மைசூர் சதாசிவ ராவின் "நினுவினா", பலஹம்ஸா ராகத்திலும், தீக்்ஷதரின் சாரங்கா ராகக் கிருதியான "அருணாசல நாதம்" short and sweet ஆலாபனைக்குப் பின்னும் பாடப்பட்டன. பல மத்யம கால கீர்த்தனைகளை ஆதி, ரூபகம், மிஸ்ர சாபு தாளங்களில் பாடி கச்சேரியை களை கட்ட வைத்து விட்ட நிலையில், கச்சேரியின் பிரதான ராகமாக முகாரியை ஆலாபனை செய்ய ஆரம்பித்தார் ம2. பைரவியின் சாயல் அரவேயில்லாமல், அற்புதமாய் இழைத்து இழைத்துப் பாடிய ம2, தார ஸ்தாயியில் கொஞ்சம் கஷ்டப்பட்டது போலவே தெரிந்தது. ஆங்காங்கே கொடுத்த கார்வைகள் மிளிர்ந்தாலும் அதனைத் தொடர்ந்து கொடுக்க முயன்ற பிருகாக்கள் கொஞ்சம் தேசலாகவே ஒலித்தன. மஞ்சுநாதின் ரெஸ்பானின்ஸில் இக்குறை நீக்கப் பெற்றது. நன்றாக உழைத்து இழைத்து பாடப்பட்ட ஆலாபனைக்குப் பின் "எந்த நின்னே" அல்லது "காரு பாரு" நல்ல விளம்ப காலத்தில் பாடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், விளம்ப காலத்தில், செம்மங்குடி என்றதும் நினைவிற்கு வரும் கிருதியான "க்்ஷீணமை" (some may feel itz other way around) பாடலை அவர் பாடுவதைவிட விளம்பமான காலபிரமாணத்தில் பாடினார்கள். நன்றாகத்தான் இருந்தது என்றாலும், செம்மங்குடிப் இப்பாடலைப் பாடுவது கேட்டுப் பழகிய காதுகளுக்கு இது அத்தனை ருசித்திருக்குமா என்பது சந்தேகமே. இது பாடகர்களின் குற்றமல்ல, கேட்பவர்களின் குற்றமே! "ஏதி ஜேஸின ஜகன் நாதுடு சிரமுன" என்ற இடத்தில் விஸ்தாரமான நிரவலும், ஸ்வரப் ப்ரஸ்தாரமும் அதனைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்து இருந்த தனி ஆவர்த்தனமும் இடம் பெற்றது. தனியில் தனியாகச் சொல்லும்படி இருந்தது சங்கரனின் "மிஸ்ர நடை". முதல் ரவுண்டிலேயே பலத்த அப்ளாசைப் பெற்ற சங்கரன், தொடர்ந்து வாசித்த ரவுண்டுகளிலும் குறைப்பிலும் வேறு சில கதிகளிலும் பேதம் செய்து வாசித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதான உருப்படியைத் தொடர்ந்து கமாஸ் ராகக் கிருதியான "இடது பதம் தூக்கி ஆடும்", காபியில் ஸ்லோகமும், கே.வி.என் புகழ், "ஜானகி ரமணா" பாடலும் பாடப்பட்டன. ரசிகர் குழாமிலிருந்து யாரோ சதாசிவ பிரம்மேந்திரரின் பாடலை வேண்டிக் "கத்த". 'சர்வம் பிரம்ம மயம்' ஹிந்துஸ்தானி பாணியில் தொடர்ந்தது. அதன் பின் பாடிய பாடல் 'ப்ரூஹி முகுந்தேதி'. இந்த பாடலில் இரண்டாவது வரி, எம்.எஸ் பாடியதை வைத்துப் பார்த்தால் 'ப்ரூஹி முகுந்தேதிதான்'. இவர்கள் 'பாஹி முகுந்தேதி' என்று பாடினார்கள். ஏதாவது பாட பேதமாக இருக்கும் என்று நினைத்தேன். கடைசியில் ஒரு சரணத்தில் 'நாராயண தீர்த்தரின்' பெயரும் வர, நான் உட்பட பல ரசிகர்கள் குழம்பினோம். சதாசிவ பிரம்மேந்திரரின் கிருதியில் நாராயண தீர்த்தர் எங்கிருந்து முளைத்தார் என்று. விசாரிக்க வேண்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;'ஜங்கார ஸ்ருதி செய்குவாள்' மெட்டில் அமைந்த 'தெலுங்கு கீர்த்தனையும் (நீ மாட)' (எதைப் பார்த்து எது அமைந்தது என்று நானறியேன்), சுருட்டியில் மங்களமும், மத்யமாவதியில் ஸ்லோகமும் கச்சேரியை அழகுற நிறைவு செய்தன. அப்புறம் மழையில் நான் பட்ட பாடுதான் நேற்றே பாடியாகிவிட்டதே!&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக என் முதல் நாள் புராணம் மூன்றாம் தவணையில் நிறைவு பெருகிறது!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9662309-113526152935198030?l=classical-music-review.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://classical-music-review.blogspot.com/feeds/113526152935198030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9662309&amp;postID=113526152935198030' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113526152935198030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113526152935198030'/><link rel='alternate' type='text/html' href='http://classical-music-review.blogspot.com/2005/12/blog-post_22.html' title='முதல் நாள் புராணம் - மூன்றாவது நாளாக'/><author><name>லலிதாராம்</name><uri>http://www.blogger.com/profile/01372586935352216447</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9662309.post-113522971359639471</id><published>2005-12-21T21:33:00.000-08:00</published><updated>2006-01-29T02:15:39.886-08:00</updated><title type='text'>இசை மழையும் அடை மழையும்</title><content type='html'>&lt;span style="background: lightblue; color: red"&gt;17&lt;sup&gt;th&lt;/sup&gt; December 2005 @ Brahma Gana Sabha, Jayanthi Kumaresh, Arjun Kumar and Sukanya, 4.30 P.M&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயந்தியின் கச்சேரி 4.00 மணிக்கு 4.30-க்கா என்று உறுதியாகத் தெரியாத நிலையில், சகேதராமனின் கச்சேரி முடியும் வரை இருக்காமல் முன்னரே கிளம்ப்பிவிட்டதை போன பதிவில் கூறியிருந்தேன். கச்சேரி 4.30 மணிக்குதான். 4.00 மணிக்கு சிவகாமி பெத்தாச்சி அரங்கிற்குச் சென்ற போது சுபாஷிணி பார்த்தசாரதி பைரவி பாடிக் கொண்டிருந்தார். இன்னும் அரை மணி நேரம் இருக்கையில், காண்டீன் பக்கம் போய் ஃபில்டர் காபி சாப்பிடலாம் என்று பார்த்தால், 'காண்டீன்' என்று பலகை இருந்த புல் வெளி ஆவினங்களுக்குரிய காண்டீனாய் விளங்கியது. (மழை பேய்து கொண்டிருந்ததால் அரங்கின் பின்புறம் காண்டீன் மாற்றியிருக்கிறார்கள். ஜெயந்தி குமரேஷின் கச்சேரி முடிந்த பின் படையெடுத்த கூட்டத்தை பின் தொடர்ந்த போதுதான் எனக்கு விஷயம் விளங்கியது.) காபி கிடைக்காத நிலையில் துக்கடாவில் சுபாஷிணி காபி ராகத்தைத் தொடங்க அரங்கினுள் நுழைந்தேன். வழக்கம் போல 'என்ன தவம் செய்தனை'-தான் இங்கேயும். ஆனால், இந்த பாடல் யசோதையின் தவத்தைப் பற்றியதுதானா என்று சந்தேகமாக இருந்தது. காரணம், யசோதை கண்ணனை உரலில்தானே கட்டினார், சுபாஷிணியோ "குரலில் கட்டி வாய் பொத்தி, கண்ணனைக் கெஞ்ச வைத்த" 'யாரையோ' பற்றி பாடிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;4.35-க்கு ஸ்ருதியெல்லாம் சேர்த்து முடித்த ஜெயந்தி குமரேஷின் பார்ட்டி, திரை விலகியவுடன் வணக்கம் தெரிவிக்க, அரங்கில் கைதட்டல் ஒலித்தது. வெளியில் அடை மழை ஆரம்பித்து விட்ட நிலையில் இசை மழையைக் கேட்க பத்து பேராவது இருப்பார்களா என்று பார்த்த போது, சுமார் பத்து பேர் இருப்பது தெரிந்தது:-). பிலஹரி ராகத்தை அழகாகப் படம்பிடித்துக் காட்டிவிட்டு, நாராயண தீர்த்தரின் "பூரய மம காமம்" பாடலைத் தொடங்கினார் ஜெயந்தி. பெரும்பாலான நாராயண தீர்த்தர் தரங்கங்கள் துக்கடாவாக பாடப்படும் நிலையில், இவரின் முயற்சி இன்ப ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. (இன்னும் பல ஆச்சரியங்கள் தொடரவிருப்பதை அப்பொழுது நான் உணர்ந்திருக்கவில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;வீணை கமகங்களை இழைத்து வாசிக்க அற்புதமான வாத்தியம் எனினும், கீர்த்தனைகள் வாசிக்கும் பொழுது, சாஹித்யங்களை பாடகர் பாடும் பொழுது ஏற்படும் உணர்வை இக்கருவியில் கொண்டு வருவது கடினம். பல சமயங்களில், வாத்திய இசைகளில் சங்கதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சாஹித்யம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும். அன்று ஜெயந்தி வாசித்த அத்தனை கீர்த்தனைகளிலும் சாஹித்யத்தை தெளிவாகக் கேட்க முடிந்தது. மத்யம காலத்தில், விறுவிறுப்பான கற்பனை ஸ்வரங்களை ஜெயந்தி வாசித்த போதே கச்சேரி களை கட்டிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பிலஹரியைத் தொடர்ந்து, குமுதக்ரியாவில் தீக்ஷிதரின் 'அர்த்தநாரீஸ்வரம்' வாசிக்கப் போவதாக ஜெயந்தி அறிவித்தார். மும்மூர்த்திகளுள் வைணிகராக விளங்கிய தீக்ஷிதரின் கிருதியை ஜெயந்தி தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லையெனினும், வழக்கமாய் வரும் பந்துவராளியோ பூர்வி கல்யாணியோ இல்லாமல், பந்துவராளியின் அழகிய அரிய ஜன்யமான குமுதக்ரியாவை எடுத்துக் கொண்டது ஆச்சரியம் நம்பர் 2. ரூபக தாளத்தில் அமைந்த பாடலின் பல்லவியில் விஸ்தாரமான ஸ்வரப்ரஸ்தாரமும், குறைப்பும் செய்தார். அர்ஜுன் குமார் மற்றும் சுகன்யா (முதல் முறையாக ஒரு பெண் கட வித்வானைக் காண்கிறேன். நன்றாகவே வாசிக்கிறார்!).&lt;br /&gt;&lt;br /&gt;குமுதக்ரியாவைத் தொடர்ந்து வந்ததும் ஒரு ஆச்சரியம்தான்! முத்தையா பாகவதரின் 'தரு வர்ணத்தை' மூன்றாவது ஐட்டமாக வாசித்தார் ஜெயந்தி. தரு வர்ணம் எனப்படுவது யாதெனில் அந்த வர்ணத்தின் சிட்டை ச்வரங்களில் ச்வரம், ஜதி மற்றும் சாஹித்யம் மூன்றும் வரும். (இதை விளக்கிச் சொன்னதும் ஜெயந்திதான்). இரண்டு களை ஆதி தாளத்தில் விளம்ப கால வர்ணத்தின் மூலம் அழகிய கமாஸ் ராகம் அரங்கை நிறைத்தது. (இதில் ஆச்சரியம் என்ன என்று கேட்பவர்களுக்கு: வர்ணம் 99.99% கச்சேரியின் முதல் ஐட்டமாக பாட/வாசிக்கப்படும் விஷயம், இதை மூன்றாவது இடத்துக்கு தள்ளியதுதான் ஆச்சரியம். கச்சேரி முடிந்தபின், இதை மூன்றாவதாக வாசித்ததன் காரணம் கேட்ட போது, "It is a relatively slow piece. So, I was not sure how it would come out if I had started the concert with it", என்றார்.) வர்ணத்தை மூன்றாவதாக வாசித்து tradition-ஐ உடைத்துதான் ஆச்சரியம் என்றால், இப்பொழுது வர்ணத்தை வாசித்ததால் அதனைத் தொடர்ந்து 'விநாயகர் கீர்த்தனை' வாசிக்கிறேன் என்று மீண்டும் tradition-க்குத் தாவியது கொஞ்சம் comedy-ஆக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ரீதிகௌளை ஒரு அற்புத ரக்தி ராகம். எப்படி இழுத்தாலும் அழகாக வளரும் வகையில் அமைந்த ராகத்தை எம்.டி.ராமநாதன் எடுத்துக் கொண்டு அதி விளம்ப காலப்பிரமாணத்தில் 'ஜனனி நினுவினா' பாடினாலும் மிளிரும், ஜி.என்.பி எடுத்துக் கொண்டு, பல துரித சங்கதிகள் புகுத்தி "பரிபாலயமாம்" பாடினாலும் மிளிரும், மதுரை மணி மத்யம காலத்தில் "மதி சேகரன் மகனே"-வின் patesnded சர்வலக்ஹு ஸ்வரங்கள் பாடினாலும் களை கட்டிவிடும். அதை சப்-மெயின் ராகமாக தேர்ந்தெடுத்து ஆலாபனை செய்தார். ரீதிகௌளையின் சஞ்சாரங்களை மெல்ல மெல்ல விரிய வைத்த போது, ஆலாபனையில் 'வல்லினம்' 'மெல்லினம்' (அதாவது அழுத்த வேண்டிய இடத்தில் அழுத்தி, அமுக்க வேண்டிய இடத்தில் அமுக்கி வாசிப்பது) உணர்ந்து வாசிப்பது என்று சொல்வார்களே, அதன் பொருள் நன்றாக விளங்கியது. கீர்த்தனை வாசித்த விதத்தையும் அதனைத் தொடர்ந்த கல்பனை ஸ்வரங்களையும் பற்றி சொன்னால், இக்கட்டுரையை எழுதுவது 'லலிதா ராமா?, அல்லது கிளிப்பிள்ளையா என்று ஒரு பின்னூட்டு வருவது நிச்சயம்!&lt;br /&gt;&lt;br /&gt;ரீதிகௌளையை முடித்த பொழுது கையில் 45 நிமிடமே எஞ்சியிருந்த வேளையில் கச்சேரியின் பிரதான ராகமாக கல்யாணியை வாசிக்க ஆரம்பித்தார். கல்யாணியின் பல பரிமாணங்களை அரங்கிற்கு ஜெயந்தி அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த போது சம்பந்தமேயில்லாமல் முந்தைய நாள் ஃப்ளோரிடா ஸ்டேட் யூனிவர்சிடியிலிருந்து எங்கள் அலுவலகத்திற்கு வந்திருந்த ஃபொரபசர் 'textile composites'-ஐப் பற்றி கூறியது நினைவிற்கு வந்தது. பல விதமான இழைகளை வலிமைக்காக, நிறத்திற்காக, தோல் மேல் படும் உணர்விற்காக பல விதமான வகைகளை இணைப்பதிலிருந்து மெக்கானிகல் இஞ்சினியர்கள் நிறைய கற்று கொள்ளலாம் என்றார். ஜெயந்தி வாசித்த கல்யாணியின் இழைகளும் அப்படித்தான், பத்து நிமிட ஆலாபனை நிறைவை நெருங்கிய போது, இழைகள் அனைத்தும் சேர்க்கப்பட்டு ஒரு அழகிய, கோவை உருவாகியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தானம் நமது இசைக்குமட்டுமேயுரிய 'semi rythmic item' ஆகும். (ஹிந்துஸ்தானியிலும் தானம் போல சில ஐட்டங்கள் உண்டு என்பதால் நமது என்பதை 'இந்திய' என்று வைத்துக் கொள்வோம்). நிறைவான தானத்தை கேட்க அரிதாகிவிட்ட நிலையில், தானத்திற்கென்றே பெயர் பெற்ற வாத்தியத்தில் விஸ்தாரமான தானத்தை கீர்த்தனத்துக்கு முன் வாசித்தது மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கச்சேரி ஆரம்பித்து ஒரு தியாகராஜர் கீர்த்தனை கூட வாசிக்காத நிலையில், பிரதான கீர்த்தனையாக "ஏதாவுனரா" வாசிக்க போகிறார் என்று நினைத்தேன். அதிலும் ஆச்சரியம்தான்! அவர் தேர்ந்தெடுத்தது மற்றுமொரு தீக்க்ஷிதர் கீர்த்தனையான, மிஸ்ர சாபு தாளத்தில் அமைந்த கிருதியான "பஜரே ரே சித்த'. "தேவீம் சக்தி பீஜோத் பவ மாத்ருகார்ண சரீரிணீம்", என்ற வரியைத் தாண்டிச் செல்வதென்பது almost impossible. ஜெயந்தி மட்டும் விதிவிலக்கா என்ன?, அந்த இடத்தில் இழைத்து இழைத்து நிரவலும், இரண்டு காலங்களில் ஸ்வரமும் வாசித்து, குறைப்பில், மிருதங்க வித்வானுடனும், கட விதூஷியுடனும் சேர்ந்து நடத்திய "sawal javaab type" குறைப்பு மிகவும் ரசிக்கும்படியாகவும், ஜெயந்தியின் arithmetical skills-ஐ சபையோர் உணரும் வகையிலும் அமைந்தது. எத்தனைதான் இரண்டு களை ஆதி தாளத்தில் அமைந்த தனி ஆவர்தனத்தை  கேட்டாலும் அலுக்காது என்றாலும், ஒரு மாறுதலுக்காய், பல நாட்களுக்குப் பின் கேட்கக் கிடைத்த மிஸ்ர சாபு தனி ஆவர்த்தனம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல அரங்கில், அற்புதமாய் அமைந்த கச்சேரியில் ஒரே குறை, அது இரண்டு மணி நேரக் கச்சேரியாக இருந்ததுதான். இன்னும் ஒரு மணி நேரம் இருந்திருப்பின் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும், அதனைத் தொடர்ந்த கச்சேரியின் எனது fav. திருச்சி சங்கரன் வாசிக்க இருந்ததால் அத்தனை குறை தெரியவில்லை. மைசூர் மஞ்சுநாத், திருச்சி சங்கரன் புடை சூழ, மல்லாடி சகோதரர்கள் பாடிய கச்சேரி அற்புதமாக அமைந்தது. அதைப் பற்றி முடிந்தால் அடுத்த பதிவில்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட முக்கியம், இசை மழையில் நனைய வேண்டுமெனில் இந்த சீசனில் அடை மழையில் நனைந்துதான் ஆக வேண்டும் போலிருக்கிறது. சபா எல்லாம் டல்லடிக்கிறது. 17-ஆம் தேதி, 9.15-க்கு மழைக்கு ஒதுங்கிய நான், அவ்விடத்தைவிட்ட நகர 10.30 ஆகிவிட்டது (மழை அப்போதும் விடவில்லை). வருண பகவானின் கருணையை வரும் வருடங்களுக்கு கொஞ்சம் மிச்சம் வைத்துக் கொள்ள யாராவது சொன்னால் நன்றாயிருக்கும் (17-ஆம் தேதி கச்சேரியைப் பற்றி எழுதி முடிக்கவே 20-ஆம் தேதி ஆகிவிட்ட நிலையில், எல்லா கச்சேரிகளைப் பற்றியும் precise writing எழுதலாம் என்றால், அதற்கும் மனமில்லை...ஹும்....)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9662309-113522971359639471?l=classical-music-review.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://classical-music-review.blogspot.com/feeds/113522971359639471/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9662309&amp;postID=113522971359639471' title='53 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113522971359639471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113522971359639471'/><link rel='alternate' type='text/html' href='http://classical-music-review.blogspot.com/2005/12/blog-post.html' title='இசை மழையும் அடை மழையும்'/><author><name>லலிதாராம்</name><uri>http://www.blogger.com/profile/01372586935352216447</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>53</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9662309.post-113514294698192800</id><published>2005-12-20T21:18:00.000-08:00</published><updated>2005-12-20T21:29:07.006-08:00</updated><title type='text'>இசை விழா 2005 - தொடக்கம் இங்கே! தொடர்ச்சி?.......</title><content type='html'>&lt;span style="background: lightblue;color: red;"&gt;December 17 @ Bharathiya Vidhya Vhavan, 2.00 P.M&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு இந்த வலைப்பூவை ஆரம்பித்து, டிசம்பர் சீசனின் என் கச்சேரி (கேட்கும்) அனுபவங்களை பகிர்ந்து கொண்டு அதன் பின் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறை எதையோ இட்டு நிரப்பிய வண்ணம் என் எழுத்துப்பணி (அதிகம் எழுதாமல்) தமிழ் கூறும் நல்லுலகு போற்றும் படி தொடர்ந்து வருகிறது. இந்நிலையை மாற்றி, அடிக்கடி எழுதி, எழுத்துலகை துயரத்தில் ஆழ்த்த எண்ணம் இருப்பினும், அவ்வெண்ணத்தை அழுத்தும் வகையில் என் சோம்பேறித்தனம் இருந்து வருகிறது. எல்லோருக்கும் வருடத்திற்கு இரண்டு வாரங்கள் விடுமுறை கிடைப்பது கண்டு, 'எனக்கும் விடுமுறை வேண்டும்', என்று சோம்பலும் கேட்க, 'சரி, முயற்சி செய்கிறேன்', என்று நானும் கூறிவிட்டேன். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேனா என்பது மார்கழியில் 'எல்லே இலங்கிளியே'-வுக்கு உரிய நாள் வருவதற்குள் தெரிந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடம் போலவே, இம்முறையும் டிசம்பர் 17-ஆம் நாள் என் கச்சேரி கேட்கும் படலம் தொடங்கியது. ஆனால், வரலாறு காணாத மழையாலும், 'அம்மா' முயூசிக் அகாடமிக்கு வருவதால், நுங்கம்பாக்கத்தில் உருவான வாகன நெரிசலாலும், 'இனிதே' என்ற பதத்தை 'தொடங்கியது' என்ற பதத்திற்கு முன்னொட்டாக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடம் காயத்ரியின் வீணை இசை கேட்க விழைந்து வீட்டை விட்டு கிளம்பிய வேளை நன்றாக அமைந்ததால், சீசனும் அமர்க்களமாய் அமைந்தது. அதே செண்டிமெண்டை ஃபாலோ செய்யலாம் என்று பார்த்தால், காயத்ரியின் கச்சேரி 18-ஆம் தேதிதான் இருப்பது தெரிந்தது. சரி, வேறு வீணை கச்சேரி இருக்கிறதா என்று பார்த்த பொழுது, ஜெயந்தி குமரேஷின் கச்சேரி இருப்பது தெரிய வந்தது (ஒரு வீடு இரு வாசல் படத்தின் ஒரு வீடு, சாரி, ஒரு ஹீரோவான பிரபல வயலின் வித்வான் குமரேஷின் மனைவிதான் ஜெயந்தி). 2003-இல் இருந்து இவரது கச்சேரிக்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த போதும், ஏதோ ஏதோ காரணங்களால் செல்ல முடியவில்லை. இவரது இசையைக் கேட்க இதுதான் சமயம் என்று முடிவெடுத்தேன். 4.30 மணி கச்சேரிக்கு, 3.45 வரை வீட்டில் இருக்க இருப்பு கொள்ளாமல், 2.00 மணி வாக்கில் ஏதேனும் கச்சேரி தேறுமா என்று பார்த்த பொழுது, சாகேதராமன் 'கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்' பாரதிய வித்யா பவனில் நடத்தும் இசை விழாவில் பாடுவது தெரிந்தது. பெங்களூரில் இன்டெல் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார், நன்றாக பாடுகிறார், என்று எனக்கு நல்ல சங்கீதத்தை அறிமுகப்படுத்தி வைத்த ஒருவர் சொல்ல, முதலில் பாரதிய வித்யா பவன், அங்கிருந்து ஒரு முறுக்கு முறுக்கினால் 5 நிமிடத்தில் சிவகாமி பெத்தாச்சி ஹாலுக்கு சென்றுவிடலாம் என்று கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாகன நெரிசலை தாண்டி நான் கச்சேரிக்கு செல்வதற்குள் கச்சேரி ஆரம்பித்து, வலஜி ராகக் கீர்த்தனை (ஜாலந்தர) முடிந்து, 'பவ ரோக நிவாரிணி'-யில் நிரவல் போய்க் கொண்டிருந்தது. சாகேதராமனைப் பார்த்தால் 20 வயது இளைஞர் போலத்தான் தெரிகிறார். நல்ல இனிமையான சாரீரம். லால்குடியிடம் சிட்சையாம். ராகத்தின் ஜீவ ஸ்வரங்களை நன்று உணர்ந்து பாடுவதிலும், இழைத்து இழைத்து கமகங்களைக் கொடுப்பதிலும் குரு பரம்பரை தெளிவாய் தெரிகிறது. ஹாலின் நடு நாயகமாய் ஒரு பெரியவர் (சாகேதராமனின் தந்தையாக இருக்கலாம்), வருகிறவர்களை எல்லாம் வரவேற்று, அவ்வப்போது ஜோராக கைதட்டி, யாரேனும் பேசினால் அதட்டியபடி அமர்ந்திருந்தார். 30-40 பேர் அமரக் கூடிய அளவில் இருக்கும் மினி ஹால் கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நிரவலும் ஸ்வரமும் தங்கு தடையின்றி வலஜியின் ஸ்வரூபத்தை அரங்கில் பவனி வர வைத்தன. திடீர் என்று முடிவெடுத்துச் சென்றதால், பக்கவாத்யங்கள் யார் என்று கவனிக்க முடியவில்லை. வலஜியைப் பொருத்த மட்டில சாகேதராமனின் கற்பனைகளை நிழல் போலத் தொடர்ந்தது அந்த இளம் வயலின் வித்வானின் வில். மேடையில் இருந்த இளைஞர் கூட்டணியில், என்னைப் பெரிதும் கவர்ந்தது மிருதங்கம் வாசித்தவர்தான். நிறுத்தி நிதானமாய், பாடகர் பாட வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு வாசித்து அசத்தினார். பல்லவி to அனுபல்லவி, அனுபல்லவி to சரணம் transition அனைத்திலும் மோராக்கள் வைக்காவிடினும், வைத்த மோராக்கள் அத்தனையும் 'பளிச்'.&lt;br /&gt;&lt;br /&gt;வலஜியைத் தொடர்ந்து, தன்யாசியை sub-main ராகமாக எடுத்து ஆலாபனை செய்தார். முதல் பிடியிலேயே 'இன்ன ராகம் தான் பாடுகிறேன்' என்று முத்திரை பதித்து காட்டியது சிறப்பு. 'தோடி ஆரம்பிக்கறாரோ? இல்லையே பைரவி மாதிரி இருக்கே! ஓ! தன்யாசியா...', என்றெல்லாம் நம்மை சங்கடத்தில் ஆழ்த்தவில்லை. படிப் படியாய் விஸ்தாரம் செய்த ராகத்தில், கீழ் ஸ்தாயி ஷட்ஜமத்துக்கு கீழே செல்லும் பொழுது கொஞ்சம் சிரமப் பட்டது தெரிந்தது. (மழையும் பனியும் இருக்கும் காலத்தில் கீழ் ஸ்தாயியில் காத்து வராமல், குரல் கேட்பதே பெரிய விஷமல்லவா?).&lt;br /&gt;&lt;br /&gt;ஆலாபனை செய்யும் பொழுது அந்த ராகத்தில் தோன்றும் அனைத்து பிடிகளையும் காட்ட வேண்டும் என்று அவசியம் அல்ல. ஒரு lecture demonstration-இல் ஒரு ஆய்வாளர் கூறியது போல, ஆலாபனைக்கும் 'காலப் பிரமாணம்' உண்டு. அக்காலப் பிரமாணம், ஆலாபனையை தொடர்ந்து வரும் கீர்த்தனத்தை பொருத்தோ, அல்லது பல்லவியைப் பொருத்தோ அமையும். ஆலாபனையில் எந்த அளவு பாடுவதற்கு முக்கியம் தர வேண்டுமோ, அந்த அளவிற்கு எங்கெங்கே எந்தெந்த பிடியை நிறுத்த வேண்டும் என்பதும் முக்கியம். Many a times, the pause enhances the listening experience as it lets the listener grasp the imagination. Like the saying "hatred is the other side of love", probably, "silence is the other side of music". இவ்விஷயம் சாகேதராமனின் ஆலபனையில் மிளிர்ந்தாலும், வயலின் வித்வானின் ஆலாபனையில் சற்று குறைவாகத்தான் தென்பட்டது. தன்யாசி ராகத்தில் தனக்குத் தெரிந்ததையெல்லாம் அவசர அவரமாக நிரப்பியது போலத் தோன்றியது. இளைஞர்தானே, நாள்பட நாள்பட சூட்சமம் பிடிபட்டு விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்யாசி ஆலாபனைக்குப் பின், கேட்பதற்கரிய கீர்த்தனையான 'மீனலோசனி ப்ரோவ'-வைத் தொடங்கினார். பாடலின் பல்லவியின் எடுப்பு மிஸ்ர சாபு தாளத்தில் இரண்டரை இடம் தள்ளி அமைந்திருந்தது (misra chapu is generally rendered as a beat that can be split as 1.5+1+1, the pallavi of this krithi was offset by 2.5 beats) கவனத்தைக் கவர்ந்தது. பல்லவியில் அவர் போட்ட சங்கதிகளும், அதற்கு மிருதங்க வித்வான் கொடுத்த flourish-களும் பெரிதும் ரசிக்கும்படி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;2 மணி நேரக் கச்சேரிகளில் இரண்டு ராகம்தானே பாட முடியும். ஏற்கெனவே தன்யாசியை விஸ்தாரமாய் பாடிவிட்ட நிலையில், அன்றைய கச்சேரியின் பிரதான ராகத்தை தொடுவதற்கு முன், விறுவிறுப்பான காலப் பிரமாணத்தில் 'வர ராக லய' (செஞ்சு காம்போதி) பாடினார். அதனைத் தொடர்ந்து மோகன ராகத்தை பிரதான ராகமாக எடுத்துக் கொண்டு, அதில் பல அழகிய கோவைகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக, கமகங்களை இழைத்து இழைத்து பாடிய விதம் படு அற்புதம். மேல் ஸ்தாயியிலும், முன்பு குறிப்பிட்டது போல, மந்தர ஸ்தாயியிலும் சற்றே கஷ்டப்பட்டது போலத் தெரிந்தது. ராகத்தின் சஞ்சாரங்களையெல்லாம் அழகாக படம் பிடித்து காட்டியபின், மீண்டும் ஒருமுறை கீழ் ஷட்ஜமத்தில் தொடங்கி பிருகாக்கள் கொடுக்க முயன்றார் சாகேதராமன். முதல் தர பிருகாவானது, எத்தனை துரிதமாகப் பாடினாலும் அனைத்து ஸ்வரங்களையும் தெளிவாக வெளிப்படுத்தும். அதற்கு ஒரு மாற்று குறைந்த பிருகாக்கள் சற்றே தேசலாய் இருக்கும். இவரின் பிருகாக்கள் முதல் தரத்தை அடுத்த சீசனுக்குள் அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;வயலின் வித்வானுக்கு மோகன ராகம் என்பது 'திலீப் வெங்க்சர்கருக்கு லார்ட்ஸ் மைதானம்' விளங்கியது போல தோன்றியிருக்க வேண்டும். தன்யாசியில் விட்டதையெல்லாம் மோகனத்தில் அற்புதமாய் பிடித்துவிட்டார். ஆலாபனையைத் தொடர்ந்து, எப்பொழுதும் கேட்கக் கிடைக்கும் 'மோஹன ராமா' அல்லது 'நன்னு பாலிம்ப' என்று அரைத்த மாவை அரைக்காமல், அப்பாடல்களுக்கு இணையான அழகிய ஆனால் சற்றே அரிதான 'ரா ரா ராஜீவ லோசன' பாடினார். இவரது கீர்த்தனை பாடும் முறையில் இன்னொரு நல்ல விஷயம், பாடுவது நன்றாகப் புரிகிறது. இப்பாடலுக்கு சிட்டை ஸ்வரம் அமைத்தார்களா என்று தெரியவில்லை, ஆனால் அழகாய் அமைத்திருக்கிறார்கள். அனுபல்லவியைத் தொடர்ந்த சிட்டை ஸ்வரத்தை விளம்ப காலத்திலும், சரணத்தை அடுத்து வந்த சிட்டை ஸ்வரத்தை மத்யம காலத்திலும் பாடினார். (சிட்டை ஸ்வரம் பாடும் பொழுது கீழ் ஸ்தாயி ஷட்ஜமத்தைத் தொட்டு அதன் கீழ் இருந்த தைவதத்தைத் தொடும் இடத்தில் எல்லாம் ஸ்ருதி சற்றே விலகியபடியே இருந்தது.) கட்டுரையைப் படிக்கும் பொழுது நிறைகள் அளவிற்கு குறைகளும் இருப்பது போலத் தோன்றின் அது எனது குற்றமே. குறைகள் என்று குறிப்பிட்டது அனைத்தும் கச்சேரியின் 2% நேரத்திற்குக் கூட இருந்திருக்காது, மற்ற நேரங்களில் அவர் பாடியது அனைத்தும் நிறைவாகவே இருந்தது. அதற்கு மற்றுமொரு சான்றாக, அவரது நிரவலும் ஸ்வரமும் அமைந்தது. கல்பனை ஸ்வரங்களில் அவர் செய்த குறைப்பு கொஞ்சம் விவகாரம் கலந்து இருப்பினும், குறைப்பை முடித்து கடைசியில் வைக்க முயன்ற கோர்வையில் அவர் கோட்டை விட்டாரா அல்லது அதை கவனிப்பதில் நான் 'கோல்' விட்டேனா என்று தெரியவில்லை. 2 களை ஆதி தாளத்தில் ஆங்காங்கே கதி பேதங்களுடன் அற்புதமாய் தனி ஆவர்த்தனம் தொடர்ந்தது. அடுத்த முறை இந்த மிருதங்க வித்வானைப் பார்த்தால் விவரங்கள் விசாரிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற் கூறியவை எல்லாம் நடந்த வேளையில், என் அருகில் உட்கார்ந்து ஆரவாரமாய் ரசித்த கொண்டிருந்த மஹானுபாவரின் செல் ஃபோன் மூன்று முறை சிணுங்கி, ஒருமுறை அந்த மினி ஹாலுக்குள்ளேயே பேச ஆரம்பித்து, நான் ஒருமுறை முறைத்தும், மறுமுறை வெளியே சென்று பேசுங்குள் என்று பணிவாகக் கேட்டுக் கொண்டும், மூன்றாம் முறை ஃபோனை அணையுங்கள் என்று கடுப்பாய் கூறிய படலமும் இனிதே நிறைவேறியது. கைப்பேசியை அணைக்க வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத இந்த ஜென்மங்கள் உதிர்க்கும் சாபாஷ்களும் பலேக்களும் உள்ளத்தினின்று உதிக்கின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தனி ஆவர்தனத்துக்குப் பின் 'சுந்தர காண்டத்தில்' வரும் ஸ்லோகமான 'வைதேகி சஹித'-த்தை எடுத்துக் கொண்டு முதலில் சஹானாவிலும், பின்பு ஹமீர் கல்யாணியிலும் பாடினார். அதற்குள் எனக்கு அடுத்த கச்சேரிக்கு செல்ல நேரமாகிவிட கிளம்பிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்லோகத்தைக் கேட்ட வரையில் எனக்குத் தோன்றியது.......&lt;br /&gt;&lt;br /&gt;பாடிய நாலு வரியை அவ்வப்பொழுது ஓரக் கண்ணால் கீழுருந்த பேப்பரில் பார்ப்பது, ரசிகர்களின் பார்வைக்கு மட்டுமல்ல செவிகளுக்கும் சற்று கஷ்டமாகத்தான் இருந்தது. சஹானாவில் சில ஸ்ருதி சறுக்கல்கள் நிச்சயம் பேப்பரைப் பார்த்த பொழுதுதான் நிகழ்ந்தது. இரண்டு மூன்று முறை நிகழ்ந்ததால் இது தற்செயல் என்று ஒதுக்காமல், சாஹித்யத்தைக் பேப்பரில் காணும் பொழுது ஏற்படும் கவனச் சிதைவால் ஏற்பட்ட குறை என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த ஸ்லோகத்தைத்தான் பாட வேண்டும் என்று யாரும் சொல்லவில்லையே. ஸ்கூல் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் வரும் பெயர் வரிசையை ஸ்லோகமாகப் பாடினால் கூட யாரும் குறை கூறப் போவதில்லை. அரிய, அழகிய பாடல்களை எல்லாம் காகிதத்தின் துணையின்றி பாடிவிட்டு, இந்த 4 வரி ஸ்லோகத்த்கை பேப்பரில் எழுது அதை ஓரக் கண்ணால் பார்த்து மல்லுக்கு நிற்பானேன்?&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவை அடுத்த பதிவில் (எழுதினால்) வரும்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9662309-113514294698192800?l=classical-music-review.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://classical-music-review.blogspot.com/feeds/113514294698192800/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9662309&amp;postID=113514294698192800' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113514294698192800'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113514294698192800'/><link rel='alternate' type='text/html' href='http://classical-music-review.blogspot.com/2005/12/2005.html' title='இசை விழா 2005 - தொடக்கம் இங்கே! தொடர்ச்சி?.......'/><author><name>லலிதாராம்</name><uri>http://www.blogger.com/profile/01372586935352216447</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9662309.post-113147626267669663</id><published>2005-11-08T10:51:00.000-08:00</published><updated>2005-11-08T10:57:42.703-08:00</updated><title type='text'>வயலின் மேதை மைசூர் சௌடையா</title><content type='html'>இசை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமெனில், புவியியலின் ஒரு மூலையில் கிடக்கும் பெயரைச் சரித்திரம் படைக்க வைத்த பலரைக் காணமுடியும். கோனேரிராஜபுரம், அரியக்குடி, செம்மங்குடி, உமையாள்புரம் என்று இதற்கு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கு மாறாக, இசைச் சரித்திரத்தில் இடம்பிடித்து, பல தலைமுறைப் பாடகர்களுக்கு பக்க பலமாக விளங்கிய ஒருவர் இன்று புவியியலின் ஒரு பகுதியானதால், மக்களிடையில் பிரபலமாக விளங்குகிறார். மேற்கூறிய பீடிகையிலிருந்து, நான் குறிப்பிடும் கலைஞர் வயலின் மேதை மைசூர் சௌடையாதான் என்பதை நீங்கள் பெங்களூர்வாசியெனில் உணர்ந்திருப்பீர்கள். சௌடையா சாலையும், வயலின் வடிவில் அமைந்த சௌடையா ஹாலும் புழக்கத்தில் வைத்திருக்கும் மைசூர் சௌடையாவின் வாழ்வைப் பற்றிய பார்வையே இக்கட்டுரை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/6121/713/1600/chowdiah.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/6121/713/400/chowdiah.jpg" alt="" align="right" border="0" /&gt;&lt;/a&gt;1894-ஆம் வருடத்து புத்தாண்டு தினத்தை உலகமே கொண்டாடிக் கொண்டிருந்தது. அவ்வேளையில், காவேரிக் கரையையொட்டிய கர்நாடக மாநிலத்து நரசிபுரா தாலுகாவில் உள்ள திருமகூடலு கிராமத்தில் வசித்த அகஸ்திய கௌடா - சுந்தரம்மா தம்பதியினர், தங்கள் வீட்டில் பிறந்த ஆண் மகவான சௌடையாவை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். சமஸ்கிருதத்திலும் இசையிலும் தேர்ச்சி பெற்ற தகப்பனாருக்கும், நாட்டியத்தில் (அபிநய சாஸ்திரத்தில் தேர்ந்தவர் என்று அவரைப் பற்றிய குறிப்புகள் தெரிவிக்கின்றன) நல்ல பாண்டித்யம் பெற்றிருந்த தாயாருக்கும் பிறந்த சௌடையாவுக்கு இசையின் பால் நாட்டம் ஏற்பட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சௌடையாவின் முதல் இசை ஆசிரியையாக சுந்தரம்மா விளங்கினாலும், மற்ற குழந்தைகளைப் போல சௌடையாவும், தனது கிராமத்திலிருந்து காவேரியின் கிளை நதியான கபில நதியைத் தினமும் கடந்து சென்று பள்ளிக்குச் சென்று வந்தார். பள்ளிப் படிப்பைவிட இசையின் பால் நாட்டம் அதிகம் கொண்டிருந்த இளம் சௌடையாவின் ஒன்பதாவது வயதில் நடந்த நிகழ்ச்சி அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். வழக்கம் போல பள்ளிக்குச் செல்ல வேண்டி, கபில நதியின் கரையில் படகுக்காக காத்திருந்த வேளையில், அவ்வூர் மடத்தைச் சேர்ந்த ஆச்சாரியரும் அங்கு காத்திருந்தார். படகு வர தாமதமானதும், சிறுவனுக்கும் ஆச்சாரியருக்கும் உரையாடல் தொடங்கியது. அவ்வுரையாடலின் மூலம் சிறுவன் சௌடையாவிற்குப் பள்ளிக்கூடம் செல்வதில் நாட்டமில்லாததை உணர்ந்த ஆச்சாரியர், சௌடையாவின் கைரேகைகளை ஆராய்ந்த பின், சிறுவனின் கையில் இருந்த புத்தகங்களைப் பிடுங்கி கபிலை நதியில் எறிந்தார். " உனக்கு நாட்டமில்லாத ஏட்டுக் கல்வியால் எந்த பயனும் இராது. இசைத் துறையின் நீ செல்வாயெனில் பெரும் புகழடைவாய்", என்று கூறியதோடல்லாமல் சௌடையாவின் கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு அவன் தாயிடம் சென்றார். பள்ளிக் கூடத்திற்குச் செல்லாமல் திரும்பி வரும் மகனைப் பார்த்து குழம்பியபடி, மகனுடன் வந்த ஆச்சாரியரை நமஸ்கரித்தார் சுந்தரம்மா. கபிலை நதிக் கரையின் நடந்தவற்றையெல்லாம் கூறி சௌடையாவின் புகழ் இசையால் இசைவுரும் என்பதைத் தன் கணிப்பாகக் கூறினார் ஆச்சாரியர். ஆச்சாரியரின் கணிப்பை சுந்தரம்மா முழுமையாக நம்பியதால், சௌடையாவின் பள்ளிப் படிப்பு அவரது ஒன்பதாவது வயதில் முடிவிற்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இசையையே வாழ்வாக்கிக் கொள்ளத் துடிக்கும் மகனுக்கு அவர் குடும்பத்தார் ஒருவரிடமே இசை கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இசைத் துறையில் இருந்த சௌடையாவின் ஒன்று விட்ட சகோதரரான பக்கண்ணா, தம் குடும்ப பெரியவர்களின் வார்த்தையைத் தட்ட இயலாமல் சௌடையாவிற்கு பாடம் சொல்ல ஆரம்பித்தார். சௌடையாவின் கூர் மதியைக் கண்டு கொண்ட பக்கண்ணாவிற்கு, தன்னை மிஞ்சிவிட தமது சிஷ்யனுக்கு அதிக நாள் பிடிக்காது என்பது புரிந்தது. இதனால் பொறாமை கொண்டு, சௌடையாவின் இசைப் பயிற்சியை நிறுத்த ஒரு உபாயம் செய்தார். அஹோபில மடத்திலிருந்து ஒரு பண்டிதரை ஏற்பாடு செய்து " சௌடையாவால் இசைத் துறையில் சோபிக்க முடியாது, வேறெதாவது துறையில் கவனம் செலுத்துவது நல்லது" என்று சோதிடம் சொல்ல வைத்தார். இதனால் சற்றும் மனம் தளராத சௌடையா, " எப்பாடு பட்டாவது இசைத் துறையில் முன்னேறிக் காட்டுவேன்" என்று சபதம் இட்டார். இதனால், பக்கண்ணாவின் சிக்ஷை முடிவிற்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கும் செல்லாமல், இசை பயில்வதையும் நிறுத்திவிட்ட சௌடையாவைக் கண்டு சுந்தரம்மா கவலையுற்றார். இந்நிலையில், சுந்தரம்மாவின் சகோதரரான சௌடையா (!), தம் மருமகனை அழைத்துப் போய், மைசூரில் ஆஸ்தான வித்வானாக விளங்கிய பிடாரம் கிருஷ்ணப்பாவிடம் சேர்ப்பதாக வாக்களித்தார். இதனால் 1910-ஆம் வருடம் தம் மாமாவுடன் மைசூரை நோக்கிப் பிரயாணித்தார் இளம் சௌடையா. அவரது 16-ஆவது வயதில் தொடங்கிய குரு-சிஷ்ய பாவம், 21 வருடங்கள் தொடர்ந்தது. முதலில் சிஷ்யனாக சேர்ந்த்த சௌடையா, சில ஆண்டுகளிலேயே குருவிற்குச் சமமாய் மேடையில் அமர்ந்து வாசிக்கும் பக்க வாத்தியக் கலைஞராய் தேர்ச்சி பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது குரலால் நாடெங்கும் புகழ் பெற்றிருந்த பிடாரம் கிருஷ்ணப்பா, வயலின் வாசிப்பதிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். 1901-ஆம் ஆண்டு நிகழ்ந்த அவரது கச்சேரி ஒன்றுக்கு உடன் வாசித்த திருக்கோடிக்காவல் கிருஷ்ணையரின் வாசிப்பே, இவரை வயலினில் தேர்ச்சி பெற உந்தியது என்பர். சௌடையாவின் குரல் வாய்பாட்டிற்கு தோதானதாக அமையாததை உணர்ந்த கிருஷ்ணப்பா, அவருக்கு வயலின் வாசிக்க கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல குரு கிடைக்க எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டுமோ அதே அளவு புண்ணியம், நல்ல சிஷ்யன் அமையவும் தேவைப்படும். அப்பேறினைப் பெற்றிருந்த கிருஷ்ணப்பாவிற்கு சௌடையாவின் மேல் தனிப்பட்ட முறையில் அளவு கடந்த அன்பிருப்பினும், தனது சிட்சையில் மிகவும் கண்டிப்பாகவே இருந்தார். கிருஷ்ணப்பாவின் குருகுலத்தில் பயின்ற அனைத்து மாணவர்களும் அதிகாலை நான்கு மணிக்குள் விழித்து, இசை வளத்தைப் பெருக்கிக் கொள்ள சாதகம் செய்வதுடன், தேக/மன அரோக்கியத்தைத் திடப்படுத்த உடற்பயிற்சி, பிராணாயமம், யோகா போன்றவைகளையிம் செய்தனர். "ஒரு நாளைக்கு குறைந்தது, 9-10 மணி நேரம் சாதகம் செய்ய வேண்டியிருக்கும். பல சமயங்களில் சாதகம் நள்ளிரவு வரை நீடிக்கும். எத்தனை நேரம் ஆனாலும், காலையில் நான்கு மணிக்கு எழுவதில் எந்த மாற்றமும் இருக்காது. பல சமயங்களில் போதுமான அளவு தூக்கம் இல்லாமல் தவித்திருக்கிறேன். எனது ஆரம்ப காலப் பயிற்சியில். சரளி வரிசை, ஜண்டை வரிசை, அலங்காரங்கள் போன்ற விஷயங்களை இயந்திர கதியில் கற்காமல், அவற்றின் பயன் உணர்ந்து பல் வேறு ராகங்களில் பல முறை சாதகம் செய்திருக்கிறேன். இப்பொழுதும் கூட எனது சாதகங்களில் இவ்விஷயங்களுக்கு இடம் பெரும்.", என்று சௌடையா தனது புகழின் உச்சியில் இருந்த பொழுது கொடுத்திருந்த பேட்டியில் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையின் அடிப்படைகளில் நல்ல தேர்ச்சி பெற்றுவிட்ட நிலையில், வாரம் ஒரு ராகம் என சௌடையாவை சாதகம் செய்யச் சொல்வார் கிருஷ்ணப்பா. அந்த ஒரு வாரத்தில், ராக ஆலாபனை, கீர்த்தனைகள், ஸ்வரப் ப்ரஸ்தாரம், தானம், பல்லவி இசைத்தல் போன்ற அனைத்தையும் வாசித்துப் பழக வேண்டுமென்பது அவரது ஆக்ஞை. ஒரு முறை, அந்த வார ராகமாக கரஹரப்ரியாவைத் தேர்வு செய்து வாசிக்கச் சொல்லியிருந்தார் பிடாரம் கிருஷ்ணப்பா. கிருஷ்ணப்பாவின் வீட்டு மாடியில் சௌடையா சாதகம் செய்து கொண்டிருக்க, கிருஷ்ணப்பா தனது நண்பர் ஒருவருடன் மும்முரமாய் உரையாடிக் கொண்டிருந்தார். கரஹரப்ரியாவை இரண்டு நாட்கள் வாசித்துவிட்ட நிலையில், குரு அருகில் இல்லையென நினைத்து, வேறொரு ராகத்தை வாசிக்க ஆரம்பித்தார் சௌடையா. அவரது போதாத காலம்,கிருஷ்ணப்பாவின் வாய் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தாலும், அவரது காதுகள் சிஷ்யரின் வாசிப்பை கவனித்தபடியே இருந்தன. ராகம் மாறியதும், சௌடையாவை கீழே அழைத்து " கரஹரப்ரியாவில் கரை கண்டுவிட்டாயா நீ? வேறொரு ராகத்தை வாசிக்க ஆரம்பித்துவிட்டாய்?" என்று கேட்டார். அம்புகள் போல சீறிய வார்த்தைகளால் தாக்கப்பட்டு கலங்கி நின்ற சௌடையாவைப் பார்த்து, "போ! கரஹரப்ரியாவை வாசி", என்று பணித்தார். மன வருதத்துடன் சென்ற சௌடையாவின் வயலினிலிருந்து கரஹரப்ரியாவின் பல புதிய பரிமாணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பவனி வர ஆரம்பித்தன. சற்றைக்கெல்லாம், பிடாரம் கிருஷ்ணப்பா மாடிக்கு விரைந்து வந்து சிஷ்யனை மனதாரப் பாராட்டி, " இசை என்பது ஒரு தவம். அவ்வேள்வியில் 'நான்' என்ற எண்ணத்தை ஒழித்து, நம்மை மறந்த நிலையில் ஒன்றரக் கலக்கும் பொழுதுதான், இசையின் உண்மையான அழகு வெளிப்படுகிறது. உனது நன்மைக்காகத்தான் கடிந்து கொண்டேன்", என்றார் நா தழுதழுக்க.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பைப் பொழிவதில் தந்தையைப் போய் விளங்கினாலும், கிருஷ்ணப்பாவின் பாராட்டைப் பெற கடின உழைப்புத் தேவைப்பட்டது. கிருஷ்ணப்பாவின் இல்லத்திலேயே தங்கி கடுமையாக உழைத்ததின் பயனாய், சௌடையாவின் வில் வித்தை நல்ல தேர்ச்சியையடைந்தது. சிஷ்யனின் இசை முதிர்ச்சியை உணர்ந்த கிருஷ்ணப்பா, தனது கச்சேரிகளிலேயே அதை உபயோகப்படுத்திக் கொண்டார். சௌடையாவின் 21-ஆவது வயதில், மைசூரில் சிவகங்கை மடாதிபதியின் வருகையை கௌரவிக்கும் பொருட்டு நடந்த கிருஷ்ணப்பாவின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. அக்கச்சேரிக்கு வாசிக்க இருந்த வயலின் வித்வான் வராததால் அவரது இடத்தைப் பூர்த்தி செய்ய சௌடையாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. (வரலாற்றைப் பார்க்கும் பொழுது, அரியக்குடி, ஜி.என்.பி போன்ற பல ஜாம்பவான்களின் அரங்கேற்றம் எதிர்பாராத கணத்திலேயே அமைந்திருக்கின்றது!)அக்கச்சேரியில் மடாதிபதி மற்றும் பிடாரம் கிருஷ்ணப்பாவின் திருப்திக்குப் பாத்திரமாய் சௌடையாவின் வாசிப்பு அமைந்தது. அன்று தொடங்கி, கிருஷ்ணப்பாவின் கடைசி காலம் வரை பக்கபலமாகத் சௌடையாவின் வாசிப்பு திகழ்ந்தது. கிருஷ்ணப்பா, தனது மேடையிலேயே சிஷ்யருக்கு இடமளித்த போதும், தனது கண்டிப்பைச் சற்றும் தளர்த்தாதவராய் விளங்கினார். ஒருமுறை, மைசூர் பிரசன்ன சீதா ராம ஆலயத்தில் நடந்த கச்சேரியில் தவறுதலாய் சில அபஸ்வரங்கள் சௌடையாவின் வயலினிலிருந்து வெளிப்பட, கொதிப்படைந்த கிருஷ்ணப்பாவின் கைகள் சௌடையாவின் கன்னத்தைப் பதம் பார்த்தன. அதனைப் பொருட்படுத்தாது, புன்னகையை முகத்தில் வரவழைத்துக் கொண்டு கச்சேரியினைத் தொடர்ந்தார் சௌடையா. தனது செயலால் மனம் வருந்திய கிருஷ்ணப்பா "அடி பலமாக பட்டுவிட்டதா" என்று வினவ, "அதெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாம் என் நன்மைக்குத்தானே", என்றார் சௌடையா. (இதே போன்ற நிகழ்வு இராஜரத்னம் பிள்ளை போன்ற பல வித்வான்கள் வாழ்விலும் நடந்திருப்பதிலிருந்து அக்கால குருகுலவாசத்தைப் பற்றி தெரிய வருகிறது).&lt;br /&gt;&lt;br /&gt;1920-களில், பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு எளிதில் கேட்க கூடிய வகையில் நான்கு கட்டைக்கு குறையாமல் இருந்த பாடகரின் ஆதார ஸ்ருதி, படிப்படியாக குறைய ஆரம்பித்தது. 'sound amplification' பற்றியெல்லாம் நினைத்தும் பார்க்க முடியா அக்காலகட்டத்தில், வயலின் வித்வான்களுக்கு இந்த ஸ்ருதி குறைவு பெரிய பிரச்சனையாக இருந்தது. வயலினிலிருந்து வெளிப்படும் இசை எத்தனை நன்றாயிருப்பினும், அவ்விசை ரசிகரைச் சென்றடைய, அவ்விசையின் அளவு (volume) போதுமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் சௌடையா. அதனால், வயலினைப் பழது பார்ப்பதில் தேர்ந்த மைசூர் ரங்கப்பாவின் உதவியுடன் சப்த-தந்தி வயலினை உருவாக்கினார். இவரது ஏழு தந்தி வயலினில், வழக்கமாய் இருக்கும் நான்கு தந்திகளுள் முதல் மூன்றினை இரட்டித்து, நான்காவதை ஒற்றைத் தந்தியாகவே அமைத்திருக்கிறார். இரட்டிக்கப் பட்ட தந்திகளில், இரண்டாவது தந்தி, முதல் தந்தியின் ஸ்வரத்திலிருந்து சரியாக ஒரு ஸ்தாயி (octave) குறைவான ஸ்வரத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். இதன் மூலம், ரசிகர்களின் காதுகளுக்கு சௌடையாவின் இசை எட்டினாலும், இவ்வயிலினை இசைப்பது அத்தனை சுலபமான காரியம் அல்ல. வயலினை ஸ்ருதி சேர்க்கும் பொழுது இரட்டிக்கப்பட்ட தந்திகளின் ஸ்ருதி சரியாக ஒரு ஸ்தாயி வேறுபட வேண்டும். இதில் இம்மி பிசகினால்கூட வாசிப்பில் அபஸ்வரம் வெளிப்பட்டுவிடும். இவ்வயிலினை வாசிக்கும் பொழுது, வித்வானின் இடது கை விரல்கள் finger board-இல் வைக்கப்படும் பொழுது, இரண்டு தந்திகளுக்கு பொதுவான bridge-க்கு 100% parallel-ஆக இருந்தாக வேண்டும். அப்படியில்லையெனில், ஒரே ஸ்வரத்தில் வெவ்வேறு ஸ்தாயிகளில் கூட்டப்பட்டிருக்கும் இரு தந்திகளில் ஒரே ஸ்வரம் பேசாமல் போய்விடும். சப்த ஸ்வர தேவதைகளை மனதில் கொண்டே ஏழு தந்தி வயலினை சௌடையா உருவாக்கினார் என்கிறார் அவரது பிரதம சிஷ்யர் வி.சேதுராமையா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சௌடையாவின் கற்பனையில் உருவான ஏழு தந்தி வயலினில் பல காலம் சாதகம் செய்து நல்ல தேர்ச்சி பெற்றிருப்பினும், பாரம்பரியத்தில் ஊரிப்போன குருவிற்கு முன்னால் இதைக் காட்டத் தயங்கினார். ஒருமுறை, பிடாரம் கிருஷ்ணப்பாவின் குருவான வீணை சேஷண்ணாவின் வீட்டில் கிருஷ்ணப்பாவின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. கச்சேரியின் கடைப் பகுதியில், வழக்கமான நான்கு தந்தி வயலினை கீழே வைத்துவிட்டு, தனது கண்டுபிடிப்பான ஏழு தந்தி வயலினை வாசிக்க தனது குருவிடம் அனுமதி வேண்டினார் சௌடையா. இதனால் கோபமடைந்த கிருஷ்ணப்பா, "முதலில் நான்கு தந்தி வயலினில் முழுமையாகத் தேர்ச்சி பெறு. அப்புறம் புதிய கண்டுபிடிப்புகளில் எல்லாம் உன் கைவரிசையைக் காட்டலாம்", என்றார். மேடையில் நடந்து கொண்டிருந்தவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த வீணை சேஷண்ணா, விஷயத்தை விசாரிக்க, சௌடையா தனது கற்பனையில் உருவான புதிய வயலினை அவருக்கு விளக்கினார். புதிய வயலினிலிருந்து எழும் இசையைக் கேட்க ஆவலடைந்த சேஷண்ணா கிருஷ்ணப்பாவிடம், சௌடையாவை வாசிக்க அனுமதிக்குமாறு கோரினார். குருவின் கோரிக்கையை மீற முடியாத கிருஷ்ணப்பாவும், வேறு வழியின்றி இணங்கினார். அன்று ரசிகர்களின் காதில் விழ ஆரம்பித்த ஏழிசை விரைவில் மிகுந்த பிராபல்யத்தை அடைந்தது. பிடாரம் கிருஷ்ணப்பா, தன்னளவில், சப்த தந்தி வயலினை ஏற்க மறுத்தாலும், தனது குருவின் ஒப்புதலையும், மக்களின் ஆதரவையும் பெற்றுவிட்ட வயலினை தன் சிஷ்யன் வாசிப்பதற்கு தடையேதும் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பிடாரம் கிருஷ்ணப்பாவின் பக்க வாத்தியமாக தொடங்கிய சௌடையா, நாளடைவின் பக்கா வாத்தியக் கலைஞராக உருவானதும், அக்காலத்தில் பிரபலமாயிருந்த மற்ற சங்கீத வித்வான்களுக்கும் வாசிக்க ஆரம்பித்தார். கிருஷ்ணப்பாவின் மதிப்பைப் பெற்றிருந்த செம்பை வைத்தியநாத பாகவதருக்கு சௌடையா வாசிக்க ஏற்பாடு செய்தார் கிருஷ்ணப்பா. கூடிய விரைவில், சௌடையா வாசிக்காத செம்பைக் கச்சேரிகளைப் பார்ப்பதே அபூர்வம் என்ற நிலை ஏற்பட்டது. அந்நேரத்தில்தான் கர்நாடக இசையுலகின் முடிசூடா மன்னன் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், தனது புகழ்ப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தார். ஒருமுறை, சென்னையில் முனிசாமி நாயுடு ஏற்பாடு செய்திருந்த அரியக்குடியின் கச்சேரிக்கு வாசிக்க இருந்த வயலின் வித்வான் கடைசி நிமிடத்தில் வரமுடியாமல் போய்விட்டது. சௌடையா அப்பொழுது சென்னையில் இருந்ததால், அவர் உடன் வாசிக்கலாமா என்று முனிசாமி நாயுடு விண்ணப்பிக்க, அரியக்குடியும் உடனே ஒப்புக் கொண்டார். அழைப்பை ஏற்ற சௌடையா கச்சேரிக்கு வருவதற்குள், அரியக்குடி மிருதங்கத்தின் துணை மட்டும் கொண்டு அரை மணி நேரம் பாடியாகிவிட்டது. கச்சேரிக்கு தாமதமாக வந்த பொழுதும் அவர் வயலினிலிருந்த புறப்பட்ட இசை அரியக்குடி உட்பட அரங்கத்திலிருந்த ஒவ்வொரு மனத்தையும் சுண்டியிழுத்தது. இவ்வாறாக ஆரம்பித்த அரியக்குடி-சௌடையா கூட்டணி, விரைவில் புகழின் உச்சியை அடைந்து, அவர்கள் கச்சேரிக்கு புகைப்படத்துடன் துண்டு பிரசுரம் ஊரெங்கும் வினியோகிக்கும் அளவிற்கு உயர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விரைவில், மனோதர்மத்திற்கு பெயர் போன மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் சங்கீதமாகட்டும், அரியக்குடியின் மத்யம காலத்தை அடிக்கோடிட்டு அமைக்கப் பட்ட சங்கீதமாகட்டும், ஜி.என்.பி-யின் கற்பனையும் அதி துரித சங்கதிகள் நிறைந்த பிருகா மயமான சங்கீதமாகட்டும், மதுரை மணி ஐயரின் அழகிய ஸ்வரக் கோவைகளாகட்டும், ஆலத்தூர் சகோதரர்களின் லய விந்யாசங்களாகட்டும், அனைத்திற்கும் சௌடையாவின் வயலின் பக்கபலமாய் விளங்கியது. கச்சேரிகளில், பாடகரின் பலத்தையொட்டி தனது வாசிப்பை மாற்றிக் கொண்டு, அதே சமயத்தில் தனது தனித் தன்மையையும் விட்டுவிடாமல், பாடகரின் கற்பனையையும் மென்மேலும் பெருக்கக் கூடியதாக சௌடையாவின் பக்க வாத்யம் அமைந்தது எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கேட்ட கச்சேரிகளுள், 1957-இல் ஜி.என்.பி-க்கு வாசித்த கச்சேரியில் அவர் வாசித்திருக்கும் பந்துவராளியும், அக்கச்சேரியின் பிரதான ராகமான பைரவியும், மேற்கூறியதற்கு நல்ல சான்றாகக் கூறலாம். பக்க வாத்யக்காரரின் கற்பனையைக் கண்டு முகம் சுளிக்காமல் பாரட்டக்கூடிய ஜி.என்.பி பந்துவராளியை ஆரம்பித்து, நாகஸ்வரப் பாணியில் பல அழகிய கோவைகளை பிருகாக்களுடன் இணைத்து அளிக்க, அதனைத் தொடர்ந்து வாசித்த சௌடையா, அவரது பிருகா மழையைத் தொடர்ந்து, அவர் விட்ட இடத்திலிருந்து சில புதிய இடங்களைத் தொட்டு தனது ஆலாபனையை முடிக்க, வழக்கமாய் வயலின் ஆலாபனைக்கு பின்னால் கீர்த்தனையை ஆரம்பிக்கும் ஜி.என்.பி, சௌடையாவின் வாசிப்பினால் உந்தப்பட்டு இன்னும் சில புதிய பந்துவராளி பிரயோகங்களைப் பாடியிருக்கிறார். இதே போல, பாடகருக்கு பக்க பலமாகவும், அவரது கற்பனையைத் தூண்டும் விதமாகவும் அமைந்துள்ள கச்சேரிகளென பலவற்றைக் கூற முடிந்தாலும், குறிப்பிட்டு "இந்தியன் ·பைன் ஆர்ட்ஸில்" அரியக்குடி (1963 என்று நினைக்கிறேன்) இராமானுஜ ஐயங்காருக்கு வாசித்திருக்கும் கல்யாணியும், மதுரை மணி ஐயருக்காக ஒரு ரேடியோ கச்சேரியில் வாசித்திருக்கும் சங்கராபரணத்தையும் கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சௌடையாவின் நண்பரும், அவரது நினைவில் 1970-ஆம் ஆண்டு 12 நாட்கள் இசை விழா நடத்தியவரும், சௌடையா மெமோரியல் ஹால் எழுவதில் முக்கிய பங்கு வகித்தவரான ஸ்ரீ£காந்தையா, 1987-இல் வெளியான ஸ்ருதி பத்திரிகையில் ஒரு சுவாரசியமான சம்பவத்தை விவரித்துள்ளார். "பிடாரம் கிருஷ்ணப்பா கட்டிய ராமர் கோயிலில் நடக்கும் இசை விழாவில் ஆலத்தூர் சகோதரர்களின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. வயலின் வாசித்தவர் சௌடையா. மிருதங்கம் பாலக்காடு மணி ஐயர். லய விந்யாசங்களுக்கு பெயர் போன ஆலத்தூர் சகோதரர்கள் ஒரு அரிய தாளத்த்¢ல் நெருடலான பல்லவியைத் தொடங்கினார்கள். கச்சேரிக்கு முன்பு தயார் செய்து கொள்ள நேரம் ஒதுக்கி, ஒத்திகை பார்த்து ஒரு நெருடலான பல்லவியை, ஆலத்தூர் சகோதரர்கள் போன்ற தாள ஞானம் கொண்டவர்கள் பாடுவதென்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அப்பல்லவிக்கு, ஒத்திகை ஒன்றுமில்லாத பட்சத்தில், சௌடையாவின் வாசிப்பு அல்லது பதிலளிப்பு எவ்வாறாக இருக்கும் என்பதைக் காண நாங்கள் அனைவரும் ஆர்வமாக இருந்தோம். ஆலத்தூர் சகோதரர்கள் பல்லவியைப் பாடுகையில், சற்றும் பதட்டப்படாமல் அனு ஸ்வரங்களை வாசித்து பக்க வாத்யம் வாசித்த சௌடையா, சகோதரர்களுள் ஒருவரான சுப்புடு பல்லவியைப் பாடி முடித்ததும் கன கச்சிதமாக பல்லவியை எடுத்து வாசித்தார். அவரின் வாசிப்பைக் கேட்ட ரசிகர்கள் ஆரவாரித்து அரங்கத்தையே அதிர வைத்தனர். அன்றைய கச்சேரி அதுவரை கண்டிராத உச்சங்களைத் தொட்டது. அடுத்த நாள், அதே இடத்தில் நானும் சௌடையாவும் வேறொரு கச்சேரியைக் கேட்டபடி அமர்ந்திருந்தோம். சௌடையாவின் கைகள் பாடகரின் பாடலுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத தாளத்தை போட்டபடி இருந்தது. திடீர் என்று என்னிடம் திரும்பி, "நேற்று ஆலத்தூர் சகோதரர்கள் பாடிய தாளம் என்ன?", என்றார். " விளையாடதீர்கள் சௌடையா. சிங்கத்தின் குகைக்குச் சென்று, உங்கள் வாசிப்பால் சிங்கத்தை வசப்படுத்தியது போல அப்பல்லவியை வாசித்துவிட்டு, இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள்", என்றேன். " நான் விளையாடவில்லை. உண்மையில்தான் கேட்கிறேன். அது என்ன தாளம்?", என்றார். " தாளம் என்ன என்று தெரியாமல் எப்படி அந்த பல்லவியை அத்தனை பிரமாதமாக வாசித்தீர்கள்?", என்று நானும் விடாமல் கேள்வியைத் தொடர்ந்தேன். அதற்கு பதிலேதும் சொல்லாமல், கச்சேரியைக் கேட்க ஆரம்பித்துவிட்டார் சௌடையா. அக்கேள்விக்கான பதில், சௌடையாவின் உள்ளுணர்வு பெரிய iceberg-இன் நுனியைக் கண்டதுமே அதன் முழு உருவையும் அவர் மனதிற்குக் காட்டிவிடும் அற்புத சக்தியைப் பெற்றிருந்தது, என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை அரியக்குடி இராமனுஜ ஐயங்கார் ஒரு ராகத்தை ஆலாபனை செய்ய ஆரம்பித்தார், முதலில் பிரதி மத்யமத்தைத் தொட்டு, அங்கிருந்து நேராக தார ஸ்தாயி ரிஷபத்தைத் தொட்டார். அவரை நிழல் போலத் தொடர்ந்த சௌடையாவின் வாசிப்பைக் கேட்டு, ஐயங்காரிடமிருந்து கேட்பதற்கு அபூர்வமான 'பலே!', ஒன்று வெளிப்பட்டது. சௌடையா சிரித்துக் கொண்டே "என்ன, பந்துவராளி பாடறதா, வராளி பாடறதானு முடிவு பண்ணியாச்சா இல்லையா?", என்று ஒரு போடு போட்டார். "சௌடையாவிடம் ஒரு சாகசமும் பலிக்காது", என்று வெளிப்படையாகவே கூறினார் அரியக்குடி. அதற்கு சௌடையா, "நாற்பது வருஷமாக உடன் வாசிக்கிறேன், இது கூட தெரிவில்லை என்றால் எப்படி?", என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தனுக்கு சாரதியாய் விளங்கி போரில் வெற்றி பெற வைத்த பார்த்தசாரதிக்கு ஒப்பாய் சௌடையாவின் வாசிப்பு பேசப்பட்ட காலகட்டத்தில், பக்கவாத்தியக் கச்சேரிகளுடன் கூட தனிக் கச்சேரிகளும் செய்ய ஆரம்பித்தார். இவரது கச்சேரிகளுக்கு புதுக்கோட்டை தக்ஷ¢ணாமூர்த்தி பிள்ளை, பாலக்காடு மணி ஐயர் போன்றோர் பக்கவாத்யம் வாசித்திருக்கின்றனர். பல கச்சேரிகளில் வீணையை பக்க வாத்யமாகக் கொண்டு வாசித்துள்ளார். சுமார், எட்டு வருட காலத்திற்கு M.J.ஸ்ரீநிவாச ஐயங்காரும், அதன் பின் மைசூர் துரைசாமி ஐயங்காரும் இவருக்கு பக்கவாத்யம் வாசித்தனர். வயலின் வாசிப்பையே சுவாசமாகக் கொண்ட சௌடையா, சமயத்தில் ஒரே நாளில் மூன்று கச்சேரிகள் வாசித்த நாட்களும் இருந்திருப்பதாகத் தெரிகிறது. அவருடைய பாடாந்திரம் மிகப் பெரியதெனினும், அவரது கச்சேரிகளில் பிரபலமான ராகங்களும் கீர்த்தனைகளுமே நிறைந்திருக்கும். அவருடைய வாசிப்பிற்கு அதிக சன்மானம் கிடைத்த போதும், அதை ஒரு பொருட்டாக எண்ணாதவர் ஆவார். பல சமயங்களில், சில புகழ் மொழிகளே அவரை கச்சேரிகள் ஒப்புக் கொள்ள போதுமானதாயிருந்தன. அடுத்த சந்ததியினருக்கு இசையை எடுத்துச் செல்வதில் மிக்க மகிழ்ச்சியடைந்த சௌடையாவின் கச்சேரிகள், ஏதேனும் கல்லூரியில் நடந்த வண்ணமேயிருக்கும், அதிகம் சன்மானம் கொடுக்க முடியாத மாணவர்கள் இவரை ஒப்புவிக்க, அவரது சமீபத்தைய கச்சேரி அவர்களது கல்லூரியில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி கூறுதே போதுமானதாகயிருந்தது. அதே போல, மைசூரில் எந்த ஒரு கோயிலுக்கும், எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, சௌடையாவின் சங்கீதத்தால் அலங்கரிக்கப்பட எவ்வித தடையும் இருந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிகம் காணக்கிடைக்காத சௌடையாவின் மற்றொரு நல்ல குணம், தனக்கு பல வருடம் இளையவராகினும், நல்லன இருப்பின் அதனை வெளிக் கொணர தன்னால் இயன்றதைச் செய்வார். இன்னும் சொல்லப் போனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல பாடகர்களை மைசூருக்கு அறிமுகப்படுத்தி, மைசூருக்கும் தமிழகத்துக்கும் ஒரு பாலமாகவே அமைந்தார் எனலாம். எம்.எஸ்.சுப்புலட்சுமியை கர்நாடக மாநிலத்திற்கு அறிமுகப்படுத்தியவர் சௌடையாதான். "பிரபல பக்க வாத்தியக் கலைஞர் எனில், பெண்களுக்கு வாசிக்கக் கூடாது", என்ற அக்கால/இக்கால மரபைப் பின்பற்றாமல், பெங்களூர் சிவானந்தா தியேட்டரில் நடைப் பெற்ற எம்.எஸ்-இன் முதல் கர்நாடக மாநில கர்நாடக இசைக் கச்சேரியில் தொடங்கி, அதன் பின் நடந்த பல எம்.எஸ் கச்சேரிகளுக்கும் பக்க வாத்தியம் வாசித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மைசூர் அரண்மனைக்கு ஆடிஷனுக்குச் சென்றிருந்த ஒன்பது வயது மாலியின் திறனை பரிசோதிக்கக் கூடியிருந்த ஆஸ்தான வித்வான்களான மைசூர் வாசுதேவாச்சாரியார், முத்தையா பாகவதர் முதலானோருடன் சௌடையாவும் இருந்தார். அக்கச்சேரிக்கு வயலின் வாசித்தவர், சௌடையாவின் உறவினரான குருராஜப்பா. மாலியின் குழலின்று பிறந்த இசை வெள்ளத்தை மனதாறப் பாராட்டியதோடல்லாமல், பாதி கச்சேரியில், குருராஜப்பாவிற்கு பதிலாக தானே பக்க வாத்யம் வாசிக்க முன் வந்தார். அதன் பின், மாலிக்கு பல கச்சேரிகள் ஏற்பாடு செய்து கொடுத்து தானே பக்க வாத்யம் வாசிக்கவும் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்காலத்தில், மைசூர் சமஸ்தானத்தில் கச்சேரி செய்வதற்கென்று ஒரு dress-code இருந்தது. கட வித்வானான ஆலங்குடி இராமசந்திரனுக்கு வெற்றுடம்பாக கடம் வாசித்துதான் பழக்கம். இதனால், அரண்மனையில் வாசிக்கும் வாய்ப்பு தட்டிப் போய் கொண்டிருந்தது. இதனை அறிந்த சௌடையா, அரண்மனையின் ஒரு முக்கிய புள்ளியை அணுகி, "அரண்மனைக்கு என்று சில விதிமுறைகள் இருப்பது போல, கச்சேரிக்கும் சில விதிமுறைகள் உள்ளன. அதன் படி, கட வித்வான் மேல் சட்டையோ, கோட்டோ அணிய முடியாது. ஆலங்குடி இராமசந்திரன், இங்கு வாசிக்காமல் போனால் இழப்பு அவருக்கு அல்ல, சமஸ்தானத்துக்குதான்", என்று எடுத்துக் கூறி இராமசந்திரனின் கட வாசிப்பை அரண்மணையில் ஒலிக்கச் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இளகிய மனம் கொண்ட சௌடையா, மைசூரில் ஏற்பட்ட பஞ்சத்திற்கு வேண்டி நிவாரண நிதி திரட்ட, பல கச்சேரிகளை தன் முயற்சியால் ஏற்பாடு செய்தார். ஒருமுறை, செம்பை வைத்தியநாத பாகவதர் அவரது குல தெய்வத்திற்கு தங்க கவசம் செய்ய எண்ணினார். அவருக்கு அப்பொழுது இருந்த பண முடையால், அவ்வாசை நிறைவேறாமலே இருந்தது. இதனை உணர்ந்த சௌடையா, தான் தயாரித்த 'வாணி' திரைப்படத்தில், ஒரு கச்சேரிக் காட்சியை புகுத்தி, செம்பை வைத்தியநாத பாகவதரை வற்புறுத்தி நடிக்க வைத்து, தங்கக் கவசத்துக்குத் தேவைப்பட்ட பணத்தை தந்துதவினார். காஞ்சீபுரம் நயினா பிள்ளை, தனது கடைசி காலத்தில் கஷ்டப்பட்டதை அறிந்த சௌடையா, தான் அவருக்கு வாசித்திராத போதும், தனது செல்வாக்காலும் ஒரு ரெக்கார்டிங் கம்பெனியிடம் பேசி, தானும் புதுக்கோட்டை தக்ஷ¢ணாமூர்த்தி பிள்ளையும் பக்க வாத்தியம் வாசிக்க, நயினா பிள்ளையின் பாடலை பதிவு செய்ய ஏற்பாடு செய்து, அதற்கு சன்மானமாக பத்தாயிரம் ரூபாய் தரவும் கம்பெனியை இசைய வைத்தார். துருதிர்ஷ்டவசமாக இத்திட்டம் நிறைவேறுவதற்கு முன்பே நயினா பிள்ளையின் மறைவு நிகழ்ந்துவிட்டது. ஜி.என்.பி, ஒரு கடிதத்தில் "Chowdiah's incapacity for being mean"-ஐப் பற்றி எழுதியிருப்பதாக ஸ்ரீகாந்தையா கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சௌடையாவைப் பற்றிய எந்த ஒரு கட்டுரையும், அவருக்கு கார்களின் மேல் இருந்த காதலைப் பற்றி கூறாமல் நிறைவடையாது. வாழ்வின் குறுக்கு வழிகளைப் பற்றி அதிகம் அறியாத சௌடையாவை ஒரு குழந்தை கூட ஏமாற்றிவிடக் கூடும். அவரிடம் காரை விற்கச் சென்றவர்கள், அவர் அச்சமயத்தில் வைத்திருந்த காரைவிட இது பன் மடங்கு உயர்ந்தது என்று வானளாவ புகழ்ந்தால் போதும். உடனே, அக்காருக்கு தாவிவிடுவார். இதனால், பல மோசமான கார்களை வாங்கி, அந்தக் கார் செய்த குளருபடியால், பல கச்சேரிகளுக்கு தாமதமாகச் செல்லும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அவருடைய பழைய ஆஸ்டின் தட்டுத் தடுமாறி மைசூர் கோயம்பத்தூர் சாலையில் அடிக்கடி செல்வதைப் பார்த்த மைசூர் மஹாராஜா கிருஷ்ணராஜ உடையார், அவரது காரைப் பற்றி விசாரித்தார். இதனால் உற்சாகமடைந்த சௌடையா, தன் காரின் புகழை உலகளாவ புகழ்ந்த்தார். அதனைப் பொறுமையுடன் கேட்ட மஹாராஜா வெறும் தாம்பூலத்தைக் கொடுத்து விடையளித்தார். பின்னால்தான் தெரிந்தது, தனது காரின் உண்மை நிலையைக் கூறியிருப்பின், மஹாராஜா மனமுவந்து குறைந்த பட்சம் இருபதாயிரம் மதிப்புள்ள காரை பரிசளித்திருப்பார் என்று. வயலின் ஜாலம் புரிந்த அளவிற்கு அவரால் வார்த்தைகளில் ஜாலம் புரிய முடியவில்லை என்றுதான் கூற வேண்டும். சற்றும் யோசிக்காமல் மனதில் பட்டதை உடனுக்குடன் கூறி, பின்பு தான் கூறியதற்காக வருதத்தில் ஆழ்பவராக இருந்தார் சௌடையா. காலப் போக்கில், அவருடைய குழந்தை உள்ளத்தை உணர்ந்த இரசகர்களும் சக வித்வான்களும் அவருடைய பேச்சுக்களை அதிகம் பொருட்படுத்தாது, வாசிப்பையே மனதில் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;திரேதாயுகத்தில் வில் வித்தைக்கு இராமனெனில், துவாபர யுகத்தில் வில் வித்தைக்கு விஜயன். அவ்வகையில், கலியுகத்தில் வில் வித்தையில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த சௌடையாவின் வாழ்வில் அவரைத் தேடி வந்த கௌரவங்களும் பட்டங்களும் கணக்கிலடங்கா. 1939-ஆம் ஆண்டு மைசூர் ஆஸ்தான வித்வானாக கௌரவிக்கப்பட்ட சௌடையா, 1940-இல் மைசூர் சமஸ்தானத்தின் சங்கீத ரத்னாகர விருதைப் பெற்றார். 1957-ஆம் ஆண்டு, சங்கீத உலகின் ஆஸ்கரான 'சங்கீதி கலாநிதி' விருதினைப் பெற்றார். அவரது தலைமையுரையில், சக வித்வான்களுக்கிடையில் பரவியிருந்த பொறாமையையும், பக்க வாத்யக் கலைஞர்களும் பாடகர்களும் ஒருவருக்கொருவர் கச்சேரி மேடையில் பலப் பரிட்சை செய்வது போன்ற நிகழ்வுகளையும் அறவே கண்டித்து, ஒரு பக்க வாத்யக் கலைஞனின் இலக்கணத்தை அழகுற வெளிப்படுத்தியுள்ளார். அதே வருடத்தில் சங்கீத நாடக் அகாடமியின் விருதும். 1959-இல் ஜனாதிபதி விருதும் அவரை அலங்கரித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பக்க வாத்யக் கலைஞர், சோலோ ஆர்டிஸ்ட் போன்ற முகங்களுடன், வாகேயக்காரராகவும் அவருக்கு ஒரு முகம் இருந்தது. 'த்ரிமகுட' என்ற முத்திரையுடன் பல கீர்த்த்னைகள் மற்றும் தில்லானாக்களை இயற்றியுள்ளார். இவரது பாணியை நிலை நாட்டும் வகையில், வி.சேதுராமையா, கண்டதேவி அழகிரிசாமி, மைசூர் ராமரத்னம் போன்ற பல சிஷ்யர்கள் அமைந்து, இசைத் துறையில் பிரபலமடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைவான வாழ்வை வாழ்ந்த சௌடையா, 1967-ஆம் வருடம் ஜனவரி 19-ஆம் நாள், தனது 73-ஆவது வயதில் காலமானார். அச்சமயத்திலும் அவர் ஆறு கச்சேரிகளுக்கு ஒப்புக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மறைவிற்கு அடுத்த நாள், அவர் வாசிக்க இருந்த செம்பை வைத்தியநாத பாகவதரின் கச்சேரி, அவர் இல்லாமலேயே நிகழ்ந்தது. அவர் உடல் அங்கு இல்லை எனினும், அவர் நினைவு அங்கு நிறைந்திருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இக்கட்டுரைக்கு உபயோகப்படுத்தப்பட்ட நூல்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. மார்ச் 1987, ஸ்ருதி மாத இதழ்.&lt;br /&gt;2. இருபதாம் நூற்றாண்டில் இசைக் கலைஞர்கள், சு.ரா, அல்லையன்ஸ் பதிப்பகம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9662309-113147626267669663?l=classical-music-review.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://classical-music-review.blogspot.com/feeds/113147626267669663/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9662309&amp;postID=113147626267669663' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113147626267669663'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/113147626267669663'/><link rel='alternate' type='text/html' href='http://classical-music-review.blogspot.com/2005/11/blog-post.html' title='வயலின் மேதை மைசூர் சௌடையா'/><author><name>லலிதாராம்</name><uri>http://www.blogger.com/profile/01372586935352216447</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9662309.post-112833648144291159</id><published>2005-10-03T03:42:00.000-07:00</published><updated>2005-10-03T03:48:01.453-07:00</updated><title type='text'>ஜி.என்.பாலசுப்ரமணியம்</title><content type='html'>செப்டம்பர் 24-ஆம் தேதி, கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த இசைக் கருத்தரங்கில் ஜி.என்.பி-யைப் பற்றி பேச ஒரு வாய்ப்புக் கிட்டியது. அக்கருத்தரங்கில் வெளியான ஆய்வுக் கோவையில் இக்கட்டுரை பதிப்பிக்கப்பட்டுள்ளது. டபுள் லைன் ஸ்பேசிங்கில் ஐந்து பக்கத்திற்கு மிகாமல் கட்டுரை இருக்க வேண்டியிருந்த்தால் பல விஷயங்களை மேலோட்டமாகவே இக்கட்டுரை தொடுகிறது. By no standards this could be considered a research article. Just an attempt to show the tip of the ice berg.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஜி.என்.பாலசுப்ரமணியம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடக இசைக் கச்சேரி முறையை தமிழுக்கு ஒப்பிட்டோமெனில், அரியக்குடி இராமானுஜ ஐயங்காரின் கச்சேரிகள் தொல்காப்பியத்திற்கிணையாகும். தொல்காப்பியம் படித்தவர் பலரிருப்பினும், காலத்தை கடந்து நிற்கும் வெண்பாக்களையும் விருத்தங்களையும் அகவல்களையும் படைத்திருப்பவர் சிலரே. அதே போல், அரியக்குடி இராமானுஜர் ஐயங்கார் அமைத்துக் கொடுத்த கச்சேரி முறையை பின்பற்றியவர் பலரெனினும், இசையுலகில் என்றுமழியாச் சுவடை விட்டுச் சென்றவர்கள் மிகச் சிலரே. அவர்களுள் முதன்மையாக விளங்குபவர் 'ஜி.என்.பி' என்று பரவலாய் அழைக்கப்பெற்ற கூடலூர் நாராயணசாமி பாலசுப்ரமணியம்.&lt;br /&gt;ஜி.என்.பி என்னும் இசையுலக இளவரசரின் தோற்றம், ஜி.வி.நாராயணசாமி ஐயர் விசாலம் அம்மாள் தம்பதியினரின் வீட்டில், 1910-ஆம் வருடம் ஜூன் 6-ஆம் நாள் நிகழ்ந்தது. பார்த்தசாரதி சங்கீத சபையின் காரியதரிசியாகவும் ம்யூசிக் அகாடமியின் 'experts commitee' உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த நாராயணசாமி ஐயரின் வீட்டில், கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், பல்லடம் சஞ்சீவ ராவ், பூச்சி ஸ்ர்நிவாச ஐயங்கார் போன்ற சங்கீத ஜாம்பவான்களின் கூட்டம் எப்பொழுதும் குழுமியிருக்கும். இச்சூழலில் வளர்ந்த ஜி.என்.பி-யின் மனம் சங்கீதத்தின்பால் ஈர்க்கப்பட்டதில் அச்சரியமொன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1957-ஆம் வருடம் வெளியான 'My First Concert' என்ற ஜி.என்.பி-யின் கட்டுரையில் (தமிழாக்கம் பின்வருமாறு), " நான் பிறந்த நாள் முதல் எனைச் சுற்றியிருந்த சூழல் சங்கீத மயமாகவே இருந்தது. இதனால் எனது சங்கீத ஞானமும் அதன் பால் இருந்த ஈர்ப்பும் கிளைவிட்டு நாளுக்கு நாள் வளர்ந்தபடியிருந்தது. என் வீட்டிலிருந்தபடியே அற்புதமான சங்கீதத்தைக் கேட்கக்கூடிய வாய்ப்பு எனக்கு அமைந்திருந்தது. நல்ல சங்கீதத்தில் ஊறியதன் பயனாய் சஹானா, செஞ்சுருட்டி, பேகடா, சாவேரி போன்ற இராகங்களை பிழையின்றி பாட முடிந்தது. ஒரு குருவிடம் சென்று முறையாகப் பயிலாவிடினும் எனக்கு ஸ்வர ஞானம் சிறு வயதிலேயே கைகூடியது. இதற்குக் காரணம் பெரியோர்களின் ஆசியே என்பது என் கருத்து.', என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.வி.நாராயணசாமி ஐயர் தனது மகன் வழக்கறிஞராவதையே விரும்பினாரெனினும் ஜி.என்.பி-யிடமிருந்த சங்கீத தாகத்தை உணர்ந்தவராய் சங்கீத சிக்ஷையுமளித்தார். அந்நிலையில், அவர் குடியியிருந்த வீட்டில் இன்னொரு பகுதியில் வயலின் வித்வான் மதுரை சுப்ரமணிய ஐயர் குடியேர, அவரிடமும் சில காலம் ஜி.என்.பி சங்கீதம் பயின்றார்.&lt;br /&gt;1928-ஆம் வருடம், மயிலை கபாலீசுவரர் கோயில் வசந்த உத்சவத்தில் ஏற்பாடாகியிருந்த முசிறி சுப்ரமண்ய ஐயரின் கச்சேரி தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்தாகிவிட, அக்காலத்தில் இசைத் தோண்டில் ஆழ்திருந்த ஏ.கே.இராமசந்திர ஐயரும் மதுரை சுப்ரமணிய ஐயரும், நாராயணசாமி ஐயரிடம் ஜி.என்.பி-யின் கச்சேரிக்கு அனுமதியளிக்க வேண்டினர். நாராயணசாமி ஐயர் முதலில் சிறிது தயங்கினாலும், பின்பு அனுமதியளித்தார். சங்கீத வித்வானாவதையே இலட்சியமாய் கொண்டிருந்த ஜி.என்.பி-க்கு இவ்வாய்ப்பு மகிழ்வளித்தாலும், முசிறி சுப்ரமணிய ஐயர் போன்ற ஜாம்பவானின் இடத்தை தன்னால் நிரப்ப முடியமா, என்ற அச்சமும் கூடவேயிருந்தது. ஜி.என்.பி, மானசீக குருவாக உருவகித்திருந்த அரியக்குடி இராமனுஜ ஐயங்காரின் இசையுலகப் பயணம், திருப்பரங்குன்றத்தில் புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்தி பிள்ளை ஏற்பாடு செய்திருந்த மதுரை புஷ்பவனத்தின் கச்சேரி ரத்தான பொழுது, அங்கிருந்த இளைஞரான அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் அவ்வாய்ப்பைப் பயன்படுத்தி புகழின் உச்சியை அடைய வைத்த நிகழ்வை, மதுரை சுப்ரமண்ய ஐயர் எடுத்துரைத்தவுடன், ஜி.என்.பி-யின் தயக்கம் தளர்ந்து கச்சேரிக்குத் தயாரானார். அக்கச்சேரியைக் கேட்ட கே.எஸ்.முத்துராமன் தனது புத்தகத்தில், “ஜி.என்.பி பாடிய பந்துவராளியும், பைரவியும், அடாணாவும் ஒரு மஹாவித்வானின் இசை சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் நாட்டின", என்கிறார்.&lt;br /&gt;ஜி.என்.பி என்று நினைத்ததும் மனதில் முதலில் தோன்றுவது அவரின் கந்தர்வ குரல்தான். ஆழ்ந்த சங்கீத ஞானமும், அதீத கற்பனையும், அக்கற்பனையில் தோன்றுவதையெல்லாம் வெளிக்கொணரக் கூடிய அதிசயக் குரலும் கொண்ட அபூர்வ கலவையே ஜி.என்.பி. இக்கூற்றிற்கு அவர்தன் இளம் வயதில் கொடுத்திருக்கும் 'வாசுதேவயனி' கிராம்போன் ரிக்கார்டு ஒன்றே சான்று. வெளியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்றும் மக்களிடையில் பிரபலாமாக இருக்கும் இப்பாடலை வர்ணிக்க வார்த்தையில்லை. கல்யாணி இராகம் ஒரு பிரவாகம் போன்றது. அதன் முழு ஸ்வரூபமும் பல மணி நேரம் பாடினால் கூட முழுமையாய்க் கொண்டு வருவது துர்லபம். பத்து நிமிடத்திற்குள், ஒரு மின்னல் வேக ஆலாபனை, மத்யம கால கீர்த்தனை, ஸ்வர ப்ரஸ்தாரம் எல்லாம் பாடி, கேட்பவர் மனதில் நிறைவை ஏற்படுத்தியிருக்கும் ஜி.என்.பி-யின் அந்த ஒரு வெளியீடே அவரின் இசையாற்றலுக்கு தக்கச் சான்று.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/6121/713/1600/gnb_chowdiah_palani.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/6121/713/400/gnb_chowdiah_palani.jpg" alt="ஜி.என்.பி." align="right" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்று கேட்கக் கிடைக்கும் ஜி.என்.பி-யின் கச்சேரிகளை பலமுறை அலுக்காமல் கேட்டிருப்பவன் என்னும் முறையில், அவரது கச்சேரியைப் பற்றிய சில குறிப்புகள் பின் வருமாறு. கச்சேரிகளில் ‘களை கட்டுதல்’ என்றொரு பதம் உண்டு. அதை விளக்க முயல்வது வீண் முயற்சி. அதன் பொருள் உணர ஜி.என்.பி-யின் கச்சேரியின் முதல் உருப்படியைக் கேட்டால் போதும். அவரது கச்சேரிகளில் இன்று நமக்கு அதிகம் கேட்கக் கிடைப்பது அவரது கடைசி 10 வருட வாழ்வில் பாடிய கச்சேரிகளே. அவற்றை மட்டும் ஆராய்ந்தால், விறுவிறுப்பான வர்ணம் அல்லது ‘யோசனா’, ‘தெலிசி ராம’ போன்ற மின்னல் வேகக் கீர்த்தனை அல்லது ‘வாதாபி கணபதிம்’ போன்ற மத்யம காலக் கீர்த்தனை, அல்லது சஹானா போன்ற ரக்தி ராகத்தில் அமைந்த ‘ஈ வசுதா நீவண்டி’ போன்ற கீர்த்தனை, என்று பல வகைகளில் கச்சேரி தொடங்கும். எப்படித் தொடங்கினும் கச்சேரியைக் களை கட்டும்படிச் செய்வது அவரது தனிச் சிறப்பாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரியக்குடி இராமனுஜ ஐயங்காரின் பத்ததியின் படி மத்யம காலக் கீர்த்தனங்களே ஜி.என்.பி-யின் கச்சேரிகளில் நிறைந்திருக்கும். சவுக்க கால கீர்த்தனங்களும் கச்சேரியின் விறுவிறுப்பை குறைத்திடா வண்ணம் இடம் பெறும். ஜி.என்பி-யின் கற்பனையைப் பறைசாற்றும் வகையில் ஒரே இராகத்தின் ஆலாபனை கச்சேரிக்கு கச்சேரி அல்லது அவர் பாடும் கீர்த்தனத்திற்குக் கீர்த்தனம் மாறுபடும். அவரது ஆலாபனைகள் இரசிகரைக் குழப்பாமல், முதல் பிடியிலேயே இராக ஸ்வரூபத்தை தெளிவாகக் காட்டிவிடும். பல பிரபலமான இராகங்களில் புதிதாய் சில பிரயோகங்கள் பாடியிருப்பதும் (உ.தா கல்யாணி, காம்போஜி ராக ஆலாபனைகள்), அந்நாளில் புழக்கத்திலில்லா இராகங்களை புழக்கத்திற்கு கொண்டு வந்திருப்பதும் (உ.தா: மாளவி, செஞ்சு காம்போஜி, காபி நாராயணி, டக்கா, தீபகம்) ஜி.என்.பி-யின் பல இசைத் தொண்டுகளுள் குறிப்பிடத்தக்கவை. வாழ்நாள் முழுவதும் தன்னையொரு மாணவனாகவே கருதிக் கொண்ட ஜி.என்.பி, தனது கடைசி காலம் வரை புதிய கீர்த்தனங்கள் கற்றபடியிருந்தார். 'சோபில்லு', 'சரஸ சாம தான', 'மறுகேலரா', 'தாமதமேன்', 'ப்ரோசேவா', 'மா ரமணன்' போன்ற பாடல்களைப் பிரபலப் படுத்தியதுடன், பல கீர்த்தனங்களில் நிரவல், கல்பனை ஸ்வரம் பாடுவதிலும் பல புதுமைகள் புரிந்துள்ளார். உதாரணமாக, ‘ ஸ்ர் சுப்ரமண்யாய நமஸ்தே' பாடலில் பெரும்பான்மையானவர்கள் நிரவலுக்கு எடுத்துக் கொள்ளும் இடம் 'வாசவாதி சகல தேவ' என்பதாகும். ஜி.என்.பி-யின் நுண்ணறிவு 'தாபத்ரய ஹரண' என்னும் இடத்தில் 'தா பா' என்னும் ஸ்வராக்ஷரப் பிரயோகம் ஒளிந்திருப்பதைவுணர்ந்திருக்கிறது. இதே போல 'மீனாக்ஷி மேமுதம்', 'நிதி சால சுகமா' போன்ற பாடல் நிரவல்களிலும் ஜி.என்.பி-யின் கற்பனைத் திறன் உள்ளங்கை நெல்லிக்கனி. கல்பனை ஸ்வரங்கள் பாட அவர் தேர்ந்தெடுக்கும் இடத்தின் பொருத்தம் பலரின் பாராட்டைப் பெற்றவொன்று. ஜி.என்.பி-யின் சங்கீதத்தில் லயத்தில் உறுதியான பிடியிருப்பினும், ஸ்வரம் பாடும் பொழுது சர்வ லகு முறையையே பின்பற்றப் பட்டு இராக பாவம் கெடா வண்ணம் கவனமாகக் கையாளப்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.என்.பி-யின் இசையுலகிற்குப் பல புதிய பாதைகளை அமைத்துக் கொடுத்திருப்பினும், அவற்றுள் குறிப்பிடத்தக்கது 'ஸ்ருதி பேதம்' அல்லது 'கிரஹ பேதம்' ஆகும். நமது நாட்டின் இசை வரலாற்றைப் பார்க்கும் பொழுது ஒரு தாய் இராகத்தின் கிரஹ பேதத்திலிருந்து பிறந்தவையே பல இராகங்கள் என்று இலக்கியங்களின் மூலம் தெரிய வருகிறது. காலப் போக்கில் வழக்கொழிந்து போன இம்முறையைக் கச்சேரியில் ஜி.என்.பி பிரயோகித்த பொழுது பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து, ஜி.என்.பி-யின் செயலில் தகுந்த நியாயம் இருப்பதாக முத்தையா பாகவதர் தலைமையில் குழுமியிருந்த அறிஞர் குழு முடிவு கூறியது. ஓர் ராகத்தில் 'ஸ்ருதி பேதம்' செய்யும் பொழுது அதுவரை உருவாக்கிய பாவம் கெடாமல் இருப்பது அவசியம். இக்கம்பி மேல் நடக்கும் வித்தையில் தேர்ச்சி பெற்ற முதல் கலைஞர் ஜி.என்.பி எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.என்.பி-யின் கச்சேரிகளில் பிரதான உருப்படியாக 'ராகம் தானம் பல்லவி' பெரும்பாலும் இடம் பெறும். பெரும்பாலும் இப்பகுதிக்கு முன் 'நெனருஞ்சினானு', 'விடஜால', 'ராமசந்திரம் பாவயாமி' போன்ற அதி துரித கீர்த்தனை இடம் பெறும். கச்சேரி களை கட்டி, குரலும் நல்ல பதத்தை அடைந்திருக்கும் நிலையில், ஜி.என்.பி பல பகுதிகளாய் பிரித்துக் கொண்டு ஒரு இராகத்தை ஆலாபனம் செய்வது வழக்கம். ஓவியர், தான் வரையப் போகும் விஷயத்தை சில கீற்றுகளாய் முதலில் நிரப்புவது போல, விஸ்தரிக்கப்படும் இராகத்தின் ஸ்வரூபம் சில கீற்றுகளில் காட்டப்படும். இரண்டாம் கட்ட ஆலாபனையில் மந்திர ஸ்தாயியில் உள்ள பிரயோகங்களில் கவனம் செலுத்தப்பட்ட, நாதஸ்வரப் பாணியில் பல அழகிய ஸ்வரக் கோர்வைகள் கோக்கப்படும். மூன்றாம் கட்டமாக தார ஸ்தாயிப் பிரயோகங்கள் இடம் பெறும். அவரது சங்கீத வாழ்வின் உச்சியில் இருந்த சமயத்தில் தார ஸ்தாயி தைவதம், நிஷாதம் போன்ற எட்டாக் கனிகளைக்கூட எட்டிப்பிடிக்கும் அற்புதக் குரலாய் அவர் குரல் விளங்கியதென்று அவர் கச்சேரிகளைக் கேட்ட பலர் கூறுகின்றனர். தார ஸ்தாயி ப்ரயோகங்களைத் தொடர்ந்து குரலை முதலில் பம்பரமாய் சுழலவிட்டு, அதன் பின் ராட்டினமாய் மூன்று ஸ்தாயிகளிலும் சுழலவிட்டு, கடைசியில் ஓர் சூறாவளி போல் ராகத்தின் பல இடங்களில் சஞ்சரித்து கேட்பவர் மனதில், அந்த ராகத்தில் பாட இனி ஒன்றுமில்லை என்னும் நிறைவு ஏற்படும்படியான சூழலை உருவாக்கிவிடும். குறைந்த பட்சம் 40 நிமிட ஆலாபனைக்குப் பின் விஸ்தாரமான தானமும் அதன் பின் பல்லவியும் பாடுவார். பல்லவிக்கு எடுத்துக் கொள்ளும் இராகங்களில் கல்யாணி, தோடி, காம்போஜி, பைரவி போன்ற கன இராகங்கள், தேவ மனோஹரி, சஹானா, ஆந்தோளிகா போன்ற அதிகம் பாடப்படாத இராகங்கள் என்று பல வகைகளில் பாடியிருக்கிறார். பல்லவியமைப்பும் 2 களை, 4 களை போன்ற கடினமான அமைப்பில் பாடியிருப்பினும் பல ஒரு களை பல்லவிகளும் பாடியிருக்கிறார். ஆலாபனை, தானம், ஸ்வரப்ரஸ்தாரம் அனைத்துமே இராக ஸ்வரூபத்தை வெளிக் கொணரும் பொருட்டேயிருக்கும். பல்லவிக்கு ஸ்வரம் பாடும்பொழுது வரும் இராகமாலிகை ஸ்வரங்களுக்கு இரசிகர்களிடையில் அதீத வரவேற்பிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.என்.பி கச்சேரிகளில், பல்லவியைத் தொடர்ந்து வரும் பாடல்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பிருந்தது. பல இராகங்களில் அழகிய படப்பிடிப்பாய் விளங்கும் விருத்தங்கள், ஸ்லோகங்கள் தவிர அவரே மெட்டமைத்த 'திக்குத் தெரியாத காட்டில்', 'சொன்னதைச் செய்திட சாகசமா', போன்ற துக்கடாக்கள் இடம் பெறும், கச்சேரி முடியும் பொழுது பாமரரும் பண்டிதரும் மன நிறைவுடன் செல்வதென்பதுறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;சாரீர அமைப்பைப் போலவே சரீர அமைப்பும் பெற்றிருந்த ஜி.என்.பி, திரைப்படத்துறையில் 1934 முதல் 1937 வரை 'சகுந்தலை', 'ருக்மாங்கதன்', 'பாமா விஜயம்', 'உதயணன் வாசவதத்தா' போன்ற திரைப்படங்களில் நடித்தும் பாடியும் பெரும் பிராபல்யம் அடைந்தார். இவரது வாழ்வில் பல கௌரவங்களைப் பெற்றிருப்பினும் 1958-ஆம் வருடம் சங்கீத கலாநிதி பட்டத்தை இவருக்கு வழங்கி மியூசிக் அகாடெமி பெருமை தேடிக் கொண்டது. வாகேயக்காரராய் ஜி.என்.பி இசைக்கு ஆற்றிய தொண்டு அளப்பெரியதாகும். ‘சிவ சக்தி’, ‘அம்ருத பேஹாக்’ போன்ற அரிய இராகங்களிலிம், பிரபலமான இராகங்களில் சில அரிய பிரயோகங்கள் உபயோகித்தும், மிஸ்ர ஜம்பை போன்ற சுட்பமான தாள அமைப்பிலும் அவர் அமைத்திருக்கும் கீர்த்தனங்கள் இன்று பரவலாய் பாடப்படுகின்றன. ஜி.என்.பி, பாடகராக மட்டுமல்லாமல் சங்கீத ஆச்சாரியராகவும் மிகவும் பிரபலமாக இருந்தவராவார். அவரது பாணியை நிலை நிறுத்தும் வண்ணம் எம்.எல்.வி, திருச்சூர் இராமசந்திரன், தஞ்சாவூர் எஸ், கல்யாணராமன் போன்ற சிஷ்யர்களை இசையுலகிற்குத் தந்த பெருமையும் ஜி.என்.பி-யைச் சேரும். பாடகராய், வாகேயக்காரராய், குருவாய், நடிகராய் பல சாதனை புரிந்த ஜி.என்.பி-யின் வாழ்க்கை 55 வருட காலம் மட்டுமேயிருந்தது இசையுலகின் துர்பாக்யம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;- லலிதா ராம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9662309-112833648144291159?l=classical-music-review.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://classical-music-review.blogspot.com/feeds/112833648144291159/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9662309&amp;postID=112833648144291159' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/112833648144291159'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9662309/posts/default/112833648144291159'/><link rel='alternate' type='text/html' href='http://classical-music-review.blogspot.com/2005/10/blog-post.html' title='ஜி.என்.பாலசுப்ரமணியம்'/><author><name>லலிதாராம்</name><uri>http://www.blogger.com/profile/01372586935352216447</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9662309.post-112720974440874344</id><published>2005-09-20T02:46:00.000-07:00</published><updated>2005-09-20T02:49:04.426-07:00</updated><title type='text'>ஒரு கடிதம்</title><content type='html'>அன்புள்ள ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றாய்வு என்னும் கட்டிடத்தை ஒரு சாளரத்தின் வழியே எட்டிப் பார்க்க ஆரம்பித்திருக்கும் எங்கள் குழுவிற்கு, உங்களின் சந்திப்பு மிகுந்த உற்சாகத்தையளித்தது. எமது மின்னிதழை இன்னும் சிறப்பாகக் கொண்டு வர என்னென்ன செய்யலாம் என்று தாங்கள் கூறிய யோசனைகளிலிருந்து, 'கத்துக் குட்டிகள்தானே!' என்று எங்களை ஒதுக்காது, இதழ்களை முழுமையாகப் படித்திருப்பதும், 'இவர்கள் நன்றாக வளர வேண்டும்' என்று எங்கள் மேல் தங்களுக்கு இருக்கும் உண்மையான அக்கரையும் தெளிவாகத் தெரிந்தது. அதுவே எங்களை நெகிழவும் வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வெட்டாய்வு, தமிழிலக்கியம், சிந்து சமவெளி நாகரீகம், பிராமி எழுத்துக்கள், தினமணி தலையங்கங்கள், ஆதி சங்கரரின் காலம், காலத்தால் தொன்மையான கணேசர் சிற்பங்கள் என்று இருந்த சில மணி நேரத்திற்குள் பல விஷயங்களை எங்கள் காதுகளின் வழி மனதிற்குள் பதித்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தாலும், மனதின் மற்றொரு பகுதி வரலாற்றாய்வின் ஒரு ஜாம்பவானைச் சந்திக்கிறோம் என்ற பிரமிப்பிலிருந்து மீளமாட்டாமல் தவித்தபடியே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு.காம்-இன் புதிய பகுதியான விருந்தினர் பக்கத்திற்காக தங்களது கட்டுரை ஒன்றைத் தயங்கித் தயங்கி நாங்கள் கேட்க, எந்தவித தயக்கமும் இன்றி உடனடியாக ' Murugan in the Indus Script' என்ற ஆய்வுக் கட்டுரையை தந்தருளியது, அன்றைய மகிழ்ச்சிக்கெல்லாம் மகுடம் வைத்தது போல அமைந்தது. தங்களது கட்டுரையைப் படித்த பொழுது, ஒரு ஆய்வு செய்ய எத்தனை விஷயங்களை ஆராய வேண்டியிருக்கிறது என்னும் உண்மை புலப்பட்டது. சிந்து சம வெளி நாகரீகத்தைப் பற்றிய தெளிவான வரலாற்றறிவு, அக்காலத்தில் இருந்த எழுத்துக்கள் அல்லது படிமங்களைப் பற்றிய அறிவு, இவற்றால் தோன்றும் கருத்துக்களை வலுவாக்கத் தேவைப் படும் இலக்கியப் பின்புலம் மற்றும் சிற்பப் படிமங்கள் பற்றிய அறிவு, இவை அனைத்தும் இருந்தால் ஒழிய ஒரு புதிய கருத்தை நிறுவுவதென்பது சாத்தியமல்ல என்பதை அக்கட்டுரை உணர்த்தியது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களது கட்டுரையின் கடைப் பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் அடிக் குறிப்புகள் மற்றும் அவ்வாய்விற்குப் பயன்பட்ட நூல்களின் பட்டியல், ஆய்வின் நேர்மையையும், இவ்விஷயத்தைப் பற்றி மேலும் ஆழமாக அறிய விழைவோரின் மேல் தாங்களுக்கு இருக்கும் கரிசனத்தையும் தெள்ளென உணர்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையை ஆழ்ந்து படித்த பொழுது, மேற்கூறிய உணர்வுகளுடன் சில கேள்விகளும் எழுந்தன. அச்சந்தேகங்களை ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்ற தொல்லியல் கழகக் கருத்தரங்கத்தின் பொழுது தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தோம். தங்களது உடல்நிலை காரணமாக கருத்தரங்கிற்கு நீங்கள் வர இயலாமல் போனதையறிந்ததும் கவலையும் வருத்தமும் எங்கள் மனதை அப்பிக் கொண்டன. இம்மடல் தங்கள் கைக்குக் கிடைக்கும் வேளையின் உங்களது உடல் நலம் நன்கு தேறி, எங்களைச் சந்தித்த பொழுது உங்கள் உள்ளதினின்று வெளிப்பட்ட உற்சாகம் தங்கள் உடலுக்கும் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம். நேரில் கேட்கமுடியா சந்தேகங்களை இம்மடல் வழியே கேட்க விரும்பிகிறோம். எங்கள் கேள்விகளுக்கு விடையளித்து எங்கள் குழப்பங்களைப் போக்கினால் வரலாறு.காம் ஆசிரியர் குழுவும் வாசகர்களும் தன்யர்களாவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்களின் கட்டுரையின் முதல் பகுதியில் சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்த எழுத்துக்களைப் பற்றியும், உருவக் குறிப்பீடுகளைப் பற்றியும் விளக்கியிருக்கிறீர்கள். &lt;a href="http://www.varalaaru.com/images/jul05/murugan_first.jpg"&gt;sign 48&lt;/a&gt;-இல் குறிக்கப்பட்டுள்ள உருவம் பல அகழ்வாய்வுகளில் கிடைத்திருப்பதை வைத்து, சிந்து சமவெளி நாகரீகத்தில் ஒரு பிரபலமான உருவம் ஒன்றையே இது உணர்த்துகிறது என்பதை தெளிவுபடுத்திருக்கிறீர்கள். இவ்வுருவை ஆராய்ந்து, எகிப்திய படிமங்களுடன் ஒப்பிட்டு, அவ்வுரு இறந்தவரையோ அல்லது இறந்தவரின் ஆவியையோ குறிக்கும் பேயுருவம் என்று நிறுவியிருக்கிறீர்கள். கட்டுரையின் அடுத்த பகுதியில், சிந்து சமவெளி நாகரீகத்தின் காலத்துக்குப் பின் வந்த புராணங்கள் மற்றும் பாரம்பரியங்களில் பேயுருவாய் அல்லது எலும்புகள் மூலம் சித்தரிக்கப் பட்டிருக்கும் ததீசி முனிவர், காரைக்கால் அம்மையார், புத்தர், பிருங்கி முனிவர் ஆகியோரின் படிமங்களை 
